.

Tuesday, July 30, 2024

மாநில செயலாளர் தோழர்  K.நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழா





மாநிலச் செயலாளர் தோழர்  K.நடராஜன் பணி ஓய்வு  பாராட்டு விழா 30 7 2024 நண்பகல் மதியம் 2 மணி 30 நிமிடத்திற்கு மாநிலத் தலைவர் தோழர் G.S. முரளிதரன் தலைமையில் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் விழாவில் பங்கு பெற்ற அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 

தோழர் நடராஜன் அவர்களை பாராட்டி குறிப்பாக அவரது எளிமையான வாழ்க்கையை பற்றியும் தோழமை உணர்வுகளையும் மிக அழகாக எடுத்துரைத்தார். ( முழு குறிப்பு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது) அகில இந்திய துணைத் தலைவரும் மாநில பொருளாளரும் ஆகிய தோழர் S. பழனியப்பன் தனக்கே உரிய பாணியில் மிக சுருக்கமாக பாராட்டி துவக்க உரையாற்றினார் .

மாநிலத் தலைவர் தனது தலைமை  உரையில்  எட்டு ஆண்டு காலம் தோழர் நடராஜன் உடன் நெருங்கி பழகி பயணம் செய்த அனுபவத்தை பதிவு செய்தார். பங்குபெற்ற அனைத்து தலைவர்களுக்கும் கையில் கதர் ஆடை கொடுத்து, மூத்த தோழர் S.தமிழ்மணி அவர்கள் எழுதிய புத்தகத்தை கொடுத்து அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்.  குறிப்பாக நாகர்கோவில் இருந்து மூத்த தோழர் ஜோசப் அவர்களும் குன்னூர் பகுதியில் இருந்து தோழர் ரங்கன் அவர்களும் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானதாகும்.

நம்முடைய பொதுச் செயலாளர் தோழர் CC சிங்க் முழுமையாக பங்கு பெற்றது மிகவும் சிறப்பான அம்சமாகும்.

மேனாள்  ஆற்றல் மிகு தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் பட்டாபி அவர்கள் பங்கு பெற்று தோழர் நடராஜன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை மிக தெளிவாக குறிப்பிட்டு தமிழ் மாநிலத்தின் மரபை கடைபிடித்த நடராஜனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்தார்.

தமிழகத்தின் மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் ஆர் கே அவர்கள் அவரது துணைவியாருடன் தோழியர் சௌதா அவர்களுடன் பங்கு பெற்று சிறப்பான முறையில் வாழ்த்துரை வழங்கினார்.  தஞ்சை  மண்ணின் பெருமையை காத்திட்ட நடராஜனுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்தார். ஓய்வு பெற்ற பிறகு தொடர்ந்து சமூகப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஓய்வுக்கு ஓய்வு தர வேண்டுமே ஒழிய இன்று போல் என்றைக்கும் நடராஜன் பணியாற்ற வேண்டுகோளுடன் தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

BSNLEU சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் S செல்லப்பா பங்கு பெற்று  தொழிற்சங்கத்தில் பல முரண்பாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் ஒற்றுமையை கட்டுவதற்கும் கூட்டு இயக்கத்திற்கு வலு சேர்ப்பதற்கு தோழர் நடராஜனின் பங்கு மிக முக்கியமானது .மிக எளிமையாக அணுகக்கூடிய  தோழரின்  பணியை பாராட்டினார். BSNLEU இயக்கத்தின் மாநில செயலாளர் தோழர் ராஜு மற்றும் மாநிலத் தலைவர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

மாநில செயலாளர் தோழர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக நமது பொதுச் செயலாளர் தோழர் CC Singh சென்னை வந்திருந்தார். கிரீம்ஸ் ரோடு மாநில சங்க அலுவலகத்தில் அவரை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றேன். 

குறிப்பாக மருத்துவ காப்பீடு மற்றும் மூன்றாவது ஊதிய மாற்றம் இரண்டு பிரச்சினைகளில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற  வேண்டுகோளோடு மாற்று ஆலோசனைகளையும் வழங்கி உள்ளோம்.

1. மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 2/3 பிரிமியம் தொகையை கட்டாயமாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.1/3 தொகையை ஊழியர்கள் செலுத்தலாம். பிஎஸ்என்எல் மெடிக்கல் MRS திட்டத்தை ஆய்வு செய்யலாம். நமது நிறுவனம் ஊழியர்  நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

2. மூன்றாவது ஊதியக்குழு எந்த விதமான  காலதாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் .இன்றைய சூழலில் 60% க்கு மேல் ஊழியர்கள் தேக்க நிலையில் உள்ளனர் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாநிலச் செயலாளர் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அனைத்து சங்க  தலைவர்களும் பங்கு பெற்று தோழர் நடராஜன் சிறப்பு இயல்புகளை குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

சேவா சங்கத்தின் மத்திய சங்க தலைமை ஆலோசகர் மரியாதைக்குரிய தோழர் P.N.பெருமாள் அவர்கள் தலைமையில் நிறைவான தோழர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

மாநில செயலாளர் மற்றும்  மத்திய  சங்கத்தின் பொருளாளர் ஆகிய தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது வாழ்த்துறையில் தமிழகத்தில் தோழர் நடராஜன் தோழமையின் காரணமாக கடந்த மூன்று தேர்தலாக NFTE இயக்கம் சேவா சங்கத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது .அனைத்து தேர்தலிலும் தமிழகத்தில் வெற்றியை பெற்றது.
தமிழகத்தில் சேவா சங்கத்திற்கும் NFTE இயக்கத்திற்கும் தோழமையான உறவுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ள மாநில செயலாளர் நடராஜன் பணி ஓய்வு காலம் சிறக்க சேவா சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

சேவா சங்கத்தின் தலைமை ஆலோசகர் தோழர்  P.N.பெருமாள் அவர்கள் கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் பங்கு பெற்று தோழர் நடராஜன் அணுகுமுறையை சிறப்பான முறையில் எடுத்து சொல்லி வாழ்த்துரை வழங்கினார்..

ஜாதி, மத ,கேடர்  வித்தியாசமன்றி மிக எளிய முறையில் அணுக கூடிய தோழனாக செயல்பட்டவர்.
தஞ்சையில் எங்களது இயக்கத்தின் சார்பாக அண்ணல் பட திறப்பு விழாவிற்கு அழைக்காமலேயே  பங்கு பெற்றவர். நாங்கள் தோழர் நடராஜனையே அண்ணல் படத்தை திறந்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்  .இதை அன்பாக ஏற்றுக் கொண்டு அண்ணல் படத்தை திறந்தது மட்டுமில்லாமல் நிகழ்ச்சி முடியும் வரை இருந்து சிறப்பித்தவர்.
எங்கள் இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெற்று  சிறப்பிக்க கூடியவர். 
சென்ற மூன்று ஆண்டுகள் மத்திய கூட்டு ஆலோசனை குழு ஏன் நடைபெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். NFTE மத்திய சங்கம் குறிப்பாக எனது அன்புக்குரிய தோழர் CC சிங் அவர்கள் என்னை  தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமித்தார். அதை ஏற்றுக் கொள்ள முடியாது ஜீரணிக்க முடியாத புரட்சிகரமான தலைவர்கள் எதிர்ப்பின் காரணமாக சிக்கல் எழுந்தது. NFTE மத்திய சங்கம் , குறிப்பாக தோழர் சிங் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக சேவா சங்கத்தை தவிர்த்து நடத்த இயலாது என்பதை உறுதிபட கூறினார்கள்.

NFTE இயக்கம் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற இயக்கமாக  இருக்கின்றது. குறிப்பாக தமிழ் மாநிலச் செயலாளர் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் பாராட்டி கொண்டே இருக்கலாம்.

அவருடைய பணி ஓய் காலம் சிறக்க ,மேலும் தொடர்ந்து இயக்கப் பணிகளை ஆற்றிட சேவா மத்திய சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்..

தலைமை பொது மேலாளர் அலுவலகத்தின் சேவா இயக்கத்தின் செயலாளர் தோழியர் பரிமளா செல்வி, CAO அவர்கள் மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் நடராஜன் அவர்கள் குறிப்பாக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் அனைத்து தோழர்களிடமும்  கேடர் வித்தியாசம் இன்றி , ஜாதி மத பேதமின்றி மிக எளிமையாக அணுகக் கூடிய தலைவர் .

குறிப்பாக மகளிர்க்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக எதிர்வினை ஆற்ற கூடியவர். அனைத்து  மகளிர்களும்  சேர்ந்து அவரை கௌரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தோம்.  கால தாமதமானதால் அனைத்து  தோழியர்களாலும் முழுமையாக பங்கேற்க இயலவில்லை.தலைமை பொது மேலாளர்  அலுவலக அனைத்து மகளிர் சார்பாக தோழரை வாழ்த்தி  கௌரவிக்கின்றேன்.

மாநிலச் செயலாளர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் தலைமை பொது மேலாளர்  உயர் திரு  B வெங்கடேஸ்வரலூ, ITS, பொது மேலாளர் உயர்திரு ஜெயக்குமார் ஜெயவேலு , துணைப் பொது மேலாளர்  திரு ரமேஷ், பயிற்சி கேந்திரத்தின் முதல்வர் திரு சக்திவேல் ஆகியோர் பங்கு பெற்று மாநில செயலாளர் அவர்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

துணைப் பொது மேலாளர் ரமேஷ் அவர்கள் தனது வாழ்த்துறையில் நமது இயக்கத்தின் பெருமைகளை மிக அழகாக தஞ்சை அனுபவத்தின் மூலம் கிடைக்கப்பெற்றதை பதிவு செய்தார்.
நான் ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்தவனாக  இருந்தாலும், தொழிற்சங்க அனுபவங்களை  NFTE மூலம் தான் பெற்றிருந்தேன். தஞ்சையில் வெளிப்புற பகுதி அதிகாரியாக இருந்த பொழுது தோழர்களுடன்  நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

 இயக்கத்தில் ஆக்ரோஷமாக பேசக் கூடியவர்கள் ஆனால் துறை சார்ந்த பணிகள் செய்வதில் மிகவும் திறமையாக செயல்பட கூடியவர்கள்  தோழர்கள் என்பதை  என் அனுபவத்தில் உணர்ந்தேன்.

