.

Thursday, August 31, 2017

தோழர் K.அசோகராஜனுக்கு வாழ்த்துக்கள்!!!


இன்று பணி ஓய்வு பெறும் நமது முன்னாள் மாநிலப்பொருளர்        
தோழர் K.அசோகராஜனுக்கு 
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழர் அசோகராஜன் கடலூரில் வசிக்கும்போது எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மாமா தோழர் புருஷோத்தமன் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் புதுவைத் தோழர் பிச்சுமணி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட தோழர்தான் அசோகராஜன்.

கடலூர் கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் தனது முதல் இலாக்காப் பணியை துவங்கியவர்.  அது தொடங்கி இன்று வரை நமது சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணிபுரிந்த அத் தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்...




Wednesday, August 30, 2017

நமது இலாக்காவில் பணிபுரியும் குரூப் B அதிகாரிகள், மற்றும் ஊழியர்களின் இல்லத் தொலைபேசி இணைப்புகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது போல் இரவு நேர அழைப்புகளுக்கும்  மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர அழைப்புகளுக்கும் இலவச அழைப்பு வழங்கிடக்கோரி நமது மத்திய சங்கம், கூட்டு ஆலோசனைக்குழுவில் (NJCM) கோரிக்கை வைத்திருந்தது. அதனடிப்படையில் மத்திய நிர்வாகம் இதற்கான உத்தரவிட்டுள்ளது. மத்திய சங்கத்திற்கு நன்றி..

Tuesday, August 29, 2017

SNEA அகில இந்திய செயலர் தோழர் செபாஸ்டின் மீது நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கையை கண்டித்து 29.8.2017 கடலூர் GM அலுவலக வாயிலில் snea சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தோழர்களுடன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.







நமது BSNL ஊழியர்களுக்கு., சோப்பு, துண்டு, டம்ளர், பேணா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில் ஆகிய பொருட்கள் வாங்கிட., பணமாக., நமது NFTE சங்கத்தின் முயற்சியால், ஆண்டிற்கு ரூ.500/-வழங்கப்பட்டு வந்தது. பல வருடமாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருவதால், விலைவாசி மாற்றத்திற்கு ஏற்ப, தொகையை அதிகப்படுத்த, மாநிலக் குழுவில் கோரிக்கை வைத்திருந்தோம். 

தற்போது., நமது கோரிக்கை ஏற்கப்பட்டு ரூ.750/- வழங்க உத்தரவு வெளியாகியுள்ளது. ஜனவரி 2018 முதல் உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும்.

Monday, August 28, 2017

சம வேலைக்கு சம ஊதியம்
நீதிமன்ற வழக்கு

நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட நமது TMTCLU சங்கத்தின்  சார்பில் போடப்பட்ட வழக்கு இன்று (28/08/2017 ) காலை விசாரனைக்கு வந்தது. அதனை விசாரித்த மதிப்பிற்குறிய நீதிபதி அவர்கள் உடனே சம்மந்தப்பட்ட  BSNL மாநில நிர்வாகத்திற்கும், கார்ப்பரேட் அலுவலகத்திற்கும் விசாரனைக்கு வருமாறு கடிதம் அனுப்ப உத்திரவிட்டுள்ளார்.  ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய மாற்றத்தில் நல்ல முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
   தோழமையுடன்
R.செல்வம்
 மாநில பொதுச் செயலர்

  TMTCLU.

Sunday, August 27, 2017

சம வேலைக்கு சம ஊதியம்

 நமது நிறுவனத்தில் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட நமது மாநிலச் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் சென்ற வாரம் வழக்கு தொட்டுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்  (வழக்கு எண் WP 22823/2017). மிக விரைவில் நல்ல முன்னேற்றம் வரும் என்பதனை மகிச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                               
              தோழமையுடன்
                                                                            R.செல்வம்

                                                      பொதுச் செயலர் TMTCLU

Saturday, August 26, 2017

கண்ணீர் அஞ்சலி
நமது கடலூர் வருவாய் பிரிவில் ( TRA ) பணிபுரியும் தோழியர் N.ஷியாமளா தேவி அவர்களின்  தந்தையார் ( 26-08-2017 ) இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால்  வாடும் அவரது குடுமபத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம்  ( 27-08-2017 ) நாளை காலை செம்மண்டலம், குண்டுசாலையிலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு பெண்ணை நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                                                                             by
                                                                                  NFTE- மாவட்டச் சங்கம், கடலூர்.
TMTCLU
மாவட்ட செயற்குழு  (23-08-2017)

