.

Tuesday, December 31, 2019

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்- NFTE

Monday, December 30, 2019


பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்!
இன்று 31.12.2019 நமது இலாக்காவிலிருந்து
பணி ஓய்வு பெறும்
தோழர் K.கோதண்டராமன் TT கடலூர்
தோழர் A.கோவிந்தராஜு TT பாளையங்கோட்டை
தோழர் R.ராஜேந்திரன்  AOS  அரகண்டநல்லூர் 
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் NFTE BSNL மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

Monday, December 23, 2019

இரங்கல் செய்தி.....
கடலூர் தோழர்கள் R.கிருஷ்ணமூர்த்தி TT, R.நாகராஜன் TT (retd) ஆகியோரின் தாயாரும், மறைந்த ஓய்வுபெற்ற லைன் இன்ஸ்பெக்டர் ராமநாதன் அவர்களின் மனைவியுமான அனுசூயா அம்மையார்  அவர்கள் 22.12.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணி அளவில், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் மறைவில் வருந்தும் தோழர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி நிகழ்வு 23.12.2019 இன்று மாலை 4.00 மணியளவில் கடலூர், உச்சிமேடு, பாலாஜி நகரில் அமைந்துள்ள தோழர் கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, December 2, 2019


ஓய்வூதிய விண்ணப்பங்கள்
விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தமாக மாநில நிர்வாகம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது....
அதன்படி...விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்கள்தங்கள் ஓய்வூதிய விண்ணப்பங்களை வழக்கம் போலவே உரிய படிவங்களில் நிரப்பி தங்களது மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்த தோழர்கள் உடனடியாக அந்தந்த பகுதித் தோழர்களின் உதவியோடு விண்ணப்பங்களை நிரப்பும் பணியில் ஈடுபடவேண்டும்.
தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச்செயலர்


VRS 2019  பற்றிய பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
-குறள் 355

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
-குறள் 423
தோழர்களே! பொருள் உணர்ந்து முடிவு செய்யுங்கள்
தோழமையுடன்,
வெ.லோகநாதன்
மாநிலத் துணைத்தலைவர் 
9486107862.


Saturday, November 30, 2019


பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்!

இன்று 30.11.2019 நமது இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெறும்
தோழர் R.கணேசன் TT பண்ருட்டி
தோழர் L.சுப்ரமணியன் TT சங்கராபுரம்
தோழர் கோபாலகிருஷ்ணன் OS(Genl) விழுப்புரம்

ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்


Tuesday, November 5, 2019

தோழமையுடன் அனைவரையும் வரவேற்கின்றோம்... BSNL  நமக்கானது  தெளிவு பெறுவோம்..

Monday, November 4, 2019


சிறப்பு  தற்காலிக விடுப்பு-06.11.2019
கடலூரில் வருகின்ற 06-11-2019 புதன் கிழமை  தமிழ்மாநில சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய முப்பெரும் விழா-கருத்தரங்கில் கலந்துகொள்ள ஏதுவாக மாநில நிர்வாகம் சிறப்பு தற்காலிக விடுப்புக்கான உத்தரவு அளித்துள்ளது.

உத்தரவு எண்: Lr.No. SR/2-209/ NFTE[BSNL] /2016-19 datedatt @ Chennai-6  the 04-11-
2019.


Sunday, November 3, 2019


கண்டன ஆர்ப்பாட்டம்

தோழர்களே!!
நமது மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் JE-CDL மற்றும் நமது மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் மீது முன்பு குற்றப்பத்திரிக்கை வழங்கியது அனைவரும் அறிந்ததே. அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அளவில் விளக்கங்களுடன் பதில் அளித்தும் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கியுள்ளது . நிர்வாகம் யாரையோ திருப்திபடுத்தும் நோக்கில் தவறான முடிவெடுத்து பழி வாங்கும் செயலை அரங்கேற்றி உள்ளது என்பதாக கருதுகிறோம். BSNL லில் புத்தாக்க திட்டம் அமுலாக்கம் செய்யும் நேரத்தில் தோழர்கள் மீது அவசரமாக தண்டனை வழங்குவது நியாயமற்றது. இச்செயலை எந்த ஒரு ஊழியரும் இந்த நடவடிக்கையினை ஏற்கவில்லை.
நமது சங்க தோழர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடா
இச்செயலை நமது கடலூர் மாவட்ட சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பழி வாங்கும் இச் செயலை திரும்ப பெற  வலியுறுத்தியும் ,
மாநில நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியும்
  05.11.2019 செய்வாய் கிழமை
மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும்
 கண்டன ஆர்ப்பாட்டம்
 நடத்திடுமாறு கிளைச் செயலர்களை கேட்டுக் கொள்கின்றோம். மேலும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.
நன்றி
போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்!... ,
அநீதி களைவோம்!!,...