குறிப்பாக தஞ்சை லைன் ஸ்டாப் தோழர்கள்  கடும் பணியை நேரில் பார்த்து அசந்து போனவன். ஆனால் அதற்கெல்லாம் நேர் மாறாக தோழர் நடராஜன் செயல் பட்டதை கண்டு  வியந்து போனேன். தோழர் நடராஜன் எந்த சூழலிலும் கடுமையாக நடந்து கொள்ளாதவர். பிரச்சனை தீர்வில் உறுதியாக இருக்கக் கூடியவர் . பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருப்பார். நிர்வாகப் பிரிவில் துணைப் பொது மேலாளர் ஆக பணியாற்றிய பொழுது அவருடைய அணுகுமுறையை நேரில் பார்த்தவன் . எங்களது உறவு ஆசிரியர் மாணவனுக்கு உள்ள உறவு போன்று இருக்கும் எல்லைக்கோட்டை தாண்டாமல் இருக்கக் கூடியவர்.

அவர் வணக்கம் வைக்கக்கூடிய முறையிலேயே அவரது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் நானும் பெருமை கொள்கின்றேன்.தோழர் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

பொது மேலாளர் NWP உயர்திரு ஜெயக்குமார் ஜெயவேலு  அவர்கள் வாழ்த்துரை வழங்குவதற்கு முன்பு தமிழகத்தின் 4g 5g  சேவையின் தற்போதைய நிலைமைகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். மிக விரைவில் தமிழக முழுவதும் 4G சேவை கிடைக்க பெறும் குறிப்பாக டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் 4ஜி சேவை கிடைக்க பெறும் என்று நம்பிக்கை உடன் பதிவு செய்தார்.

CORE பணிகள் திருச்சியில் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 
5G சேவைகளும் எந்த விதமான சிரமம் இல்லாமல் உடன் கிடைக்க பெறும். 
கடலூர் பாண்டிச்சேரி உள்ள கூட்டத்தை போன்று இங்கு நான் பார்க்கின்றேன். தோழர் நடராஜன் மேல் அதிக பாசத்தை வைத்து தமிழக முழுவதும் தோழர்கள் இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகின்றது. 

தோழர் நடராஜன் குறிப்பாக கடலூர் மற்றும் பாண்டிச்சேரி பிரச்சினைகளை பற்றி என்னுடன் அடிக்கடி  வாதிக்க கூடியவர். பிரச்சினைகளை மிகப் பணிவுடன் பண்புடன் அதே சமயத்தில் உறுதியாக எடுத்து வைப்பதில் வல்லவர். எளிமையான  தோழர் நடராஜனின் பணி ஓய்வு காலம் திறக்க வாழ்த்துக்கள்.

தலைமை பொது மேலாளர் அவர்கள் தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து விட்டு மாலை ஆறு மணிக்கு மேல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.  நான்  தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டு ஒரு மாதம் கூட முடியவில்லை. தோழர் நடராஜன் பெயரை எப்பொழுதும் என் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றேன். தமிழகத்தில் தலைமை அலுவலகத்தில் முதலில் சந்தித்தது இவரை தான்.

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு  உங்களது இயக்கத்தின் மாநில செயற்குழுவில் கலந்து கொள்கின்ற வாய்ப்பையும், ஊழியர்களையும் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். மிக எளிமையாக அதே சமயத்தில் பிரச்சினைகளை உறுதியாக எடுத்துரைப்பதில் மிகவும் சிறப்பானவர்.

பல மொழிகளில் வல்லமை பெற்றிருந்தாலும் தற்போது தான் தமிழை கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்னால் புரிந்து கொள்ள முடியும் மிக விரைவில் அதாவது ஒரு மாதத்திற்குள் உங்கள் அனைவரிடமும் தமிழில் பேச முயற்சி செய்கின்றேன் அனைவருக்கும் மாலை வணக்கம் . தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

சென்னை  மீனம்பாக்கம் பயிற்சி  கேந்திரத்தின் முதல்வர் திரு சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு மிக சுருக்கமாக தோழர் நடராஜனை பாராட்டி, அவர் ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

மாநிலச் செயலாளர் தோழர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் AITUC அகில இந்திய செயலாளர் தோழர் டி எம் மூர்த்தி, தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் M. ராதாகிருஷ்ணன், தோழியர் ராஜேஸ்வரி மூர்த்தி,  தோழியர் காமாட்சி ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கு பெற்று தோழரை வாழ்த்தினார்கள்.

தோழர் மூர்த்தி அவர்கள் தனது வாழ்த்துறையில் நீங்கள் எல்லாம் அவர் 40 ஆண்டு காலம் ஆற்றிய பணிகளை பாராட்டி சிறப்பு செய்தீர்கள். நாங்கள் இனிமேல் அவர் எங்களது இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்காக வாழ்த்த வந்திருக்கின்றோம். தொலைத்தொடர்பு துறையில் சாதாரண தொழிலாளியாக பணியை தொடங்கி இன்று இளநிலை பொறியாளராக பணி ஓய்வு பெறுகின்றார்.

திருவாரூர் அருகில் கிராமத்தில் வாழ்க்கை துவங்கி சென்னை மாநகரத்தில் வாழ்க்கை நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அனைத்து  பெருமைகளும் அவரது துணைவியாருக்கு தான் சாரும் .மகன் விரும்பியப்படியே திருமணத்தை  சிறப்பாக நடத்தி வைத்தவர். தோழர் நடராஜனின் துணைவியார் அதை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டது தான் மிகவும் சிறப்பம்சம் ஆகும். 

தோழா நடராஜனை பொறுத்தவரை அலுவலகப் பணிகளுக்கு மட்டும் ஓய்வு ஒழிய தொடர்ந்து தொழிற்சங்க பணிகளில் வேகமாக செயல்பட வாழ்த்துக்கள்.

மாநில பொதுச்செயலாளர் தோழர்  M.ராதாகிருஷ்ணன் அவர்கள்  தனது உரையில் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
சென்னையில் வாழ்வது என்பது ஒரு போராட்டம் தான். அதற்கு மத்தியிலும் அவர்கள்  இல்லத்தில் எப்பொழுதும் சொந்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களையும் அன்புடன் தோழமையுடன் அரவணைக்க கூடியவர்.
AITUC தமிழ் மாநில சங்கத்தில் இணைந்து  செயல்பட தோழமையுடன் அழைக்கின்றேன். தோழருக்கும், தோழர் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.

கன்டோன்மெண்ட் சங்கத்தின் CBEU  பொதுச் செயலாளர் தோழர் P.பாலகிருஷ்ணன் அவர்கள் தோழர்களுடன் பங்கு பெற்று தோழரை வாழ்த்தினார்.

தோழியர் ராஜேஸ்வரி மற்றும் தோழர் காமாட்சி இருவரும் தோழருக்கு சால்வை  அணிவித்து கௌரவித்தார்கள்.

மாநில செயலாளர் பணி ஓய்வு பாராட்டு விழாவில் மேனாள் AIBSNLEA பொதுச் செயலாளர் தோழர் K.சிவகுமார், TEPU சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர்  தோழர் J. விஜயகுமார், FNTO சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் S. லிங்கமூர்த்தி, TEPU சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் M.ரவீந்திரன்,STR பகுதியின் சார்பாக தோழர் ராமகிருஷ்ணன், BTEU சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் M.சுந்தரேசன் ஆகியோர் பங்கு பெற்று மாநிலச் செயலாளர் நற்பண்பையும் மற்றும் அவரது எளிமையான அணுகுமுறையும் பாராட்டி அனைவரும் கௌரவித்தார்கள்.

குடந்தை தோழர் MSR, ஓய்வு பெற்ற நல சங்கத்தின் மாநில செயலாளர் AIBSNLPWA தோழர் S. சுந்தரகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் Y. மில்டன், தோழர் நடராஜன் உறவினரும், தோழரை நமது துறைக்கு அறிமுகப்படுத்திய ஓய்வு பெற்ற DE STR தோழர் A. ஆனந்த ராமன் ஆகியோர் மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள்..

SNEA சங்கத்தின்  மாநில செயலாளர் தோழர் G.  வளனரசு நிகழ்ச்சியில் முழுமையாக பங்கு பெற்று தோழரிடம் தலைமை அலுவலகத்தில் உள்ள உறவுகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்து  பாராட்டுரை வழங்கினார். 
தோழர்  நடராஜனும் நானும் சென்னை தலைமை அலுவலகத்தில் ஒரே நேரத்தில் தொழிற்சங்கத்திற்காக மாற்றலாகி வந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

NFTE  நிகழ்ச்சியில் தொடர்ந்து  பங்கேற்றுக் கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். முதன் முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் NFTE இயக்கத்தின் மாவட்ட மாநாட்டில் அதிகாரி சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றியதை பெருமையாக  நினைவு படுத்தினார்.

AUAB தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது அருமை தோழர் நடராஜன். அனைவரையும் அரவணைப்பதிலும்  தோழமையுடன் அணுகுவதிலும் தோழர் நடராஜனுக்கு நிகர் தோழர்  நடராஜன் மட்டும் தான்.