நமது TMTCLU  மாவட்ட சங்கத்தின் சார்பில் 23-08-2017 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர்  தோழர் M.S.குமார் தலைமையில்  நடைபெற்றது. வரவேற்புரையாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் M.மணிகண்டன்  செயற்குவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். துவக்கவுரையாக மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜ்  உரையாற்றினார். பின்னர் விழுப்புரம் கிளைச் செயலர் தோழர் S. நடராஜன்  ,சிதம்பரம் கிளைச் செயலர் D.ரவிச்சந்திரன் , திண்டிவனம் Y.ஹாரூன் பாஷா கிளைச் செயலர், கடலூர் கிளைச் செயலர் R.பன்னீர்செல்வம் , கள்ளக்குறிச்சி கிளைச் செயலர் தோழர் S.மணி NFTE, மற்றும் மாநில துணை செயலர் தோழர் A.சுப்ரமணியன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் V.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் தோழர் P.ராஜா, மாவட்ட உதவிச் செயலர்  தோழர் கிருஷ்ணகுமார், மாவட்ட துணைத் தலைவர் தோழர் E.பாலமுருகன், சிதம்பரம் கிளைப் பொருளாளர் தோழர் K.சுந்தர், கடலூர் (O/D) கிளைச் செயலர் தோழர் E. விநாயகமூர்த்தி ஆகியோர் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

சிறப்புரையாக தோழர் R.செல்வம் மாநிலப் பொதுச் செயலரின் உரையில் நமது சங்கம் 30 நாட்கள் சம்பளத்திற்கு  நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளோம். அதுமட்டுமில்லாமல்   நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஓப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்திடவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று இச்செயற்குழுவின் வாயிலாக  தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். மற்றும் போனஸ் எல்லா மாவட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன் கூட்டியே கிடைத்திட மாநில நிர்வாகத்திற்கும் DCLCக்கும் NFTE சங்கத்தின் சார்பில் இணைந்து கடிதம் கொடுத்துள்ளோம் . ஆதலால்  நமது தொழிலாளர் நலனே என்ற குறிக்கோளோடு நாம் தொடர்ந்து பயனிக்கிறோம் என்று தமது கருத்தினை பதிவு செய்தார்.

சிறப்புரையாக தோழர் S. நடராஜன் மாநிலச் செயலர் NFTE  அவர்களின் உரையில் நமது NFTE-TMTCLU சங்கங்கள் தொடர்ந்து  தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மைகேற்ப ஊதியம் கிடைத்திட நாம் தாம் வழிவகை செய்தோம் .ஆனால் சிலர் தம்பட்டம் அடித்து கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்கள். ஆகவே தோழர்களே  NFTE-TMTCLU சங்கங்கள் இணைந்து தொழிலாளர்களின் நலனுக்காக தொடந்து நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.அதுமட்டுமில்லாமல்  நமது அடுத்த இலக்கு சம வேலைக்கு சம ஊதியம் கிடைத்திட போராட நாம் தயாராக வேண்டும். TMTCLU சங்கத்தினை பலப்படுத்துவோம்.


இறுதியாக நமது NFTE  மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் பேசுகையில் நமதுமாவட்டத்திலிருந்து  ஒரு கிளையை தவிர்த்து மற்ற அனைத்து கிளைகளிலிருந்து வந்திருந்த அனைவரையும் வெகுவாக பாராட்டியதோடு மட்டுமில்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரச்ச்னை வரும் போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக சரி செய்து வருகிறோம் என்றார். இந்த மாவட்டத்தில் நீங்கள் தான் பலம்பொருந்திய சங்கமாக மாற  வந்திருந்த அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார். இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் தோழர் V.கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.







தீர்மானங்கள்

v நமதுமாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2017 ஆம் ஆண்டிற்கான போனஸாக ரூ 7000/-ஐ வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தகாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்ய வேண்டும் இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v அனைத்து தொழிலாளருக்கும் அடையாள அட்டை வழங்கிட உடணடியாக உத்திரவிட வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v 19-01-2017 முதல் நிலுவை தொகையினை உடணடியாக  வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

v பணியிலிருந்து விடுபட்ட தோழர்களை மீண்டும் பணியில் உடணடியாக சேர்த்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v பணித்தன்மைக்கேற்ப ஊதியம்  வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்தின் உத்திரவை கறாராக அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

v டெலிகாம் டெக்னிசியன் இல்லாத தொலைபேசி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றிட இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 8ந் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டமும்  16-09-2017 அன்று மாவட்ட தலை நகரில் தர்ணா போராட்டமும் நடத்திட இச் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

       தோழமையுடன்
        TMTCLU,NFTE
மாவட்டச்சங்கங்கள்,
            கடலூர்.