தோழமையுடன்
D.குழந்தைநாதன் மாவட்ட செயலர்,


கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களே  நமது மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் ( JE/CDL ) மற்றும் நமது  மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் மீது   முன்பு குற்றப்பத்திரிக்கை  வழங்கியது அனைவரும் அறிந்ததே.  அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அளவில் விளக்கங்களுடன் பதில் அளித்தும் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கியுள்ளது .  நிர்வாகம் யாரையோ  திருப்திபடுத்தும் நோக்கில் தவறான முடிவெடுத்து பழி வாங்கும் செயலை அரங்கேற்றி உள்ளது என்பதாக கருதுகிறோம்.  BSNL லில் புத்தாக்க திட்டம் அமுலாக்கம் செய்யும் நேரத்தில்  தோழர்கள் மீது அவசரமாக  தண்டனை வழங்குவது  நியாயமற்றது. இச்செயலை  எந்த ஒரு ஊழியரும் இந்த நடவடிக்கையினை  ஏற்கவில்லை ,  நமது சங்க தோழர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடக இச்செயலுக்கு நமது கடலூர்  மாவட்ட சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
        பழி வாங்கும் இச் செயலை திரும்ப பெற வேண்டியும் , மாநிலச்  நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியும்   வரும் 05.11.2019  செய்வாய் கிழமை அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு  கிளைச் செயலர்களை  கேட்டுக் கொள்கின்றோம். மேலும்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

( குறிப்பு: தோழர் V.இளங்கோவன் BSNL ல் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்காகவும், தோழர் இரா.ஸ்ரீதர்     மத்திய தொழிற்சங்க இயக்கத்தில் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தோழமை ஆதரவு  அளித்தற்கும்  மேற்கொண்ட குற்றச்சாட்டு வழங்கப்பட்டது)

                                               நன்றி
                                                                                                                           தோழமையுடன்
                                                                                                 D.குழந்தைநாதன்
                                                                                                    மாவட்ட செயலர்

போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்!... , அநீதி களைவோம்!!,...

Thursday, October 31, 2019


 தோழர் குருதாஸ்தாஸ் குப்தா மறைந்தார் 


ஏஐடியூசி மாபெரும் இயக்கத்தின் மாபெரும் தலைவர் மறைந்தார்.  என்எல்சி வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்திற்கு வித்திட்டு முன்னின்று நடத்திய தோழர்.
          NLC  ஒப்பந்த தொழிலாளர்களுக்களின் கோரிக்கையின் மீது தனி கவனம் செலுத்தி அதனை நிறைவேற்றிட பாடுவட்ட மாபெரும் தலைவர்                தோழர் குருதாஸ்தாஸ் குப்தா.  தொழிலாளர்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் 40 வருடங்களாக தொடர்ந்து சிங்கமென கர்ஜித்த மாபெரும் சிறந்த நாடாளுமன்றவாதி.         
          2003 தமிழக முதல்வர் ஜெயலலிதா  ஆட்சியின் போது பல லட்சம் தமிழக அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து ஒரு கருத்தரங்கில் அன்றைய இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் திரு வாஜ்பாய் அவர்களே தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கையின் மீது உரிய கவனம் செலுத்திட கர்ஜித்தவர் . அன்றைய பிரதமரை   நேரடியாக   கண்டனம் தெரிவித்த ஒரே மாபெரும் தலைவர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா.
          ஏ.ஐ.டியுசி நூற்றாண்டு தொடங்கிய இன்னாளில் மறைந்த தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் செவ்வணக்கம்.
          தோழருக்கு   நமது சங்கங்களின் சார்பில் பொது மேலாளர் அலுவலகத்தில் தோழருக்கு அஞ்சலி  இன்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் . தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                               தோழமையுடன்
                                                                               D.குழந்தைநாதன்
                                                                 மாவட்டச் செயலர், கடலூர்-01.


Monday, October 28, 2019

வாருங்கள் அன்புடன் அழைக்கின்றோம்... விவாதிக்க.... நாளைய BSNLலின் நன்மை கருதி..



பங்குபெறுவோம்...... விவாதிப்போம்...... 
புரட்சி செய்வோம்....


