.

Tuesday, July 31, 2018


தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
மாவட்டச் சங்கம்,கடலூர்


பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம்
       நமது இலாகாவில் பணி செய்து இம்மாதம் ஓய்வு பெறும் அனைத்து தோழர்கள், தோழியர்களுக்கு  மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

1.திரு P.சிவக்குமரன் DE/CDL (VR)
2.தோழர் R.ஆறுமுகம் JE/GIE
3.தோழர் R.V.ஜெயராமன் OS(G)/CDL
4.தோழர் N.கலியமூர்த்தி TT/CDL
5.தோழர் K.மண்ணாங்கட்டி JE/KAC
6.திருமதி  R.விஜயமாலா AGM/CDL (VR)


                                                                                       வாழ்த்துக்களுடன்
                                                                   NFTE-மாவட்டச் சங்கம்
                                                                               கடலூர்.
                                             


                                                                  

Monday, July 30, 2018


தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்

கடலூர்  தொலைபேசி கிளை
தோழர்களே!.. தோழியர்களே!!...
        வணக்கம், நமது கடலூர் தொலைபேசியக கிளை மாநாடு27-07-2018 அன்று கடலுயிர் தொலைபேசி நிலைய வளாகத்தில் காலை 10.00 மணியளவில்   தோழியர் R.கஸ்தூரி சம்மேளனக் கொடியேற்றிய உடனே கிளை மாநாடு தோழர் V.இளங்கோவன் கிளைத்தலைவர் தலைமையில் துவங்கியது. தோழர் P.அன்பு வரவேற்புரையாற்றிட , தோழர் J.சித்தார்த்தன் அஞ்சலியுரையாற்றினார். நமது மாநிலத்  துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் தனது கம்பீர குரலில் துவக்கவுரையாற்றி நல்லதொரு மாநாட்டிற்கு வித்திட்டார்.
        இதற்கிடையில் ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்ற  கிளைத்தோழர் R. காண்டீபன் TT/CDL  அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழாவில் தொழிற்சங்க  தலைவர்கள் தோழரின் பணிஓய்வு காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துரை வழங்கினார்கள்.
        பின்னர் ஆண்டறிக்கை, அமைப்பு நிலை  பற்றிய விவாதம் நடைபெற்றது,  சிறு சச்சரவுகளுக்கிடையே  ஆண்டறிக்கை ஏற்கப்பட்டது.   நிர்வாகிகள் தேர்வில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் சில மணி நேரத்திற்கு பிறகு ஒரு சுமூகமான மாநாடாக, ஒற்றுமைக்கான மாநாடாக அமைய   தோழர்கள்  முற்பட்டனர். அதன் பலனாக  நிர்வாகிகள் தேர்வில் ஒன்றுபட்ட  நிர்வாகிகள் வாசிக்கப்பட்டது. ஒற்றுமை மீண்டும் நிரூபிக்கப்பட்டதற்கு இதுவே சான்று.
        வாழ்த்துரையில்  மாநிலச்  உதவிச் செயலர் தோழர் P.சுந்திரமூர்த்தி, மாநிலச் சங்க  சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன், மாவட்ட தலைவர் தோழர் G.கனேசன்,  மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன், மாவட்ட  பொருளாளர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட உதவிச் செயலர் தோழர் M. மஞ்சினி, மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னிர்செல்வம், GM அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன் , மற்றும்  நமது  மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர்  புதிதாக தேர்வு  செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
        சிறப்புரையாக  NFTEயின் மாநில  செயலர் தோழர் K. நடராஜன் ஒரு அற்புதமான , ஒன்றுபட்ட, ஒற்றுமையான கிளை மாநாட்டை நடத்தியுள்ளீர்கள் என தனது சிறப்புரையில் பதிவு செய்தார். அடுத்து TMTCLU  மாநில பொதுச் செயலர் தோழர் R. செல்வம் ஒற்றுமையான முறையில் நடைபெற்ற கிளை மாநாட்டை வாழ்த்தி தனது சிறப்புரையில் பதிவு செய்தார்.

   மாநாட்டிற்கு வந்திருந்து  சிறப்பு செய்த  அனைவருக்கும் தோழர்  M.ராஜவேலு நன்றி கூற   கூட்டம் நிறைவுற்றது

29-07-2018 அன்று நடைபெற்ற       கிளை மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டநிர்வாகிகள் பட்டியல்

தலைவர்                           :தோழர் K. நாராயணன்
துணைத் தலைவர்கள்                    : தோழர் V.மணிமாறன்
                                                            : தோழர் V.சண்முகம்
                                                            : தோழர் S.லோகநாதன்
                                                            : தோழர் S.பலராமன்

செயலர்                            : தோழர் E. விநாயகமூர்த்தி
உதவிச் செயலர்கள்                          : தோழர் P.அன்பு
                                                            : தோழர் P.குமார்
                                                            : தோழர் R.கிருஷ்ணமூர்த்தி
                                                            : தோழர் M.மஞ்சினி