Friday, August 25, 2017

கடலூர் தொலைபேசிக்கிளை கூட்டம்-23.8.2017
கடலூர் GM அலுவலக வளாகத்தில் 23.8.2017 மாலை, பல்வேறு தருணங்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றத் தோழர், தோழியர்களுக்கு தொலைபேசிக்கிளை சார்பில் பணி ஓய்வு பாராட்டுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் P.அன்பு தலைமை தாங்கிட, கிளைச்செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் துவக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் A.C.முகுந்தன், மாவட்ட உதவிச்செயலர் தோழர்  D.குழந்தைநாதன், GM அலுவலகச்செயலர் தோழர் S.இராஜேந்திரன், GM அலுவலக கிளைத்தலைவர் தோழர் K.சீனிவாசன் ஆகியோர் ஓய்வு பெற்ற தோழர்களை பாராட்டி, வாழ்த்திப்பேசினர். மேலும் நமது கூட்டணி சங்கம் SEWA சார்பில் அதன் மாவட்ட உதவி செயலர் தோழர் சுதாகர்ராஜ் வாழ்த்திப் பேசினார். மூத்தத் தோழர்கள் S.தமிழ்மணி, V.நீலகண்டன், P.ஜெயராமன் உள்ளிட்டத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.
மேலும் நமது மாநிலச்செயலர் தோழர் K.நடராஜன் சிறப்புரையாற்றினார். பின்னர் பணிஓய்வு பெற்ற தோழர்களுக்கு கிளையின் சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். பாராட்டு பெற்ற தோழியர் P.கமலா, தோழர் P.அய்யானாரப்பன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். தோழர் S.ரங்கநாதன் நன்றி தெரிவித்தார். 










Monday, August 21, 2017

19.8.2017 சிதம்பரத்தில் நடைபெற்ற பணி  ஒய்வு பாராட்டு விழா காட்சிகள்...........

கிளிக்....