எந்த சூழ்நிலையும் மிக அமைதியாக,  பதட்டப்படாமல் செயல்படக் கூடியவர். 
மிக எளிமையாக அணுகக் கூடிய தோழனாக செயல்பட்டவர். கருப்பு சட்டைக்கு இலக்கணமாக வாழ்க்கையை நடத்தியவர். தன்னுடைய மகனின் திருமணத்தை மிக எளிய முறையில், சாதிய மறுப்பு திருமணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று நடத்திக் காட்டியவர். 

தோழரின் ஓய்வு காலம் சிறக்க  snea தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

AIBSNLEA சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் S.. ஆனந்தன் தனது வாழ்த்துறையில் தோழர் நடராஜன் போன்று தோழமை மிக்க தோழனை பார்ப்பது மிகவும் அரிது. எங்களது அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைக்கும் தோழர் நடராஜன் உடைய பங்கு பெரியது. தோழரின் ஓய்வு காலம் சிறக்க AIBSNLEA தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

AIGETOA சங்கத்தின் மாநில பொறுப்பாளர் தோழர் செந்தில்குமார் பங்கு பெற்று தோழரை வாழ்த்தினார். தோழருடன்  தலைமை பொது மேலாளர் அலுவலக செயலாளர் தோழியர் ராஜேஸ்வரி மற்றும் மாநில உதவி செயலாளர் அருமை தம்பி தோழர் K  அருண் பிரசாத் ஆகியோர் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

நமது இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் தோழர் S  தமிழ்மணி, தோழர் K. சேது மற்றும் தோழர் P. காமராஜ் ஆகியோர் பங்கு பெற்று தோழரை மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநில செயலாளர் தோழர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக விழா நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாகவே 29 7 2024 அன்று நமது இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர்  C.C Singh அவர்கள் சென்னை வந்து சேர்ந்தார். 
30 7 2024 காலையில் தலைமை அலுவலகத்தில் உள்ள தமிழ் மாநில சங்கத்தின் அலுவலகத்திற்கு வருகை புரிந்து தோழர்களுடன் கலந்து உரையாடினார்.
தேசிய செயலாளர் ஸ்ரீதர் இரண்டு முக்கிய பிரச்சினைகளில் பற்றி ஒரு தெளிவான குறிப்பினை தந்து ஊழியர்களின் உணர்வுகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார் .
1. மருத்துவக் காப்பீடு திட்டம் 
2. மூன்றாவது ஊதிய குழு. 
 
ஐந்து ஆண்டுகள் முடித்து  Rule 8 விதியின்படி சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டிய  இரு JE தோழர்கள் சந்தித்து முறையிட்டனர்.

தலைமை பொது மேலாளர் அவர்களை நமது பொதுச் செயலாளர்  மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
Rule 8  JE கேடர் மாற்றல்களை குறிப்பாக கல்கத்தா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு செல்வதற்கான தோழர்களின் விண்ணப்பங்களை கனிவுடன் அணுக வலியுறுத்தினார்.

பாராட்டு விழாவில் துவக்கத்திலிருந்து முடிகின்ற வரை முழுமையாக பங்கேற்று விழாவை ரசித்துக் கொண்டிருந்தார்.
இரவு 7 மணி 30 நிமிடத்திற்கு நிறைவுறை ஆற்றினார்..

தனது நிறைவுறையில் நான் காலையிலிருந்து கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறேன்.
தோழர் நடராஜன் மேல் தோழர்கள் அன்பை பொழிந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் என்றைக்கும் மத்திய சங்கத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளது. தோழர் ஜெகன் முதல் இன்று உள்ள நடராஜன் வரை தமிழகத்திடம் ஆலோசிக்காமல் எந்த முடிவும் மத்திய சங்கம் பொதுவாக எடுப்பதில்லை.

 மத்தியில் கூட்டணிகள் அமைவதற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. தொழிற்சங்க முன்னோடிகள்  தோழர்கள் ஆர்கே, பட்டாபி,  சேது போன்றவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள்.

தோழர் நடராஜன் தேசிய குழுவில் உறுப்பினராக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றார். 
தினந்தோறும் மத்திய சங்கத்துடன் தொடர்பில் இருக்கக்கூடியவர். 
மிக  தோழமையுடன் அனைவரிடமும் அணுகக் கூடியவர்.
மத்திய செயற்குழுவில் மிகத் தெளிவாக கருத்துக்களை முன் வைப்பவர்.

தொழிற்சங்க பணியில் 40 ஆண்டு காலம்  தொய்வின்றி ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருந்த அவரது குடும்பத்தாருக்கு எனது நன்றிகளும்  பாராட்டுகளும்.

அனைத்து தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர்களும் மற்றும் அதிகாரி சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்றது மிகவும் பெருமையாக கருதுகின்றேன்.

தமிழகம் முழுவதும் இருந்து நிறைவான தோழர்கள் பங்கேற்று இருப்பது நடராஜனின் மேல் உள்ள அன்பையும் அக்கறையும் வெளிப்படுத்துகின்றது.

தோழர் நடராஜன் பணி ஓய்வு காலம் சிறக்க மத்திய சங்கத்தின் சார்பாக  வாழ்த்துகள்.

நிறைவாக மாநில செயலாளர் தோழர் நடராஜன் ஏற்புரை ஆற்றினார். தொலைத் தொடர்பு துறைக்கு வருவதற்கு முக்கிய காரணியாக அமைந்திருந்த என்னுடைய மாமாவும் , ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் STR ஒரு திரு A. அனந்தராமன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

எனக்கு கொடுக்கப்பட்ட பணியினை அதாவது மாநிலச் செயலாளர் பொறுப்பை  நல்ல முறையில் செய்திருக்கின்றேன் என்ற மனத் திருப்தியுடன் நான் ஓய்வு பெறுகின்றேன்.
எனக்கு வழிகாட்டியாக அமைந்திருந்த மூத்த  தோழர்கள் ஆர்கே, பட்டாபி ,சேது அவர்களுக்கு நன்றிகளை பதிவு செய்கின்றேன்.
என்னை நல்ல முறையில் செதுக்கிய திருவாரூர் கிளைக்கு  நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.
2016 இல் வேலூர்  மாநில மாநாட்டில் மாநிலச்  செயலாளராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு பெற்றேன்.
நான் உடனடியாக  தஞ்சையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி தலைமையகத்தில் பணியாற்ற துவங்கினேன்.
அன்றைய மாநில தலைவர்
 தோழர் P. காமராஜ் , மாநிலத் தலைவர் தோழர்  G S.முரளிதரன், CGM அலுவலக மாவட்ட செயலாளர் தோழர் மனோஜ்  ஆகியோர் மாநில தொழிற்சங்கப் பணியில் எனக்கு ஆலோசனை வழங்கி மேலும் மாநில சங்க செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
அவர்களுக்கு எனது நன்றிகளை பதிவு செய்கின்றேன்.

 தலைமை பொது மேலாளர்
அலுவலகத் தோழர்கள் G.ஜெயச்சந்திரன், TV பாலு களப்பணி ஆற்றுவதில் பெரிதும் உதவி செய்துள்ளனர்.
அவர்களுக்கும் எனது நன்றிகள். 

மாநில சங்க பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த தோழர் வேலூர் மதியழகன், தூத்துக்குடி பாலு, விருதுநகர் மதிவாணன், கடலூர் நீலகண்டன் ஆகியிருக்கும் எனது வணக்கங்களை பதிவு செய்கின்றேன்.

மாநில சங்க சிறப்பான செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்டச்  செயலாளர்களுக்கு எனது நன்றிகள்.

தொழிற்சங்க ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் தலைமை  பொது மேலாளர் அலுவலகத்தில் மிக தோழமையுடன் அணுகிய அனைத்து தொழிற்சங்க மாநில சங்க நிர்வாகிகளுக்கும்  எனது நன்றிகள்.

அன்றாடம் எனக்கு உதவி செய்து கொண்டிருந்த எனது குடும்பத்தாருக்கும், தமிழ் மாநில  AITUC சங்கத்திற்கும் எனது நன்றிகள்.
பாராட்டு விழாவில் முழுமையாக பங்குபெற்ற மத்திய சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களுக்கும் எனது நன்றிகள். 

ஜெகன் நினைவத்தில் அமர்ந்து வாழ்க்கை நடத்துவேன் என்று கற்பனை கூட நான் செய்யவில்லை.
அதற்கு வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியுடன் எனது உரையை நிறைவு செய்கின்றேன். 

கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் நன்றி கூற விழா இரவு 8 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

நிறைவுப் பகுதி

தமிழ் மாநில செயற்குழு முடிவின்படி மாநில செயலாளர் தோழர் K.நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழா ,மாநில தலைவர் தோழர் G.S. முரளிதரன் தலைமையில் 30 7 2024 மதியம் 2:30 மணி முதல் இரவு 8 மணி 30 நிமிடம் வரை சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் 350 க்கு மேற்பட்ட தோழர்கள்  தோழியர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

தமிழ் மாநில சங்கத்தின் மாநில நிர்வாகிகளும் மற்றும் மாவட்டச் செயலாளர்களும் வாழ்த்துவதற்கான வாய்ப்பு இல்லாதது மிகப் பெரிய வருத்தம் தான்.
தமிழ் மாநில சங்கத்தின் இயக்கப் பணியில் அன்றாடம் தொடர்பில் இருக்கின்றவர்கள் ஒரு சில நிமிடம் வது வாழ்த்தியிருந்தால் நிகழ்வு முழு வெற்றியை பெற்றிருக்கும். 

அனைத்து மாவட்ட சங்கங்களும் மாநிலச் செயலாளரின் பணியை பாராட்டி கௌரவித்தனர்.

மேனாள் மாநில பொருளாளர்  தோழர் L.  சுப்புராயன் கலந்து கொண்டு மாநில செயலாளர் தோழர் நடராஜனை வாழ்த்தி மிக சுருக்கமாக உரையாற்றினார்.