பொருளாளர்                     : தோழர் K.P.தனஞ்ஜெயன்
அமைப்புச் செயலர்கள்                     :  தோழர் J.சித்தார்த்தன்
                                                            : தோழர் R.சுப்ரமணியன்
                                                            : தோழர் S.ரங்கநாதன்
                                                            : தோழர் M.ராஜவேலு

தணிக்கையாளர்                               : தோழர் V.ராஜீ

கிளை மாநாட்டிற்கு கிளை தோழர்கள், தோழியர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கும் பாராட்டுதலை தெரிவித்து  கொள்வதோடு மட்டுமல்லாமல்,   அனைத்து  பகுதியிலிருந்தும்   வந்திருந்து சிறப்பு செய்திட்ட அனைத்து கிளை தோழர்களுக்கும், தொழிற்சங்க  தலைவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில்  நன்றி....
                                                   தோழமையுடன் 
                                                   மாவட்டச் சங்கம், கடலூர் 














Friday, July 27, 2018


கண்ணீர் அஞ்சலி...
கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களின் தங்கையின் மகளும், சிதம்பரம் தோழர் S.ஆதிநாராயணன் TT அவர்களின் இளைய புதல்வியுமான செல்வி. A.திவ்யப்பிரியா இன்று 27.7.2017 காலை 6.00 மணியளவில் கோயில் ஒன்றில் வேண்டுதலின் போது திடீரென்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழியரது பிரிவில் வாடும் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  
தோழியரது இறுதி நிகழ்ச்சி நாளை 28.7.2017 காலை 9.00 மணியளவில் சிதம்பரம் முருகன் தெருவில் உள்ள இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, July 25, 2018

NFTE-BSNL
மாவட்ட செயற்குழு
மற்றும்
விழுப்புரம் கிளை மாநாடு
22-07-2018

          விழுப்புரம் மாவட்ட செயற்குழு எதிர்பார்ப்புக்களுக்கிடையே புதிய மாவட்ட தலைவர் தோழர் G.கனேசன் தலைமையில்  , மாவட்ட உதவிச் செயலர் தோழர் .V.மாசிலாமணி வரவேற்புரையாற்றினார். தோழர் T.சுந்தரம் ATT/VLU சம்மேளனக் கொடியை ஏற்றிய பிறகு மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.அகஸ்ட்டீன் அஞ்சலியுரையாற்றினார். பின்னர் மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் தன்னுடைய துவக்கவுரையில் நம்முன்னெ உள்ள கோரிக்கைகள், போராட்டங்கள், கடமைகளை அற்புதமான உரையாக   பதிவு செய்தார்மாவட்ட சங்க செயல்பாட்டறிக்கையையும் ஆய்படு பொருளாக சிதம்பரம் மாவட்ட  மாநாடு ரசீது, கணக்கு , நிதி ஒப்படைத்தல், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் போராட்டம், அமைப்பு நிலை, பிரச்சனைகள் தீர்வும் போராட்டமும்  வைத்து அறிமுக உரையாக மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் . 01-05-2018 முதல் 20-07-2018 காலத்திற்கான வரவு-செலவு கணக்கும் வைக்கப்பட்டது. விவாதத்தில் கிளைச் செயலர்களுக்கும். மாவட்டச் சங்க நிர்வாகிகளும் துடிப்போடு கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
          மாவட்ட செயலரின் பதிலுரையுடன் தீர்மானங்கள் வடித்தெடுக்கப்பட்டனமாவட்ட செயற்குழுவை தொடர்ந்து விழுப்புரம் கிளை  மாநாடு நடைபெற்றது. தோழர் R.ரவி-I  விழுப்புரம் கிளையின் உதவிச் செயலர் தலைமையேற்க, கிளைச் செயலர் தோழர் G.கனேசன் வரவேற்புரையாற்ற , தோழர் P.சுந்திரமூர்த்தி மாநில உதவிச் செயலரின் துவக்கவுரையோடு மாநாடு துவங்கியது. மாநிலச் செயலரின் முழுமையான பங்கேற்புஇருந்தது.
          செயல்பாட்டறிக்கை வைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தோழர் S.மதிவாணன், தோழர் S.சண்முகம், தோழர் D.சரவணக்குமார் தலைவர் செயலர் , பொருளர் முறையே தேர்வு செய்யப்பட்டனர்தோழர் V.ஜெயராமன் மாவட்ட அமைப்புச் செயலர், தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட பொருளாளர், தோழர் D.குழந்தைநாதன் மாவட்ட உதவிச் செயலர்மேனாள் மாவட்ட தலைவர் தோழர்  R.செல்வம், மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழார் V.இளங்கோவன், மாநில துணைத் தலைவர் தோழர் V. லோகநாதன் ஆகியோர் புதிய கிளைச் சங்க நிர்வாகிகளை வாழ்த்தினார்கள். நிறைவு நிகழ்வாக மேனாள் சம்மேளனச் செயலர் தோழர்G.ஜெயராமன் அவர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகளை கவுரவித்தல்  நிகழ்வினை நிகழ்த்தி  தனது நிறைவுரையினை பதிவு செய்தார்.
          ஒற்றைச் சொல்லின் உயர்ந்த கவிதயானநன்றியைபுதிய கிளைச் செயலர் தோழர் S.சண்முகம் கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
          மாவட்ட செயற்குழு மற்றும் கிளை மாநாட்டினை சிறப்பாக நடத்தி கொடுத்திட்ட  விழுப்புரம் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி......
விழுப்புரம் மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்
தீர்மானம் 1 சிதம்பரத்தில் மாவட்ட மாநாட்டை வெகு சிறப்பாக நடத்திக் கொடுத்தத்   தோழர்  H. இஸ்மாயில் மரைக்காயர் தலைமையில் செயல்பட்ட சிதம்பரம் வரவேற்புக்குழுத்  தோழர்களை இச்செயற்குழு மனதாரப் பாராட்டுகிறதுமாவட்டச் சங்கத்தின் சார்பில் அந்தத் தோழர்களுக்குச் சிறப்பு செய்யும் பாராட்டுவிழாவை விரைவில் நடத்துவது என இச்செயற்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் 2  தோழர் சிரில் நினைவு அறக்கட்டளைச் சார்பில் 19வது தமிழ்விழாவை சிறப்புற நடத்திய அறக்கட்டளை பொறுப்பாளர்களையும் அறக்கட்டளை உறுப்பினர்களையும் இச் செயற்குழு பாராட்டுகிறதுமாநாட்டிற்குப் பிறகு உறுப்பினர்கள்  இணைக்கப்பட்டு அறக்கட்டளை விரிவுபடுத்தப்பட்டதை இச்செயற்குழு அங்கீகரிக்கிறதுவங்கியில் உள்ள அறக்கட்டளை வைப்புநிதிக் கணக்கு அறக்கட்டளைச் செயலாளர் தோழர் வீ. லோகநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் தோழர் செ. ஆனந்தன் இணைந்த பெயர்களில் மாற்றப்பட்டுள்ளதை இச்செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.