Tuesday, August 15, 2017

TMTCLU சங்கம்
வெற்றிகரமான விழுப்புரம் கிளை மாநாடு
TMTCLU மாநிலப் பொருளாளரும், NFTE குடந்தை மாவட்டச் செயலாளருமான அருமைத் தோழர் விஜய் ஆரோக்கியராஜ் அவர்களின் அற்புதமான துவக்க உரை. விழுப்புரம் கொடியேற்றத்தில் காலை சலசலப்பையும் அந்தச் சலசலப்பை உண்டாக்க நினைத்தசிறியோர்க்கு ஞாபகம் செய்யும் வகையில் முழங்கிய சங்கநாதம் வருமாறு:
         ”AITUC அலுவலகத்தில் மாநாடு துவங்கும் முன் முதல் நிகழ்வாகத் தொலைபேசி அலுவலக வாயிலில் சங்கக் கொடியை உணர்வுபூர்வமாக ஏற்றினீர்கள்அதற்குத்தான் எத்தனை இடையூறுகளைத் தாண்ட வேண்டியிருந்ததுஆனால் அவலமும் ஆச்சரியமும் என்னவென்றால், நமது துறையைச் சார்ந்த தோழர்களும் சங்கங்களும் தொலைபேசியக வாயிலில் நாம் கொடியேற்றக்கூடாது என நிர்வாகத்திடம் பிரச்சனை செய்ததுதான். நமது உரிமைக்காக, கொடியேற்ற, ஆர்ப்பாட்டம் நடத்த, எதிர்ப்பைப் பதிவு செய்ய நாம் அரசை எதிர்த்துப் போராடியிருக்கிறோம்பெருமுதலாளிகளின் கார்பரேட் நிறுவனங்களில் சங்கத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை, அவர்களும் அதற்காகப் போராடுகிறார்கள். அதை நாம் பார்த்திருக்கிறோம்ஆனால் இங்கே விசித்திரம் தொழிலாளர்களே தொழிலாளர்களை எதிர்ப்பதுதான்ஆனாலும் நீங்கள் வெற்றிகரமாகக் கொடியேற்றி மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
         ஒப்பந்த ஊழியர்களுக்காக TMTCLU சங்கம் தொடர்ச்சியாகப் பிரச்சனை எடுத்துப் போராடுகிறோம்முதலாவது நாம் NFTE பேரியக்கத்தோடு ஒன்றிணைந்து பயணிக்கிறோம்.  NFTE மாநில சங்கத்தோடு CGM யை சந்திக்கிறோம்பிரச்சனைகளுக்குக் கடிதம் கொடுத்து விவாதிக்கிறோம்பல முன்னேற்றங்களை மாற்றங்களைப் பெற்றுத் தந்திருக்கிறோம்அதுபோலத்தான் NFTE மாவட்டச் சங்கத்தோடு இணைந்து மாவட்டங்களில் பொதுமேலாளர்களைச் சந்தித்துப் பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறோம்.
         கும்பகோணத்தில் எங்களுக்கு ALC ஆபீஸ் எங்கே இருக்கு? கிழக்கா, மேற்கா…--  தெரியாதுஆனால் எங்கள் பகுதியில் பார்ட் டைம் ஊழியர் என்று எவரும் இல்லை. எல்லோரையும் முழு நேர ஊழியர்கள் ஆக்கிவிட்டோம்நிர்வாகத்தைப் பார்த்துப் பேசி பிரச்சனைகளைத் தீர்த்திருக்கிறோம். டெண்டர் மாறிய போதும் பழைய ஊழியர்கள்தான்புதிய ஊழியர்கள் இல்லைஇப்போதும் ஊழியர்களை வரைமுறைப்படுத்திய போது அனைவரையும் பணியமர்த்தி இருக்கிறோம், உபரித் தொழிலாளி என்று எவரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லைகாரணம் எங்கள் பகுதியில் அமைப்பை உறுதியாகக் கட்டியிருக்கிறோம்அது மட்டுமல்ல, எங்களது கும்பகோணம் தஞ்சைக்கான பொதுமேலாளர் ஊழியர்கள் மீது அதிக அக்கறைக் கொண்டவர்விதிப்படி உழைப்பாளர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, என்னவெல்லாம் சலுகைகள் உண்டோ அத்தனையும் சட்டப்படி கிடைக்கச் செய்கிறார்அவருடைய நல்ல உள்ளத்திற்கு ஒரு உதாரணம் பாருங்கள்.
         டவரிலிருந்து கீழே விழுந்து ஒரு ஒப்பந்தத் தொழிலாளிக்குக் கடுமையான பாதிப்புநாங்கள் நிதி உதவியாக 1 லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுத்தோம்அப்போது எங்கள் ஜிஎம் தன் பங்காக ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்தார்பணம் கொடுத்ததோடு மட்டுமல்ல, இத்தகைய விபத்துக்களின்போது அடிபட்டவருக்கு என்னவெல்லாம் விதிகளில் நிவாரணம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் திரட்டி மாநில நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
         அந்தத் தோழருக்கு இஎஸ்ஐ மருத்துவ உதவி பெற்றுத் தந்திருக்கிறோம்முறையான பிஎஃப் பிடிக்கப்படுகிறதுஇந்த விதிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும்அதுபற்றிய விழிப்புணர்வு வேண்டும்உங்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை எது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்இஎஸ்ஐ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அங்கிருந்துதான் நீங்கள் அனுமதிக் கடிதம் பெற வேண்டும்விவரங்கள் தெரிந்திருப்பது மிகவும் பயனுடையதுஉங்களுக்கு மட்டுமல்ல, உங்களால் மற்றவர்களுக்கும் அது பயன்படும்.
        