தோழர் நடராஜன் குடும்பத்தின் சார்பாக அவருடைய அண்ணன் மகன் தனது சித்தப்பாவின்  சிறப்பு இயல்பையும், NFTE இயக்கத்தின் பெருமைகளையும் மிக அழகாக எடுத்துக் கூறினார். திருவாரூர் மே தின நிகழ்ச்சிகள் மிகவும்  உணர்ச்சிகரமாக இருக்கும். எனது சித்தப்பா குடும்பத்திலும் மிக அமைதியாக அனைவரும் அனைவரிடமும் மிகவும் தோழமையுடன் இருப்பார். நான் அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். எனது தந்தையும் பிஎஸ்என்எல் பணிபுரிந்து இயற்கை எய்திவிட்டார். 
அவரின் சிறப்பான குணத்திற்கு
எனது சித்தப்பா என்றைக்கும் மகிழ்ச்சியாக வாழ்வார் என்று பதிவு செய்து தனது உரையை நிறைவு செய்தார்..

கடலூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலாளர் தோழர் குழந்தைநாதன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் முழுமையாக பங்கேற்றனர். விழா   துவக்கத்திலிருந்து நிறைவு  பெறுகின்ற வரை பங்கு பெற்றனர். 

கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக  விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

 தோழர் நடராஜனுக்கு பாராட்டு சிறப்பு விழா என்பதைவிட , NFTE தமிழ் மாநில சங்கத்தின் செயல்பாட்டிற்கும் மற்றும் தோழமைக்கும் அங்கீகரமாக கருதக்கூடிய விழாவாக அமைந்திருந்தது .

விழாவை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த தலைமை பொது மேலாளர் அலுவலக மாவட்ட செயலாளர் தோழர் மனோஜ், மற்றும்  களப்பணி ஆற்றிய தோழர் ஜெயச்சந்திரன், தோழர் பாலு மற்றும் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.


















Friday, July 26, 2024

பணி ஓய்வு பாராட்டு விழா

மாவட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக கடலூர் பொது மேலாளர் அலுவலக கிளையின் சார்பாக இந்த மாதம் பணி ஓய்வு பெறுகின்ற தோழர் R.செல்வகுமார் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா கிளைத் தலைவர் தோழர் வெங்கட் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநில உதவி தலைவர்  தோழர் A.சகாய செல்வன், மாநில உதவி செயலாளர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர்  R.பன்னீர்செல்வம் தோழர்  S பலராமன் தோழர் K. ராகவன் ஆகியோர் தோழரின் சிறப்பான பண்புகளை பாராட்டி உரையாற்றினார்கள். 

மாவட்டத் தலைவர் தோழர் D. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் தோழர் D.குழந்தைநாதன் இருவரும் தோழர் செல்வக்குமாரின் பணியினை  பாராட்டி உரையாற்றினார்கள்.

ஓய்வு பெற்ற  நல சங்கத்தின் கடலூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் E விநாயகமூர்த்தி மாநிலச் செயலாளர் நடராஜ் அவர்களையும் பாராட்டி, தோழர் செல்வகுமாரின் அலுவலகப் பணி மற்றும் தொழிற்சங்க பணிகளை மிக விரிவாக எடுத்துச் சொல்லி அவரை பாராட்டி கௌரவித்தார்
.
 தோழர் குமரகுரு JTO OFC பராமரிப்பு அவர்கள் பங்கு பெற்று தோழரின்  பணியை பற்றி குறிப்பிட்டு பாராட்டி கௌரவித்தார்.

தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் மாவட்ட செயற்குழு நிகழ்ச்சி நிரல் மற்றும் வருங்கால கடமைகள் ஆகியவற்றை மிக தெளிவாக பதிவு செய்ததுடன் தோழர் செல்வகுமார் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் அவரை பாராட்டி சிறப்பான உரையாற்றினார். 

OFC பராமரிப்பு  பகுதியில் மிகக் கடுமையாக பணியாற்றியவர்.  தொழிற்சங்கத்தில் சல்லிவேராக செயல்பட்டவர்.
 எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர். அனைவரிடமும் தோழமையுடன் பழகக் கூடிய தோழர். 

 மாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா ரெண்டுக்கும் சேர்த்து அனைத்து தோழர்களுக்கும் சிறப்பான  மதிய உணவை ஏற்பாடு செய்துள்ளார்..

பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள். 

நிறைவாக மாநில செயலாளர் தோழர் K.நடராஜன் இன்றைய  தொழிற்சங்க செய்திகள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி போக்குகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 

மாநில மாநாட்டை மிக சிறப்பாக கடலூர் மாவட்டத்தில் நடத்துவதற்கான நல்லதொரு முடிவை எடுத்தமைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்..

 தோழர் செல்வகுமார் உடன் நானும் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகின்றேன். தோழர் செல்வகுமார் போன்ற உறுதிமிக்க தோழர்கள் செயல்பாட்டால் தான்  இயக்கம் வலுவாக இருக்கின்றது.
பணி ஓய்வு காலம் சிறக்க மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் .

தோழர் செல்வகுமார் மிக சுருக்கமாக ஏற்புரை ஆற்றினார். 

கிளை சங்கத்தின் சார்பாக தோழர் A.சகாய செல்வன் சாலையை அணிவித்து கௌரவித்தார். மாநிலச் செயலாளர் நினைவு பரிசு வழங்கினார்.மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தோழர் D. குழந்தைநாதன் சால்வைஅணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் மாவட்ட சங்கத்தின் சார்பாக நினைவு பரிசினை வழங்கினார்.
 
மூத்த தோழர் S. தமிழ்மணி,  V.நீலகண்டன், தோழரின் நீண்ட நாள் நண்பரும் இயக்கத்தின் முன்னணி தோழர் V. இளங்கோவன், ஓய்வு பெற்ற நல சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தோழர் P.ஜெயராமன், மாவட்டத் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிறைவான தோழர்கள் பங்கு பங்கு பெற்று தோழரை கௌரவித்தனர். 

மாவட்ட உதவி செயலாளர் தோழர் R  மலர்வேந்தன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

தோழர் செல்வகுமார் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பங்கு பெற்றது சிறப்பானதாகும்.



கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தோழர் S. பரதன், OS அவர்கள் நமது இயக்கத்தில் இணைந்துள்ளார். 

பி எஸ் எல் யூ இயக்கத்தில் மாவட்ட  உதவி செயலாளராக நீண்ட நாட்களாக செயல்பட்டவர். மாற்று இயக்கத்தில் இருந்த பொழுதும்  தோழமையை கடைபிடித்தவர்.நியாயமாக செயல்படக்கூடிய தோழர்.நமது மாநில செயலாளர் தோழர் K . நடராஜன் அவர்கள் மாவட்ட செயற்குழு  நிகழ்வின் போது தோழர் பரதன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
தோழர் பரதனுக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, July 17, 2024

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். 

இன்றைக்கு 17.07.2024 நடைபெற்ற இணைய வழி கூட்டத்தை மாநிலத் தலைவர் தோழர் G.S.முரளிதரன் அவர்கள் தலைமையேற்று நடத்தி தந்தார்கள்.

தனியார் செல்பேசி நிறுவனங்கள் மிகக் கடுமையாக 17% முதல் 27% வரை கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.  இந்த சூழ்நிலையில் உபயோகிப்பாளர்கள் பலரும் நமது BSNL நிறுவனத்தை நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் SANCHAR AADHAR கிடைக்காமலும் , சில Technical error இருப்பதும் நம் நிறுவனம் நோக்கி வரக்கூடிய வாடிக்கையாளர்களை சோர்வடையச் செய்கிறது. எனவே இதை சரி செய்திட மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அதை சரி செய்திடக்கோரி மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.

குடந்தை மாவட்டச் செயலரும் மாநிலத் துணைச் செயலாளருகிய தோழர் விஜய் ஆரோக்கியராஜ் துவக்கவுரை ஆற்றினார்.

அதைத்தொடர்ந்து தஞ்சை, கடலூர்,திருச்சி,காரைக்குடி, பாண்டிச்சேரி,தூத்துக்குடி, விருதுநகர்,மதுரை,தர்மபுரி, வேலூர் , குன்னூர்,கோவை, ஈரோடு மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றும் தோழர்கள் தோழியர்கள் என 25 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்று தங்களுடைய மேலான கருத்துக்களை வழங்கினார்கள்.

அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளை ஒருமனதாக எடுத்து அதனை மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கடிதம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

1. உடனடியாக sanchar Aadhar எந்தவித பிரச்சினையும் இன்றி தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
2. மாவட்ட அளவில் MNP மற்றும் இதர விஷயங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை கவனித்திட, களைந்திட nodal officer நியமிக்கப்பட வேண்டும். 

3. Clerical staff போதுமான அளவில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இல்லாத காரணத்தால் apprenticeship முறையில் பணி அமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

4. வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வரக்கூடிய உபயோகிப்பாளர்களை guide செய்திட helpdesk அமைத்திட வேண்டும். 

5. SSA அளவில் உபயோகிப்பாளர்களை கவர்ந்திடும் வண்ணம் விளம்பர FLEX வைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
6.  Franchise Tender period முடிவுற்ற வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட சங்கம் மூலமாக கடிதம் கொடுத்து அதன் நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தை மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிட வலியுறுத்த வேண்டும்.

7.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தவிர மாவட்ட சங்கங்கள் சந்திக்கக்கூடிய இது சம்பந்தமான இதரப் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதமாக கொடுத்து அதன் நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.

