.

Saturday, March 30, 2019



 வாழ்த்துக்கள்

30.3.2019 இன்று பணி ஓய்வு பெறும்...

திருமதி கலாராணி இளங்கோவன் SDE கடலூர்
திரு. S.P. ராஜேந்திரன் SDE விழுப்புரம்



தோழர்கள்
T.வைத்தியநாதன் AOS பண்ருட்டி
P.லட்சுமணன் TT பண்ருட்டி
R.சுப்பிரமணியன்-I TT  வீரபாண்டி
P.சந்திரன் TT கல்பட்டு
R.சுந்தரமூர்த்தி TT அரகண்டநல்லூர்
S.பன்னீர்செல்வம் TT பரங்கிப்பேட்டை
D.பழனிவேலு TT கடலூர்
N.R. பஞ்சநாதன் TT விழுப்புரம்

கடலூர் மாவட்ட சங்கத்தின்  சார்பில் பணி ஓய்வு நாள் 
சிறக்க வாழ்த்துகிறோம்.....

Thursday, March 21, 2019

வருந்துகிறோம்
 BSNLEU மாநில உதவிச்செயலரும், TNTCWU மாநில தலைவருமான தோழர் எம். முருகையா அவர்கள் இன்று 21.3.2019 இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

Monday, March 18, 2019

கண்ணீரஞ்சலி...

தோழர் S. நவாப் ஜான் TT அவர்களின் தந்தையும் ஓய்வுபெற்ற  கேபிள் ஜாயின்டர் திரு.ஷேக் ஹுசைன் அவர்கள் 17.3.2019  மாலை 3.00 மணியளவில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்க்குகிறோம்.  இறுதி நிகழ்ச்சி இன்று 12.30 க்குள் கடலூர் வண்ணார பாளையம் தொலைபேசி நிலைய ஊழியர் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Monday, March 11, 2019


மகளிர் தினம் 08-03-19
கடலூர் மாவட்ட AUAB சார்பாக சர்வதேச மகளிர் தினம் 08-03-19 தொலைபேசி நிலையத்தில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில் உணவு இடைவேளையில் தோழியர்கள் V.கீதா NFTE, சற்குணவதி கனகசபை BSNLEU கூட்டுத் தலைமையில் தோழியர் S.மணிமேகலை SNEA வரவேற்புரை வழங்கிட தோழியர் K.சாந்தா DGM (CFA) துவக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக முனைவர் ஜெ. சியாமளா உதவி பேராசிரியர் (தமிழ்த்துறை) பெரியார் அரசு கலைக் கல்லூரி கடலூர் சிறப்பான சிறப்புரையாற்றினார். தோழியர். சித்ரா நாகராஜன் AIBSNLEA கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினருக்கும், ஏற்பாடு செய்த AUAB மாவட்ட சங்கத்திற்கும் நன்றி கூறினார் 




Saturday, March 2, 2019

வருந்துகிறோம்...
சின்ன சேலம் தோழர் A.ரவிச்சந்திரன்  TT அவர்களின் தாயார் திருமதி பிரேமா அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரது பிரிவால் வருந்தும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.  இறுதி நிகழ்வு நாளை மாலை 3 மணி அளவில் சென்னை பொத்தேரியில் நடைபெறும்.