 பணித் திறனுக்கேற்ற ஊதியம் ரீகேட்டகரைசேஷன் எங்கள் பகுதியில் நடைமுறைக்கு வந்து விட்டது.  TMTCLU மாநில சங்கம் இதுபற்றி மாநில நிர்வாகத்திற்குக் கடிதம் கொடுத்து விவாதித்ததுகேரளமாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உத்தரவைச் சுட்டிக் காட்டி நமது மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த வற்புறுத்தினோம். ஏன் கேரள மாநில உத்தரவைச் சுட்டிக் காட்டினோம் என்றால் அது நமது டெல்லி கார்பரேட் அலுவலக அனுமதி பெறப்பட்ட உத்தரவு.   ஆனால் சிலர் ALC சொல்லி நடந்ததாகக் கூறித் திரிவது மட்டுமல்ல, ALC கல்வெட்டும் வைக்கிறார்கள்அந்தக் கல்வெட்டு வீரர்களைக் கேட்கிறேன்இதே ALC ஓராண்டிற்கு முன்பும் உத்தரவு போட்டதே, அமலானதாஅது சரி, இப்போது ALC போட்டுதான் இது வந்தது என்றால் நான் கேட்கிறேன்.  ALC உத்தரவு பொதுதானே, பிறகு ஏன் பெரிய்ய தலைவர்கள் இருக்கும் சென்னை தொலைபேசியில் இன்னும் இது அமலாகவில்லைகாரணம் பொய் என்றைக்கும் நிலைக்காது.
         அவர்களுடைய எரிச்சலுக்குக் காரணம், நமது TMTCLU சங்க அமைப்பு வலிமை பெற்று வருகிறது என்பதுதான்பல மாவட்டங்களில் சேலம், வேலூர், விருதுநகர், கோவை, தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று நமது சங்கம் அமைப்பு ரீதியாக பலம் பெற்றுள்ளது. இங்கே உங்கள் மாவட்டத்தில் நீங்கள் போட்டிக்கு மத்தியில்ஏன், ஒருவகையில் துரோகத்திற்கு மத்தியில்நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள்.  பல எதிர்ப்புகளுக்கிடையே கொடியேற்றி வெற்றிகரமாக மாநாடு நடத்துகிறீர்கள்பாராட்டுகள். ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்கூலியை உயர்த்திப் பெற்றிருக்கிறோம்ஆனால் அது நாம் போராடிய சம வேலைக்குச் சம சம்பளம் அல்லஅதைவிடக் குறைவுதான்.
         உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சமவேலைக்குச் சமசம்பளம் பெறுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறதுஅதைப் பெறுவதற்குத் தகுதி இருக்கிறதுநாம் தகுதியும் திறமையும் மிக்கவர்கள்கல்வித் தகுதி குறைவாக இருக்கலாம். ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவது நமது உரிமை என்ற கோரிக்கையில் உங்களுக்கு முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும். நாம் நம்பிக்கை இழக்கக் காரணம் இல்லை.  நமது அமைப்பு வலிமையாக இருக்கிறது.   உங்கள் பகுதியில் அமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.      எல்லாவற்றிலும் அரசியல் உண்டுசோப்பு  சீப்பு விலையானாலும் சரி, அதற்கு வரியானாலும் சரி, எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்இதைப்புரிந்து கொள்ளாமல் எங்கெங்கோ இருந்து திரிந்து விட்டு, யார் யாரையோ நம்பிவிட்டு கடைசியில் இங்கேவருவார்கள்ஆனால் நீங்கள் இங்கே ஏஐடியூசி அலுவலகத்திலேயே உங்களது பயணத்தைத் துவங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
 தேங்கிக் கிடந்த சம்பளத்தை உடைத்து உயர் ஊதியம் பெற கோரிக்கை வைத்து மத்திய சங்கங்கள் போராடினஏஐடியூசி, சிஐடியு முதலிய மத்திய சங்கங்கள் 2015ம் ஆண்டும் 2016 ம் ஆண்டும் பொது வேலைநிறுத்தங்கள் நடத்தினஅதில் NFTE சங்கம் கலந்து கொண்டது TMTCLU சங்கமும்  கலந்து கொண்டது. அப்போராட்டத்தில்  கலந்து கொள்ளாமல் ஓரம் கட்டியவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள் இன்றைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். அரசியல் போலவே சங்கத்திலும் நடைபெறுவதைக் காண்கிறோம். சுதந்திரப் போராட்ட அரசியலில் பங்கேற்காதவர்கள் இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கவில்லையா அதுபோல, சங்கத்திலும் கூட அப்படி.
 மஸ்தூர்கள் அன்று உணர்வுடன் ஒன்று திரண்டு போராடினார்கள்ஜெகன் போன்ற தியாகத் தலைவர்கள் இருந்தார்கள்இன்றைக்கும் NFTE அதே உணர்வோடு செயல்படுகிறதுநாம் அமைப்பைப் பலப்படுத்தும் கடமையைச் செய்வோம். நமக்கு முன்னே அடையாள அட்டை பிரச்சனை இருக்கிறதுபோனஸ் பிரச்சனை இருக்கிறதுபோனஸ் பிரச்சனையில் இந்த முறை திருத்தப்பட்டச் சட்டத்தின்படி குறைந்த பட்ச போனஸ் ரூபாய் 7000.= நிச்சயம் பெறுவோம்நமது கோரிக்கைகளில் வெற்றிபெற NFTE பேரியக்கதின் வழிகாட்டுதலோடு  போராடுவோம், நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக் கூறி புதிய கிளை நிர்வாகிகளுக்கும் மாநில சங்க வாழ்த்துக்களைக்கூறி பாராட்டுதல்களோடு நிறைவு செய்கிறேன்.”