நாகர்கோயில் மாவட்ட செயலாளர் தோழர் லட்சுமண பெருமாள் மேளாவில் இருப்பதனால் அந்தப் பகுதியில் இருந்து தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்திருந்தார். திருநெல்வேலி மாவட்டச் செயலர் தோழர் நடராஜன்,  அகில இந்திய செயலாளர் தோழர் ஸ்ரீதர் மற்றும் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பழனியப்பன் ஆகியோர்கள் தவிர்க்க முடியாத சொந்த வேலை காரணமாக வர இயலவில்லை என தெரிவித்திருந்தார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் ஹென்றி அவர்கள் மருத்துவமனை சென்றிருந்த காரணத்தால் மாவட்டத்தின் சார்பாக தோழர்களை பங்கேற்கச் செய்திருந்தார். முன்னாள் அகில இந்தியச் செயலர் தோழர் காமராஜ் மற்றும் அல்லிராஜா ஆகியோர்கள் கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள். 17.07.2024
இன்றைக்கு விடுமுறையாக இருந்த போதும் கூட கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய மேலான கருத்துக்களை வழங்கிய அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். நன்றிகள்.

தோழமையுடன் ,
K.Natarajan ,
Cs NFTE-BSNL,
TN Circle,
Chennai,
17.07.2024.

Monday, July 15, 2024

தோழர்களே வணக்கம். 

தனியார் செல்பேசி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கிற நேரத்தில் வாடிக்கையாளர்கள் பலரும் நமது பிஎஸ்என்எல் நிறுவனம் நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமது உபயோகிப்பாளர்கள் தளத்தை விரிவு படுத்துவதற்கு தோழர்கள் தல மட்டத்தில் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தல மட்டத்தில் அதற்கு ஏதுவான சூழல்கள் நிலவவில்லை. உதாரணமாக

SANCHAR SOFT மற்றும் MNP போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்தப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் அதனை சரி செய்திடக்கோரி மாநில நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திடவும் ஏதுவாக 17.07.2024 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாநில தலைவர் தோழர்  G.S. முரளிதரன் அவர்கள் தலைமையில் ONLINE MEETING நடைபெற உள்ளது.

தல மட்டத்தில் நமது தோழர்கள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளை விரிவாக பேசிட மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் தங்களது மேலான கருத்தை கூறி பிரச்சனை தீர்விற்கு ஆலோசனை வழங்கிடவும் கூட்டத்தை செழுமைப்படுத்திடவும் வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன், 
K.Natarajan,
Cs NFTE-BSNL,
TN Circle,
Chennai,
15.07.2024.

Saturday, June 29, 2024

பணி ஓய்வு பாராட்டு விழா  29 6 24

கடலூர் மாவட்டத்தில் இன்று மூன்று ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். 

தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக பணி ஓய்வு விழா நடைபெறுகின்ற மாவட்டம் நமது மாவட்டம். அந்த சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று நமது பொது மேலாளர் அவர்கள் தலைமையில் காலை சரியாக பதினோரு மணிக்கு கடலூர் தொலைபேசி நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது மேலாளர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

நிர்வாகத்தின் சார்பில் பங்குபெற்ற அனைவரையும் ,உதவி பொது மேலாளர் S&M திருமதி S. சசிகலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

1. தோழர் E. கன்னியப்பன் TT செஞ்சி 
2. தோழர்  M.D.S.சுந்தர் சிங் டேவிட் ஜான்சன்  TT கடலூர் 
3. தோழர் T. கலியபெருமாள் . TT விருத்தாச்சலம்
 
தோழர் E கன்னியப்பன் அவர்கள் நேரடியாக குரூப் டி பதவியில் பணியில் சேர்ந்து இன்று டெலிகாம் மெக்கானிக்காக பணி ஓய்வு பெற்றார். தனது 35 ஆண்டு சேவை காலம் முழுவதும் திண்டிவனம்   மற்றும்  செஞ்சி பகுதியில்  மட்டுமே சிறப்பாக பணிபுரிந்து இன்று ஓய்வு பெறுகின்றார். 
தோழர் MDS சுந்தர் சிங் டேவிட் ஜான்சன் அவர்கள் மஸ்தூர் சேவை  உட்பட 35 ஆண்டுகால சேவையை கடலூர் பகுதியில் மட்டுமே சிறப்பாக செய்து இன்று பணி ஓய்வு பெற்றார். மிக அமைதியான நல்ல பண்பாளர். 

தோழர் T. கலியபெருமாள் தனது சேவை காலம் முழுவதும் விருதாச்சலம் பகுதியில் அனைத்து  பிரிவுகளிலும் பணி புரிந்துள்ளார். விருதாச்சலம் டெலிகிராஸ் பகுதி, வெளிப்புற பகுதி, சி எம் பகுதி, விற்பனை பகுதி, டிரான்ஸ்மிஷன் பகுதி மற்றும் நிறைவாக இன்ஃப்ரா பகுதியிலும் திறம்பட பணியாற்றுள்ளார். மஸ்தூர் காலம் முதல் இன்று வரை நமது தொழிற்சங்கத்தின் உறுதிமிக்க தோழனாக செயல்பட்டுள்ளார் அனைத்து தொழிற்சங்க இயக்கங்களையும்  முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
மூன்று தோழர்களும் விருப்ப ஓய்வுக்கு விருப்பம் கொடுக்காமல் உறுதியாக இருந்து வயது மூப்பின் அடிப்படையில்  இன்று ஓய்வு பெறுகின்றனர்.
மூவரும் தங்கள் குழந்தை செல்வங்களுக்கு மிக நல்ல முறையில் கல்வி செல்வத்தை கொடுத்துள்ளனர்.

மூவரும் மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதற்கு முக்கிய காரணமே அரசு பென்ஷன் பெறுவது தான்..அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் பங்கு பெற்று மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர்  தோழர் D.குழந்தைநாதன் பங்கு பெற்று மூன்று தோழர்களின் சிறப்பு  இயல்புகளை  மிக நல்ல முறையில் எடுத்துரைத்தார் .மூவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்வதில் மிகச் சிறந்து விளங்கினர். நமது நிறுவனம் கடுமையான சூழ்நிலையிலும் நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த விழாவில் பங்கு பெற்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் , பணி ஓய்வு பெறுகின்ற  தோழர்களின் பணி ஓய் காலம் நல்லபடியாக அமைய மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்தார். 

நிர்வாகத்தின் சார்பில்  துணைப் பொது மேலாளர் CM உயர்திரு ஜெயகிருஷ்ணன் மற்றும் நிதி ஆலோசகர் திருமதி பியுல நியூட்ராலிட்டி மிக சுருக்கமான வாழ்த்துரை வழங்கினார்கள். 

 பொது மேலாளர் அவர்கள் தனது தலைமை உரையில் கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் செயல்பாடுகள் பற்றியும், அடுத்த கட்ட வளர்ச்சி பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக மிக விரைவில் சிதம்பரம் ,திண்டிவனம் பகுதிக்கு 4 G சேவை மிக விரைவில் கிடைக்கும் என்று உறுதிப்பட கூறினார்.
FTTH speed பிரச்சினை தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் இன்னும் வெளிப்புற பிரச்சினைகள் இருக்கின்றன. அதை மிக விரைவில் நல்லதொரு மாற்றம் வருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்திற்கு புதிய தலைமை பொது மேலாளர் அவர்கள் பணியில் சேர்ந்துள்ளார்கள். கர்நாடகா மற்றும் அந்தமான் பகுதியில் பணிபுரிந்தவர். அவர் நிறைய எதிர்பார்க்கின்றார். அதற்கு ஏற்றவாறு நமது செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 

இன்று பணி ஓய்வு பெறுகின்ற மூன்று ஊழியர்களும்  மிகச் சிறப்பான பணியை செய்துள்ளார்கள் என்பதை  அவர்களது குறிப்புகள் நன்கு  உணர்த்துகின்றன. மூவரும் விருப்ப ஓய்வுக்கு செல்லாமல் பணி ஓய்வு பெறுவது என்பது மிகச் சிறந்தது.

மூவரும் தற்காலிக சேவையை கணக்கில் எடுத்துக் கொண்டால் 35 ஆண்டுகளுக்கு மேலாக நமது இலக்காவில் திறம்பட பணியாற்றுள்ளார்கள்..
தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்துள்ளார்கள்.சிறப்பான பணியை செய்வதற்கு மிகவும் உதவிட்ட அவரது குடும்பத்தாருக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மூவரின்  ஓய்வு காலம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

பணி ஓய்வு பெற்ற மூன்று  தோழர்களும் மிக சுருக்கமாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

JTO ஜென்ரல் அவர்கள் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ..

மாவட்ட நிர்வாகத்தால் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்.

Friday, June 28, 2024

பணி ஓய்வு பாராட்டு விழா💐

அருமை தோழர்களே! வணக்கம்.
30-6-2024 அன்று ஓய்வு பெறும் தோழர்,T.கலியபெருமாள்-TT அவர்களுக்கு  விருத்தாசலம் கிளையின் சார்பாக 28-6-2024 மாலை விருத்தாசலம்  தொலைபேசி நிலையத்தில் கிளைத்தலைவர் தோழர் முத்துவேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தோழர் கணேசன் மாவட்ட அமைப்புச்செயலர் அனைவரையும் வரவேற்று தோழர் கலியபெருமாளின், இலாக்கா மற்றும் , தொழிற்சங்கபணியின் செயல்பாட்டினை விரிவாக எடுத்துரைத்தார்.

தோழர் பகத்சிங் விழாவினை துவக்கிவைத்து,தோழர் கலியபெருமாள் NFTE இயக்கத்தின் விசுவாசமான உறுப்பினர்,திட்டக்குடி பென்னாடம் கிளையின் பொருளராக திறம்பட செயலாற்றியது,இலாக்கா பணியையும் சிறப்பாக செய்ததை நினைவு கூர்ந்தார்.