Tuesday, October 15, 2019


மக்கள் சேவையில் 4-G தரத்துடன் மீண்டும் BSNL

-புத்தாக்கக் கருத்தரங்கம்-



அன்புடையீர்,
        வணக்கம். புது உற்சாகத்துடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  கைத்தொலைபேசி சாதாரண மக்களுக்கு ஒரு கனவாக இருந்ததை மாற்றி, அனைவர் கையிலும் செல்பேசி –உலகத்தரத்தில், கட்டுப்படியாகும் கட்டணத்தில்—என்று மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு அரசுத் தொலைபேசித் துறையாய் இருந்து பொதுத்துறை BSNL என்றான எங்களுக்கு உண்டு.  தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை – ஹலோ சொன்னதும் முதல் யூனிட் 16 ரூ, இன்கமிங் காலுக்கும் கட்டணம் என்ற அத்தனையும் – ஒழித்து, ஒரு வினாடிக்கு ஒரு பைசா, அரை பைசா என்றெல்லாம் தொலைத்தொடர்பில் புரட்சிக்கு வித்திட்டது BSNL எனில் மிகையில்லை.
        சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறோம். தரைவழி தொலைபேசி மட்டுமே அளித்த அரசுத் துறை, அரசின் புதிய பொருளாதார தொலைத்தொடர்பு கொள்கையால், பொதுத்துறையாக  2000 ஆண்டு அக்டோபர் முதல் தேதி புதிய பிறப்பெடுத்தது. கடந்து விட்ட இந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு நிகழ்வுகள். துவக்கப்பட்ட நிலையில் புதிய BSNL நிறுவனத்தின் நிகர கையிருப்பு 40 ஆயிரம் கோடி, பல லட்சம் மதிப்புடைய நிலம், கட்டடம் என அசையா சொத்துகள், சுமார் 3 லட்சம் ஊழியர்கள்.
        ஆனாலும், செல் சேவை வழங்கத் தனியாருக்கு அனுமதியளித்த அரசு எங்களுக்கு அனுமதி தரவில்லை; ஊழியர்கள் போராடித்தான் செல் சேவையில் தாமதமாக நுழைந்தோம். அதற்குள் செல் சந்தையைப் பிடித்த தனியார் நிறுவனங்களின் அத்தனை கட்டணக் கொள்ளைகளும் அரங்கேறின. செல் வியாபாரமல்ல, மக்கள் சேவை என்றாக்கியது BSNL. அரசு உதவாதது மட்டுமல்ல, -- சமமான விளையாட்டுக் களத்தை உறுதி செய்யாது – பாரபட்சமாக நடந்து கொண்டபோதும், தனியாரோடு கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாங்கள் கடமை ஆற்றுகிறோம்.  
3-G அலைக்கற்றை பெற ரொக்கமாக அரசுக்கு BSNL 18ஆயிரம் கோடி அளித்தது; தனியார் நிறுவனங்களோ பொதுத்துறை வங்கிகளின் கேரண்டி மற்றும் வங்கிக் கடன் பல்லாயிரம் கோடியில் தங்கள் வியாபாரத்தை நடத்தினர். இன்று அந்த நிறுவனங்களில் பல கடையைக் கட்டி ஓடிவிட்டனர், கடன் சுமையை வாராக்கடனாகப் பொதுத்துறை வங்கிகள் சுமக்கும்படி– அதாவது பொதுமக்களாகிய நம் தலையில் தான் – ஏற்றிவிட்டன.  லாபம் குறைந்ததும் ஓடி விட்டவர்கள், நிறுவனத்தை நடத்தும் போதும் கிராமங்களை எட்டிப் பார்க்கவில்லை, காஷ்மீரமோ, வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களோ மலைப் பிரதேசமோ அங்கெல்லாம் செல் கோபுரம் அமைக்கவில்லை, புயல் மழை வெள்ளம் நிலச்சரிவுஎன்ற இயற்கைச் சீற்றத்தின் போதும் பொதுமக்களோடு நிற்கவில்லை.  அப்போதெல்லாம் உற்றதுணையாய் உடன்நின்றது எங்கள் பொதுத்துறையான  BSNL மட்டுமே.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை, நீதித்துறை போன்றவற்றின் டிஜிட்டல் மயமாக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவது BSNL. மேலும் மத்திய அரசின் ”டிஜிட்டல் இந்தியா” மக்கள் சேவையைப் பாரதத்தின் பல இலட்சம் கிராமப்புறங்களுக்கும் கொண்டு சேர்ப்பது BSNL பொதுத்துறையே.
        இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. பேசுவதற்கு மட்டும் போன் என்ற காலம் போய், டேட்டா இல்லை எனில் உயிரோட்டச் செயல்பாடு ஏதுமில்லை என்றாகி விட்டது. அதற்கு அடுத்த தலைமுறை அலைக்கற்றை 4G – 5G வேண்டும். இன்றைய அரசோ திட்டமிட்டு சொந்த நிறுவனமான BSNL ஐ புறக்கணிக்கிறது, இவ்வளவு இலட்சம் சொத்து மதிப்புடைய நிறுவனத்திற்கு வெறும் ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற ஒப்புதலோ 4G அலைக்கற்றையோ வழங்க மறுத்து ஒரு வருட காலமாக –100 நாள் திட்ட இலக்குடைய அரசு – BSNL புத்தாக்கம் மறுசீரமைப்பு பற்றி பேசுவதற்கே தாமதிக்கிறது. நோக்கம் அனைவருக்கும் தெரிந்த ரகசியமே. இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது மக்கள் சேவையே.