தீர்மானம் 3 ஒப்பந்த ஊழியர் பிரச்சனைத் தீர்வில் BSNL ஊழியர் சங்கத்தோடு இணைந்து போராடிய மாவட்டச் சங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கதுபணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மனிதாபிமானத்தோடு மீண்டும் பணியில் சேர்க்க மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு வற்புறுத்துகிறதுஒப்பந்த ஊழியர்களும் கூடுதல் ஈடுபாட்டோடும், கவனத்தோடும் பணியாற்றுமாறு தோழமையுடன் அறிவுறுத்துகிறது.

தீர்மானம் 4 எதிர்வரும் அகில இந்திய சங்கத்தின் கூட்டுபோராட்ட இயக்கங்களில் தோழர்கள் சக்திமிக்கதாகக் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்ய தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்மூன்று நாள் தொடர் போராட்டம் என்பதால் அந்தந்த தேதிகளில் குறிப்பிட்ட கிளைத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள திட்டமிட்டு இயக்கங்களை வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.

தீர்மானம் 5 மாவட்ட நிர்வாகம் ஊழியர் பிரச்சனைகளைச் சங்கங்களோடு விவாதிப்பதில் குறைசொல்ல முடியாதுநிறையவே விவாதிக்கிறார்கள், உறுதிமொழியும் அளிக்கிறார்கள்ஆனால் உறுதியளித்தபடி பிரச்சனைத் தீராமல் தாமதமாவதும் நீடிப்பதும் ஊழியர்களிடையே சோர்வை ஏற்படுத்துகிறது. அவர்களது சேவைத் திறனைப் பாதிக்கிறதுதாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட ஒன்றேஎனவே இச்செயற்குழு மாவட்ட நிர்வாகத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறதுகாரணமின்றி தாமதமாகும் பிரச்சனைகளில் போராட்ட இயக்கங்களைத் திட்டமிடவும் அறிவிக்கவும் மாவட்டத் தலைமையகத் தோழர்களுக்கு இச்செயற்குழு அதிகாரமளிக்கிறது.  

தீர்மானம் 6 மாவட்டச் சங்க அலுவலகத்திற்கு உடனடியாகப் புதிய கணிணியும் கூடுதல் இடமும் வழங்க மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் 7  திண்டிவனம் கோட்ட அதிகாரியின் அதிகார அத்துமீறல்களை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கிறதுஅணுகுமுறை மாறாத பட்சத்தில் போராட்டங்கள் தவிர்க்க இயலாதவை என இச்செயற்குழு மிகுந்த பொறுப்போடு மாவட்ட நிர்வாகத்தைக் காலத்தே எச்சரிக்க விரும்புகிறது

தோழமையுடன் 
இரா.ஸ்ரீதர் 
மாவட்டச் செயலர்,
கடலூர்