தோழர்கள்  செல்வராஜ் NFTE மாவட்ட,துணைத்தலைவர் ,AIBSNLPEWA விருத்தாசலம்பகுதி கிளைபொருளர்  கிருஷ்ணமூர்த்தி,  மோகன்ராஜ் , கிருபாகரன்-JTO ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர் கலியபெருமாள் அவர்களுக்கு கிளையின் சார்பாக,சந்தனமாலை,சால்வை அனுவித்து,நினைவுபரிசினை கிளைச்செயலர் தோழர் விஸ்வநாதன்  கிளைஉறுப்பினர்களுடன் இணைந்து வழங்கினார்.

  மாவட்டச்செயலர் தோழர் குழந்தைநாதன் ,தோழர் கலியபெருமாள் அவர்களுக்கு கடலூர் மாவட்டசங்கத்தின் சார்பாக சால்வை,நினைவுபரிசினை வழங்கி,

சிறப்புரையாற்றினார்.தனது உரையில்,மாநில ,மாவட்ட JCM கூட்டங்களில் பங்கேற்று BSNL,மற்றும் ஊழியர்நலன் சார்ந்த பிரச்சனைகளில் NFTE சங்கம் கூடுதல் கவனம் செலுத்திய அனுபவங்களையும்,இயக்கத்தில் உறுதியாக இருந்திட்ட தோழருக்கு விருத்தாசலம் கிளை சிறப்பானமுறையில் பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்தமைக்கு மாவட்டசங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து,தோழரின் பணிஓய்வுகாலம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாநில உதவிச்செயலர் தோழர் சுந்தரமூர்த்தி,தோழர் கலியபெருமாளின் இலாக்கா மற்றும்இயக்க பணியினை பாராட்டி,குறைவான உறுப்பினர்களைக்கொண்டு நிறைவாக பணி ஓய்வு விழாவினை நடத்தி தோழரை கவுரப்படுத்தியதையும்,நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்குபின் உள்ள அரசியல் சூழல்,புதியதாக பொறுப்பேற்றுள்ள நமது துறையின் அமைச்சர் மரியாதைக்குரிய ஜோதிஆதித்தியா சிந்தியா இன்று டெல்லி நமது கார்பெரட் அலுவலகத்திற்கு வருகைபுரிந்தது ,தமிழகத்தில் 4G சேவை ஐந்து மாவட்டங்களில் துவங்கியது,விரைவில் ஊதிய மாற்றம் பெற்றிடும் சாதகமான சூழ்நிலை என நம்பிக்கையான செய்திகளோடு நிறைவுரையாற்றினார்.தோழமையின் அடையாளமாய் விருத்தாசலம் கிளையின் சார்பாக  பணியிலிருந்து ஓய்வுபெற்ற தோழர் சுந்தரமூர்த்திக்கு சால்வை அனுவித்து சிறப்பித்தனர்.தோழர் கலியபெருமாள் தனது ஏற்புரையில் இன்று வளமாக இருப்பதற்கு NFTE தான் காரணம்,இப்பகுதியில் இயக்கத்தில் உறுதியாக செயல்பட தோழர் பகத்சிங்கின் தன்னமில்லா செயல்பாடுதான் எனக்கூறி எனக்கு சிறப்பானமுறையில் பணி ஓய்வு விழாநடத்தி என்னை கெளரவப்படுத்திய கிளைக்கும்,வாழ்த்துரை வழங்கிய மாநில  மாவட்டச்சங்க ,,ஓய்வூதியர்சங்க நிர்வாகிகள்,மற்றும் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றிதெரிவித்தார்.

தோழர் முத்துராமன் கிளையின் அமைப்புச்செயலர்  விழா சிறப்பாக நடைபெற திட்டமிட்டு செயலாற்றிய தோழர்கள் விஸ்வநாதன்,கணேசன் செல்வராஜ் ,முத்துவேல்,வாழ்த்துரை வழங்கிய, பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் கிளையின் சார்பாக நன்றிகூறி விழாவினை நிறைவு செய்தார்.

தோழமையுடன்.... D.குழந்தைநாதன்,
NFTE-BSNL, 
மாவட்ட செயலாளர், கடலூர்.

Wednesday, June 19, 2024

இலக்கிய விழா 

கும்பகோணம் அச்சு வெல்லம் சார்பாக இன்று 19.6.24 மாலை கும்பகோணம் கிரீன் பார்க்  ஹோட்டலில் கலைஞர் நூற்றாண்டு   நிறைவு விழா மற்றும் அச்சு வெல்லம் கலை இலக்கிய துவக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. 

அச்சு வெல்லம் மின் இதழின் ஆசிரியர்  தோழமைக்குரிய தோழர் ,நமது இயக்கத்தின் குடந்தை மாவட்ட செயலாளர் தோழர் விஜய் ,அதன் நோக்கத்தை பற்றியும் இன்றைய விழாவின் முக்கியத்துவத்தை பற்றியும் ,கவிதை போட்டியில் பரிசு வென்றவரின் குறிப்புகளையும், விழாவில் பங்கு பெற்ற அனைத்து நல் உள்ளங்களையும் வரவேற்று உரையாற்றினார்.

தஞ்சை நமது தோழர் வல்லம் தாஜ்மஹால் துவக்க உரையாற்றினார். 
கவிஞர் எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர் தோழர் ரவி சுப்பிரமணியம் மற்றும் கும்பகோணம் நகர துணை  மேயர் உயர்திரு தமிழழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று கவிதை போட்டியில் வென்றவர்க்கும்  (முதல் மூன்று) மற்றும் ஆறுதல் பரிசு இருவருக்கும் அளித்து சிறப்பு செய்தனர்.

 முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் ,இரண்டாவது பரிசு ரூபாய் ஐந்தாயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் 2500 மற்றும் ஆறுதல் பரிசு ரூபாய் 500 அளித்து பரிசு வென்ற தோழர்களை கௌரவித்தனர்.

பரிசளித்து உரையாற்றிய துணை மேயர் மதிப்புக்குரிய திரு 
 சு. ப .தமிழழகன் அவர்கள் கலைஞரின் சிறப்பு இயல்புகளையும் அவருக்கும் கலைஞருக்கும்  உள்ள தொடர்புகளையும் மிகத் தெளிவாக நல்லதொரு தமிழில் எடுத்துரைத்தார். 

தோழர் விஜயின் தோழமையை பற்றியும், எப்பொழுதும் உற்சாகமாக இருக்கின்ற அவரது சிறப்பு அணுகுமுறை பற்றியும் மிகவும் அழகாக பதிவு செய்தார். 

அச்சு வெல்லம் தொடர்ந்து இயங்க வேண்டும். நல்லது ஒரு கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் .எப்பொழுதும் எனது ஆதரவு உண்டு என்று உறுதிபட அறிவித்து , கவிதை போட்டியில் பரிசு வென்ற தோழர்களை வாழ்த்தி உரையை நிறைவு செய்தார். 

பங்குபெற்ற பல தோழர்கள் மிகச் சுருக்கமாக வாழ்த்துரை வாங்கினார்கள் .மேலும் தோழர் விஜயின் துடிப்பு மிக்க செயல்பாட்டை பாராட்டி புத்தகங்களை பரிசளித்து  கௌரவித்தனர்.

மாநில சங்கத்தின் உதவி செயலாளரும், ஜெகன் கலை இலக்கிய பெருமன்றத்தின் பொறுப்பாளரும் ஆகிய தோழர் D. ரமேஷ் பங்கு பெற்று மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.

 தேசிய செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சில கருத்துகளை மிக சுருக்கமாக பதிவு செய்தார்.  இந்த அரங்கம் என்பது எனக்கு புதியது. நான் கலைத்துறையில் அதிக அனுபவம் இல்லாதவன். தமிழக தொலைதொடர்பு ஊழியர் சங்கத்தின் சார்பாக நிகழ்வில் பங்குபெற்ற ,சிறப்பாக நடத்த முயற்சி எடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோழர் விஜய் எனது இயக்கத்தின் மாவட்ட செயலாளர் என்பதில் பெருமை கொள்கின்றேன்.

என்னை பொருத்தவரை தொழிற்சங்க  அரங்கில் போராடுவது கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா செய்வது கோரிக்கை முழக்கம் எழுப்புவது , இரு மொழிகளில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதுதான் எனக்குத் தெரிந்த கலைகள். 

 இந்த அரங்க நிகழ்வுகளை கண்டு ரசிக்க வேண்டும் என்று நான் பங்கெடுத்துக் கொண்டேன். ரசித்துக் கொண்டும் இருக்கின்றேன். 
கலைஞர் நூற்றாண்டு விழா என்பதினால் ஒரு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.  நான் இங்கு நின்று எனது தாய் மொழியில் பேசுவது என்பது தான் சிறப்பான அம்சமாகும் .

இந்தியாவில் இரு மாநிலங்களை தவிர தாய்மொழியின் வளர்ச்சி என்பது மறைந்து அல்லது கரைந்து கொண்டு இருக்கின்றது. நூற்றாண்டுகளாக தாய்மொழிக்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் நமது தாய்மொழி மட்டும் தான் தமிழ் மட்டும்தான் இருப்பதற்கு முக்கிய காரணமே , திராவிட ஆட்சிதான் குறிப்பாக கலைஞரை தான் அந்த பெருமைகள் சாரும்.

இந்தியாவில் ஒரு மாநில கட்சி முதன்முதலாக  ஆட்சியில் அமர்ந்தது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.  இதற்கு முன்பாகவே கேரளாவில் ஆட்சியில் இடதுசாரிகள் அமர்ந்திருந்தாலும், அது அகில இந்திய கட்சியாக  ஆக செயல்பட்டு இருந்தது.

உலக அரசியல் வரலாற்றில்,
ஒரு கட்சியின் 50 ஆண்டுகால தொடர்ந்து தலைவராக செயல்பட்டது தோழர் கலைஞர் மட்டுமே.