        பெருமுதலாளிகள் நிறுவனங்களின் கைகளில் உள்ள பத்திரிக்கை முதலிய ஊடகங்கள் வாயிலாக பொதுத்துறையான BSNL நிறுவனம் பற்றிய பொய்யான கட்டுக்கதைகள் – விரைவில் மூடப் போகிறார்கள், இன்று ஒன்னரை லட்சம் உள்ள ஊழியர்களே அதிகம், விருப்ப ஓய்வு தர வேண்டும் என்றெல்லாம் – மக்களை நம்ப வைக்க முட்டாள் ஆக்க முயற்சி நடக்கிறது.
        இதற்கெல்லாம் எங்களின் ஒரே பதில் – வீழ்வேன் என்று நினைத்தாயோ?  என்பது தான். அதற்குத் திட்டமிடவே கடலூரில் எதிர்வரும் நவம்பர் 6ம் தேதி BSNL புத்தாக்கத் திட்டமிடல் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் வங்கி, எல்ஐசி, இரயில்வே, பாதுகாப்புத் துறை, ஏர் இந்தியா என பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மக்கள் விரோத, பிற்போக்குக் கொள்கையை முறியடிக்க –
பொதுத்துறையைக் காக்க இந்திய உழைக்கும் வர்க்கமும், பொதுமக்களும் ஒன்று திரளவேண்டிய  அவசியத்தை வலியுறுத்தவும் –
இந்த தேசபக்த கோரிக்கையை – தேசத்தின் அரசியல் கோரிக்கையாக -- பாராளுமன்றத்தில் உறுதியாக ஆதரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கருத்தரங்கில் பற்கேற்க உள்ளார்கள். நிர்வாகத் தரப்பு அதிகாரிகளும் பங்கேற்பர்.
        அவர்களோடு சமீபத்தில் நடந்து முடிந்த ஊழியர் சரிபார்ப்புத் தேர்தலில் தமிழக அளவில் 50 சத வாக்குகளுக்கு மேல் பெற்று முதன்மை இடத்தையும் அகில இந்திய அளவில் அதிக வாக்குகளோடு இரண்டாமிடம் பெற்ற NFTE சங்க வெற்றிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டிடவும் அகில இந்தியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், தோழமைச் சங்கத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
·       தேச விடுதலை என்ற ஒரே கோரிக்கையை வென்று இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மகாத்மா காந்தியடிகள் கொண்டாட்டங்களில் இல்லை,
·       புரட்சி வெற்றியடைந்த இரவில் மாமேதை லெனின் நடுநிசி கடந்த நேரத்தில் சோவியத்தின் திட்டங்களை வரைந்து கொண்டிருந்தார்,  
·       அண்ணல் அம்பேத்கார் இரவில் விழித்துக் கொண்டிருந்த காரணம் கேட்டபோது – மற்ற தலைவர்கள் உறங்கச் சென்ற நிலையில் –’எனது மக்களின் விடியலுக்காக விழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியது போல,
        NFTE பேரியக்கத்தின் வெற்றி -- கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், நன்றி அறிவிப்பு என்றெல்லாம் ஆரவாரமாகக் கூற மாட்டோம் – மக்கள் சேவைக்காக, BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்ய, அதற்காகத் திட்டமிட, சங்கங்களிடையே ஒற்றுமையை மேலும் வலிமையாகக் கட்ட கருத்தரங்கில் கூடுவோம்!
        கருத்தரங்கத்தின் வெற்றிக்கு ஏனைய மாவட்டச் சங்கங்கள் நன்கொடையோடு கடலூர் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் தலா ரூபாய் 2000/= வழங்க முடிவு செய்துள்ளனர்.  ஓய்வு பெற்ற நமது முன்னாள் தோழர்களும் நண்பர்களும் எப்போதும் போல் நமக்கு உதவுவர். கடலூர் மாவட்டத் தோழர்கள் தங்களால் இயன்ற, விரும்பிய அளவு – தினைத் துணையாயினும், பனைத்துணையாகக் கொள்வோம் – நன்கொடை அளிக்க வேண்டும்.  அதனினும் முக்கியம் நீங்கள் அனைவரும் அவசியம் கருத்தரங்கில் பங்கேற்கத் தோழமையுடன் அழைக்கிறோம்.
அன்புடன் அழைக்கும்,

G.கணேசன்                 A.S.குருபிரசாத்                D.குழந்தைநாதன்
மாவட்டத் தலைவர்                  மாவட்டப் பொருளர்                         மாவட்டச் செயலர்
    
     இரா.ஸ்ரீதர்
   ஒருங்கிணைப்பாளர்