96 ஆண்டு  காலம் வாழ்ந்து இந்தியாவில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றிய பெருமை தோழர் கலைஞரை சாரும்.
குறிப்பாக சென்னையில் இருந்து டெல்லி வரை புகைவண்டி மூலம் இரண்டாம் வகுப்பில் ஒரு முறை சென்று வந்தால் இந்தியாவின் நிலைமையை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் வாக்குறுதிகள் பல கூறப்பட்டாலும் முழுமையாக நிறைவேறுவது கிடையாது. ஆனால் நான் பெருமையாக முக்கியமானதாக கருதுவது ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு  என்பதை ஆட்சி  பீடத்தில் அமர்ந்த உடனே  கையெழுத்து போட்டதுதான். (இன்றைக்கு வேண்டுமானால் இலவசமாக இருக்கலாம்)

 நான் சார்ந்திருக்கின்ற தொலை  தொடர்பு ஊழியர் சங்கம் சமூக மாற்றத்திற்காக கடுமையாக போராடி வெற்றி பெற்ற சங்கம். ஆசிரியர் போராட்டங்கள் வங்கி ஊழியர் போராட்டங்கள் போன்ற அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு தந்து முன்னிலை பாத்திரம் வகிக்கின்றது. 
கலைஞர் அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வதில் அவருக்கு நிகர் அவர் தான். அதன் வழியில் தான் இன்றைய  திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுகின்றது. அதனால்தான் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முழுமையான வெற்றி கிடைக்கப்பெற்றது. இந்தியா முழுவதும் இன்னும் ஒன்று பட்டு இருந்தால் இந்தியாவில் நிலைமை மாறி இருக்கும். 

இன்றைய அரசியல் சூழலில் நவீனக் கோயிலாக கருதப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் வென்ற 40 பேரும் ஒன்று சேர்ந்து அதற்கு எதிரான குரல் கொடுக்க வேண்டும் ,கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.

நான் தோழர் விஜய்  பணியை கண்டு பெருமை கொள்கின்றேன் .

அவருக்கு தொழிற்சங்க இயக்கத்தில் பொறுப்புகள் இருக்கின்றன .அந்த பொறுப்பையும் நல்லதொரு முறையில்  செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ,பரிசுகள் வென்ற அனைத்து கவிஞர்களையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.

நிறைவாக கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் கவிதையை பிடிப்பது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். முதல் மூன்று பரிசுபெற்ற கவிதைகளை அழகாக வாசித்து அந்தத் தோழர்களை வெகுவாக பாராட்டினார்.  நவீனக் கவிதைகள் இலக்கிய கவிதைகள் போன்றவற்றை மிக அழகாக மேற்கொள்ளுடன் பாடியும் எடுத்துரைத்தார். 
கும்பகோணம்  தோழர்களுக்கு மற்றும் அச்சு வெல்லம் நண்பர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து குறித்த நேரத்தில் உரையை நிறைவு செய்தார்.

: கும்பகோணம் தொலைத்தொடர்பு ஊழியர் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் முகுந்தன் வழக்கமான தோழமையுடன் என்னை அழைத்து கும்பகோணம் நகர எளிமையான நடைபாதை கடையில் தரமான சிற்றுண்டியை தோழமையுடன் வழங்கி 
சிறப்பு செய்தார்.

நல்ல மழை  பெய்த போதும் ,கவிதை மழை இடைவேளை  இல்லாமல் மிகச் சிறப்பாக சென்றது.

Saturday, June 8, 2024

தொழிற்சங்க ஆசான் தோழர் ஜெகன் 18 ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் D  குழந்தை நாதன் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

பங்குபெற்ற அனைவரும் தோழரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நமது தொழிற்சங்க மூத்த  தோழரும், ஓய்வு பெற்ற நல சங்கத்தின் AIBSNLPWA கடலூர் ஒருங்கிணைப்பாளர்  தோழர் E. விநாயகமூர்த்தி புகழஞ்சலி சிறப்புரையாற்றினார்.

அவர் தனது  புகழ் அஞ்சலி உரையில்  மூத்த தோழர் தமிழ்மணி, மற்றும் தொழிற்சங்க மூத்த தோழர் ஸ்ரீதர் அவையில் இருக்கின்ற பொழுது நான் தோழர் ஜெகனை பற்றி உரையாற்றுவது என்பது அவ்வளவு சால பொருத்தமாக இருக்குமா என்ற ஐயப்பாடு எனக்கு உண்டு. இருந்தாலும் கடலூர் மாவட்ட சங்கம் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

 40 ஆண்டு காலமாக தொழிற்சங்கத்தில் பல்வேறு இயக்கங்களில் போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்று இருக்கிறேன் .குறிப்பாக தோழர் ஜெகன் அவர்களுடன் சேர்ந்து போராடிருக்கின்றேன். அவர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்ற தோழன் என்ற முறையில் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

தோழர் ஜகன் அவர்கள் நமது ஊரில் அதாவது கடலூரில் தான் தனது தொலைத்தொடர்பு வாழ்க்கையை  தொடங்கியவர்.

தொழிற்சங்க பணிகளில் மட்டும் அல்லாமல் சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக கடலூர்  வில்வ நகர் காலனி பகுதியில் குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் களத்தில் இறங்கி சிறந்த சேவை செய்தமைக்காக அன்றைய  தென்னார்க்காடு  மாவட்ட கலெக்டர் அவருடைய சேவையை பாராட்டி கௌரவித்தார்.

தொழிற்சங்கத்தில் தோழர் சிறிலை ஆசனாக ஏற்றுக் கொண்டு தொழிற்சங்கப் பணியை மேற்கொண்டார்.

 வாழ்க்கையில் இறுதி மூச்சு வரை இடதுசாரி கொள்கையை பின்பற்றியவர் பின்பற்றியது மட்டும் இல்லாமல் நடைமுறையில் கடைபிடித்தவர். தமிழகத் தொலைதொடர்பு ஊழியர்களுக்கு இடதுசாரி சிந்தனையை ஊற்றியவர்.
அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றியவர்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மனநிறைவு கொள்கின்றேன்.
அவர் உடல் நலம் குன்றிய பொழுது சென்னையில் அவரது இல்லத்தில்  சந்தித்த பொழுது மிகவும் கவலை கொண்டேன். 
அவரது இறுதி நிகழ்ச்சியில் கடலூர் தோழர்களுடன் சென்னையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. 

கடலூர் மாவட்ட சங்கம் அன்றைய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் மறைந்த உடன் புகழ் அஞ்சலி கூட்டம் கடலூர் மாவட்ட சங்கத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நமது அரசியல் ஆசான் தோழர் DG, FNTO சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் கனக  சொருபன்  மற்றும் நமது சங்கத்தின் தலைவர்கள் பங்கு பெற்று சிறப்பான அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு களப்பணி ஆற்றியவன் என்ற முறையில் மிக மன நிறைவு கொள்கின்றேன்.

மிகப்பெரிய தலைவரின் நினைவேந்தல் கூட்டத்தில் என்னை சிறப்புரையாற்ற வாய்ப்பு தந்த தலைமைக்கு நன்றி கூறி புகழ் அஞ்சலி உரையை நிறைவு செய்தார்.

மேனாள் மாநில செயலாளர் தோழர் தமிழ்மணி மிக சுருக்கமாக புகழஞ்சலி உரையாற்றினார். தோழர் ஜெகனுடன் நீண்ட காலம்  நெருங்கி பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன். அவரைப் போன்ற உனதமான தலைவரை பார்ப்பது என்பது இயலாத காரியம். 

 தோழர் விநாயகமூர்த்தி  சிறப்பான உரை தந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

நிறைவாக தேசிய செயலாளர் ஸ்ரீதர் தோழர் ஜெகனுக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் உள்ள உறவுகளை மிக தெளிவாக எடுத்துரைத்தார். அவருடன் நெருங்கி பிரச்சனைகளை  விவாதிக்க கூடிய அளவிற்கு உறவு இருந்ததை எடுத்துரைத்தார். 
இந்தியா முழுவதும் தோழர்களின் நம்பிக்கை பெற்ற தலைவராக இருந்தார் .
தோழர் குப்தாவிற்கு நல்ல ஆலோசகராக செயல்பட்டவர். தமிழக தொழிற்சங்க போராட்டங்களில் கோரிக்கை முழக்கங்களை எவ்வாறு எழுப்ப வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர். 
தாய் மொழியான தமிழ் மொழியில் ஒலிக்கரை கொண்டு வந்தவர்.
கேடர் சீரமைப்பை ஊழியர்களுக்கு சாதமாக மாற்றிய பெருமை தோழர் ஜெகனையே சாரும்.

 இன்றைக்கு நிறைவான பென்ஷன் பெறுகிறோம் என்றால்  தோழர் ஜெகனின் பங்கு மிக முக்கியமானது. பென்ஷன் விதியில் 37 க்கு பதிலாக 37 A விதியை மாற்றியது மிகப்பெரிய சாதனையாகும். 
A என்பது  COMBINED SERVICE. இந்த விதி வரவில்லை என்றால் 1990 க்கு பிறகு DOT ல் பணியை சேர்ந்த எவருக்கும் பென்ஷன் கிடைக்க வாய்ப்பு என்பது இல்லை. 

அகில இந்திய மாநாட்டில் பங்கு பெறுகின்ற பொழுது மாநாடு நிகழ்வுகளை தொகுத்து மறுநாள் தமிழில் வழங்குவார்.

கடைசியாக தோழர், நமது தோழர் K.V பாலச்சந்தர் அவர்களின் பணி நியமனம் சம்பந்தமான கடிதத்தை டெல்லியில் இருந்து எழுதியதை இன்று வரை அவரது நினைவாக வைத்துள்ளேன்.
தோழர்  விநாயகர் மூர்த்தி அவர்கள் மிக அழகான குறிப்புடன் உரையாற்றியதை மிகவும் பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார். 

நிறைவாக தோழர் நீலகண்டன் நன்றி உரையுடன் தோழர் ஜெகனின் சில குறிப்புகளை பதிவிட்டார்.
 தோழர் விநாயகமூர்த்தி உரையை கேட்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.
பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை பதிவு செய்தார். 

கூட்டம் காலை சரியாக 9 மணிக்கு துவங்கி 10 மணிக்கு நிறைவு பெற்றது.

Friday, May 24, 2024

சிறப்பு பணி ஓய்வு பாராட்டு விழா

கொரோனா பேரிடர் காலத்தில்   எந்தவிதமான கூட்டம் நடத்த மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
ஆகையால் மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2022 வரை நமது மாவட்டத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த இயலவில்லை. 
நமது மாவட்ட சங்கம் மட்டும் தொடர்ந்து மாநில  நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்ததின் அடிப்படையில் மே 2022 முதல் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

(இதில் விளையாட்டு குழுவிற்கும் பொருந்தும் ஆனால் சில நபர்களுக்கு எதுவும் பொருந்தாது)
இந்த 26 மாத கால இடைவெளியில் 28 தோழர்கள் ஓய்வு பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த இயலவில்லை. 

மே 2022 முதல் நமது மாவட்ட சங்கம் மட்டும் தொடர்ந்து இவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த வேண்டும் என  தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

சேம நல குழு கூட்டம் மேனாள் பொதுமேலாளர் திருமதி  D. திலகவதி ITS  அவர்கள் தலைமையில் கூடிய போது கொள்கை அளவில் மாநில நிர்வாகத்தின் அனுமதியுடன் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அந்த குழு கூட்டத்தில் NFTE இயக்கம் மட்டும்தான் மிக அழுத்தமாக கோரிக்கையை முன்வைத்தது. SNEA உறுப்பினர் அவர்களும் நமது கோரிக்கைக்கு ஆதரவளித்தார்கள் .

முடிவெடுத்தாலும் அமுல்படுத்துவதில் அன்றைய பொது மேலாளர் அக்கறை செலுத்தவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

இன்றைய பொது மேலாளர் திரு பாலச்சந்தர் அவர்கள் பதவி ஏற்ற உடன் முதல் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தி இருந்தோம்.
நமது நியாயமான கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டாலும் சில அதிகாரிகளின்  ஆர்வ இன்மையால் விரைவாக நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. 

தலைமை பொது மேலாளர் அவர்கள் இருமுறை கடலூர் வந்து பொழுது மாவட்ட சங்கத்தின் சார்பில் இந்த கோரிக்கையை முன்னுரிமை கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

தலைமை பொது மேலாளர் அவர்கள் நமது கோரிக்கை முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக நடத்துவதற்கு   நமது பொது மேலாளர் அவர்களுக்கு அனுமதி அளித்தார்.

மே 24ம் தேதி  நடத்துவதற்கு முறையாக அனுமதி அளிக்கப்பட்டு இன்று காலை கடலூர் கூட்ட அரங்கில் பொது மேலாளர் உயர்திரு பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. 

28  தோழர்களில் 23 தோழர்கள் நேரடியாக குடும்பத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
அனைவருக்கும் பொது மேலாளர் மாலை, சால்வை  அணிவித்து கௌரவித்தார். 
துணை பொது மேலாளர் சி எம் அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார். 
IFA to GM அவர்கள் பங்கு பெற்று சேம நலநிதி மூலம்  ஓய்வு பெற்ற அனைவருக்கும் ட்ராலி பேக் வழங்கி சிறப்பு செய்தார்.

தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் பங்கு பெற்று ஓய்வு பெற்ற அனைத்து தோழர்களையும் மற்றும்  மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டி மிக சுருக்கமாக உரையாற்றினார்கள்.

நமது இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர்  D.குழந்தைநாதன் தனது  வாழ்த்துறையில் 28 ஓய்வு பெற்ற தோழர்களையும் மற்றும் அவர்களது குடும்பத்தாரையும் பாராட்டினார். அவர்கள் அனைவரும் ஓய்வு பெறுகின்ற வரை மிகச் சிறப்பாக செயல்பட்டனர் . விருப்ப ஓய்வு திட்டம் வந்த பொழுதும் அதை ஏற்க மறுத்து வயது மூப்பு வருகின்ற வரை உழைத்திட்ட அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்தார். 
ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தியதின் அடிப்படையில் இன்று சிறப்பாக விழா நடைபெறுகின்றது.

இதற்கு உறுதுணையாக இருந்த பொது மேலாளர் அவர்களுக்கு  நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதை நன்கு திட்டமிட்டு வழக்கம்போல் சிறப்பாக செயல்படுகின்ற கடலூர் மாவட்ட வெல்ஃபர் செக்ஷன்  ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்தார்.

தமிழகத்திலேயே  விருப்ப ஓய்வு VRS 2019 அமல்படுத்தப்பட்ட பொழுது விருப்ப ஓய்வு சென்ற  284 தோழர்களுக்கு  மிக சிறப்பான விழா நடத்திய ஒரே மாவட்டம் கடலூர்  மாவட்டம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். அந்த வகையில் கொரோனா  காலத்தில் பணி ஓய்வு பெற்ற தோழருக்கும் காலம் கடந்திருந்தாலும் சிறப்பான பணி ஓய்வு நடத்திய மாவட்டம் கடலூர் மாவட்டம் தான் என்பதிலும் பெருமை கொள்வோம்.

பணி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து  உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக உதவி  பொது மேலாளர் நிர்வாகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

ஓய்வு பெற்ற சங்கத்தின் சார்பாக AIBSNLPWA மற்றும் AIBDPA ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரிக்கப்பட்டனர்.

 நிர்வாகத்தின் சார்பில் உதவி பொது மேலாளர் திரு வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் சி எம் மற்றும் நிதி ஆலோசகர் ஆகியோர் மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். 

உதவி பொது மேலாளர் திட்டம் திருமதி S. சசிகலா அவர்கள் தோழர்  V S.ரவி  DE விஜிலன்ஸ் ஓய்வு அவர்களின்  பாராட்டு மடலை வாசித்தார்.

பொது மேலாளர் அவர்கள் தனது தலைமை உரையில் 28 ஓய்வு பெற்ற தோழர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும்
வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

விழா யாரால் நடைபெறுகின்றது என்பதை விட விழா நடைபெற்றது என்பது தான் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்பதை மிக அழகாக பதிவு செய்தார்.

எதிர்பாராத கடினமான சூழலில் குறித்த நேரத்தில் விழா நடத்த இயலவில்லை. 
தற்பொழுது  நீங்கள் அனைவரும் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு அம்சமாகும்.

 கடினமான கொரோனா காலத்தை கடந்து வந்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி தான்.

நீங்கள் அனைவரும் விருப்ப ஓய்வு திட்டத்தில் சேராமல் வயது மூப்பு வரை பணியாற்றி ஓய்வு பெற்றமைக்கு மற்றொரு முறை வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

கடலூர் மாவட்டம் தமிழகத்திலேயே பணி ஓய்வு பாட்டு விழா நடத்துவதில் ஒரு முன்மாதிரியான  மாவட்டம் என்பதை இந்த கூட்ட அரங்கில் நேரடியாக பங்கு பெற்ற தலைமை பொது மேலாளர் அவர்கள் பதிவு செய்ததை நினைவு படுத்தினார். 

பல முரண்பாடுகள் இருந்தாலும் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அனைத்து தொழிற்சங்கமும்  கலந்து கொண்டு ,ஓய்வு பெற்ற தோழர்களை வாழ்த்துவது தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் தான் சாத்தியம் என்பதை பெருமைப்பட பதிவு செய்தார். 

இன்றைய சூழலில் தமிழகத்தின்  பிஎஸ்என்எல் வருவாய் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை  மகிழ்ச்சியாக பதிவு செய்தார். 
குறிப்பாக 2024 மார்ச் மாதம் வருவாய் சென்ற ஆண்டு மார்ச் 2023 விட நல்ல முறையில் கூறியுள்ளது .அதேபோல் செலவினமும் குறைந்துள்ளது.

முன்பு போல் இல்லாமல் இப்பொழுது பவர் பிளான்ட் ,பேட்டரி போன்ற சாதனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன .
4g சேவையும் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டுக்குள் மாவட்ட முழுவதும் 4G சேவை வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

மிக விரைவில் நமது நிறுவனம் லாபம் தருகின்ற நிறுவனமாக மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் அனைவரையும் மற்றொரு முறை வாழ்த்தி ,உரையை நிறைவு செய்தார்.

ஓய் பெற்ற  தோழர்களில் ஐவர் தோழர் M. துரைராஜன், SDE கடலூர், தோழர் மனோகரன்  TT விழுப்புரம், தோழர் அகஸ்டின் TT விழுப்புரம், தோழர் N. சுந்தரம் AOS, செஞ்சி, மற்றும்  தோழியர் N. சரோஜாதேவி OSP கடலூர் ஆகியோர் ஏற்புரை ஆற்றினார்கள் 

ஓய்வு பெற்ற தலைமை கணக்கு அதிகாரி  உயர்திரு D. சண்முகசுந்தரம் அவர்கள் மிக சுருக்கமாக மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்..

JTO General அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவு பெற்றது.
 
தமிழ்த்தாய் வாழ்த்து உடன் கூடிய விழா தேசிய கீதத்துடன்  நிறைவு பெற்றது..

குறித்த நேரத்தில் துவங்கி 10.30 am சரியாக நண்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது