.

Monday, December 20, 2021



கடலூர் மாவட்ட செயலகக் கூட்டம்

நமது கடலூர் மாவட்ட செயலகக் கூட்டம் வருகின்ற புதன் கிழமை 23.12.2021 கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் சரியாக மாலை 5.30 மணியளவில் நடைபெறும்.

ஆய்படு பொருள்:

§திருச்சி மாநில மாநாடு - நமது நிலை
§  மாநில மாநாடுநிதி
§  மாநில மாநாடு சார்பாளர்கள்/பார்வையாளர்கள் முடிவு
§  கடலூர் மாவட்ட மாநாடு

செயலக கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் நிர்வாகிகள் மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் சார்பாளர்கள்/பார்வையாளர்கள் பட்டியலுடன் வரவும்.

அவசியம் இச்செயலக கூட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளவும்.

தோழமையுடன்,

D.குழந்தை நாதன்,

மாவட்ட செயலர் கடலூர்


Tuesday, November 23, 2021

நவம்பர் 24 சம்மேளன தினம்🚩*

🚩சம்மேளன தினக்கொடியேற்றம்🚩

நாளை 24.11.2021 நமது சம்மேளனத் தினத்தை முன்னிட்டு நமது 🚩🚩சங்கக் கொடியேற்றும் நிகழ்வு கடலூர் பொது மேலாளர் அலுவலக வாயிலில் மதிய உணவு  இடைவேளை சரியாக 1 மணியளவில்  நடைபெறும். தோழர்கள், தோழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

*தோழமையுடன்,*🙏
*D. குழந்தை நாதன்,*
*மாவட்டச் செயலர்,*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

Monday, November 1, 2021

கடலூர் GM அலுவலகக் கிளை மாநாடு-28.10.2021

கடலூர் GM அலுவலகக் கிளை மாநாடு-28.10.2021 அன்று தோழர் ரகு மாநாட்டு நினைவரங்கத்தில்   தோழர் S.வெங்கட் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் E.விநாயகமூர்த்தி. R.பன்னீர்செல்வம் ஆகியோர்  விண்ணதிர கோஷமிட, தோழர் M.ராஜவேலு சம்மேளனக் கொடியேற்றினார்.

மாநாட்டின் முதல் நிகழ்வாக தோழர் A.சகாயசெல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழியர் K.சாந்தி அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி  துவக்கவுரை நிகழ்த்தி மாநாட்டை துவக்கிவைத்தார். பின்னர் மாநாட்டின் ஆண்டறிக்கை, வரவு செலவு நிதியறிக்கை சமர்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அறிக்கைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் கிளையின் கீழ்கண்ட நிர்வாகிகள் அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய கிளை நிர்வாகிகள்:

தலைவர்               :      தோழர் S.வெங்கட்

துணைத் தலைவர்கள்       :       தோழியர் S.சுகந்தி

தோழர் J.ஜலதரன்

தோழர் D.நாகராஜன்

செயலர்                :      தோழர் A.சகாயசெல்வன்

பொருளாளர்                :      தோழர் A.அப்துல்கரீம்

உதவிப்பொருளாளர்        :       தோழர் M.ராஜவேலு

அமைப்புச்செயலர்கள்      :       தோழர் K.மகேஷ்வரன்

தோழர் T.கலைச்செல்வன்

தோழியர் S.புவனேஷ்வரி

தோழியர் K.சாந்தி

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச் சங்க உதவித்தலைவர் தோழர் V.லோகநாதன், மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மேனாள் மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்டச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்டப் பொருளர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர் செல்வம், மற்றும் மேனாள் கிளைச் செயலர் தோழர் S.இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ் மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப்பேசி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டிற்கு முன்னதாக கடலூர் மாவட்ட அலுவலகத்தில் JCM உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாநாட்டில் கிளைத் தோழர்கள், நெல்லிக்குப்பம், விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி தோழர்கள் உட்பட ஓய்வு பெற்ற தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிளைமாநாட்டின் தீர்மானம் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்டது. இறுதியாக தோழர் அப்துல்கரீம் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

கிளை மாநாட்டுத் தீர்மானங்கள்:

v GM அலுவலகத்தின் ஒரு பகுதியும் CSC பகுதியும் தனியாருக்கு வாடகைக்கு விடும்முன்னர் தொழிற்சங்கத்திடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

v GM அலுவலகம், CSC பகுதிகளில் உள்ள கழிவறைகள் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. முறையான பராமரிப்புத் தேவையென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

v CSCயில் உள்ள மின்விசிறிகள், மின்விளக்குகள் போதுமான அளவில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். போதுமானவைகளை நிறுவிட இம்மாநாடு நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது.

v ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போடப்பட்ட மருத்துவமனைகளுடன் புதுச்சேரி PIMS மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளையும் இணைக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

v GM, CSC அலுவலகங்களில் பணிபுரிய பிராட்பேண்ட் போதுமான வேகத்தில் இல்லை. ஆகவே பணிபுரிவதற்கு ஏதுவாக அலுவலகத்தில் அதிவேகத்தில் உள்ள FTTH இணைப்பினை அளிக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

v கோவிட் காலம் இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி அலுவலகத்தில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி மற்றும் சானிடைசர் ஆகியவைகளை அளிக்க ஏற்பாடு செய்ய இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

v வாடிக்கையாளர்கள் CSCயில் தொலைபேசி, இதர கட்டணங்களை செலுத்திட swipping machine வசதியினை ஏற்படுத்தித் தருமாறு மாநாடு வேண்டுகிறது.

v மருத்துவக் காப்பீடு வசதி அறிவிக்கப்பட்டு இன்னும் அமுலுக்கு வராமல் இருக்கின்றது. இவ்வசதியை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநிலச் சங்கங்களை இக்கிளை மாநாட்டின் மூலம் கேட்டுக்கொள்கிறது.










தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் – கடலூர் GM அலுவலகக் கிளை


Thursday, September 16, 2021



செப்டம்பர் – 17
சமூக நீதி நாள்...
தந்தைப் பெரியார் பிறந்த நாள்

இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் குமாரமங்களம் பிர்லா மட்டும் அல்லாமல் அரசும், வங்கிகளும் முடிவு செய்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் வோடபோன் ஐடியா வைத்திருக்கும் வங்கி கடன் மற்றும் AGR கட்டண நிலுவை தான்.

வோடபோன் ஐடியா நிறுவனம்
வோடபோன் ஐடியா நிறுவனம் திவாலாகிவிட்டால் கட்டாயம் அனைவருக்கும் நஷ்டம் தான்,இந்நிறுவனத்திடம் இருந்து எந்தத் தொகையும் வாங்கமுடியாது.இதனை உணர்ந்து தான் கடந்த வாரம் மத்திய டெலிகாம் அமைச்சகம் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மட்டும் அல்லாமல் AGR கட்டண பிரச்சனையில் சிக்கியுள்ள ஏர்டெல் நிறுவனத்திற்கும் சேர்த்து சில முக்கியமான சலுகை மற்றும் தளர்வுகள் அடங்கிய திட்டத்தை நாடாளுமன்றத்தில் வைத்தது.

நாடாளுமன்றத்தில் ஆலோசனை
இந்த திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில், மத்திய அரசு வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆஃபரை அறிவித்துள்ளது. இது வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு மட்டும் அல்ல மொத்த முதலீட்டுச் சந்தைக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

4 வருட சலுகை
மத்திய டெலிகாம் துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள திட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது AGR கட்டணத்தைச் செலுத்துவதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அடுத்த 10 வருடத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஆனால் அடுத்த 4 வருடத்திற்குச் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளது. அதாவது 4 வருடம் AGR நிலுவையைச்செலுத்தத் தேவை இல்லை என்பது தான்.

ஆனால் இது பெரிய விஷயம் இல்லை, இதைவிடவும் ஒரு ஷாக்கிங் மேட்டர் உள்ளது.

பங்கு கைப்பற்றல் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்கு இணையாக மத்திய அரசு இந்நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்தை டெலிகாம் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.


அரசு சொத்துக்கள் விற்பனை
மத்திய அரசு நாட்டின் முன்னணி அரசு நிறுவன சொத்துக்களையும், பங்குகளையும் விற்பனை செய்து வரும் இந்த நேரத்தில் வோடபோன் ஐடியா போன்ற கடனில் மூழ்கியிருக்கும் தனியார் நிறுவனத்தில் பங்குகளைக் கைப்பற்றுவது மிகப்பெரிய கேள்வியாக  உள்ளது. ஆனால் இது வோடபோன் ஐடியாவுக்கும், இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட்.


நிலுவை தொகை சுமை
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலுவை தொகைக்கு இணையாக நிறுவன பங்குகளைக் கைப்பற்றுவதன் மூலம், இந்நிறுவனத்தின் நிலுவை தொகை சுமையைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு அரசு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.

BSNL க்கு சலுகை கிடையாது  தனியாருக்கு சலுகை தாரை வார்த்து கொடுக்க படுகிறது.

Sunday, July 18, 2021

ஒரு குழந்தையின் கோடுகள்
மறைந்த தோழர் ரகு அவர்கள் மதம், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்பதிவுகள் பலரது பாராட்டுகளை பெற்றது. கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அக்கட்டுரைகளை தொகுத்து நூல் வடிவில் வெளியிட உள்ளோம். இந்நூலைப் பெற தோழர்கள் கடலூர் மேனாள் மாவட்ட செயலாளர் தோழர் இரா.ஸ்ரீதர் ( Cell: 94432 12300) அவர்களிடம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். இப்புத்தகம் குறைந்த அளவிலேயே அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் விலை ரூபாய் 100.

புத்தகம் பெற விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கவும்.

A.S.GURUPRASAATH ,
DISTRICT TREASURER,
NFTE-BSNL
 CUDDALORE.

Bank Details:
Bank of Baroda
Account No:
12220100002591
IFSC CODE:
BARB0CUDDAL
(fifth character is zero)

Google Pay 9442343899

தோழமையுள்ள
D.குழந்தை நாதன்
மாவட்ட செயலர்
*NFTE BSNL*
*கடலூர்*


Saturday, July 17, 2021

மாநில கவுன்சில் கூட்டம்-சென்னை







புதிய  CGM பொறுபேற்று  குறைந்த நாட்களில் 25 வது மாநில  குழு கூட்டத்தினை  ஏற்பாடு செய்தார்.. பொறுப்பேற்று சிறிது நாட்களில் நடைபெற்ற  முதல் கூட்டம்   புதிய தலைமை பொது மேலாளர் தலைமையில்  நடைபெற்றது.

                 கூட்டத்திற்கு நமது மேனாள் மாவட்ட செயலாளரும்,  மாநில WELFARE கமிட்டி உறுப்பினரும்... மாவட்ட WORKS கமிட்டி உறுப்பினரும், கடலூர் மாவட்டக் குழு       ( LOCAL COUNCIL COMMITTEE) கூட்டத்தின் தலைவரும், மாநிலக் குழு உறுப்பினருமாகிய அருமைத் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் சென்னையில் CIRCLE COUNCIL கூட்டத்தில் கலந்து  கொண்டார்...

CIRCLE கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு தலைவரும், NFTE   மாநில செயலருமாகிய தோழர் K. நடராஜன் மாநிலக் குழு கூட்டத்தில் சேவை மேம்படுத்துதல் மற்றும் ஊழியர் தரப்பு விவாத குறிப்புகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மேலும் நமது  மாநில உதவி செயலர் G.S. முரளிதரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்..

நிர்வாக தரப்பில் முதன்மை பொது மேலாளர் மற்றும் சென்னை  CGM அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..  பிற மாவட்டத்தில் இருக்கும் GM, DGM ஆகியோர் WEBEX மூலமாக கலந்து கொண்டனர்...

             மேலும் சேலம் மாவட்ட செயலர் தோழர் C. பாலகுமார், வேலூர்  தோழர் லோகநாதன், காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் மாரி ஆகியோர் WEBEX ( இணைய வழியாகமூலமாக கலந்து கொண்டனர். இணைய வழியில் பல இடர்பாடுகள் ஏற்பட்டதனால் அவர்களால் சரியாக கலந்துரையாடலில் கவனம் செலுத்த முடியாமல்  போனது வருந்தத்தக்கது.

தோழர் இரா.ஸ்ரீதர் விவாதத்தில் ஊழியர் தரப்பு  நியாயங்களை அழகிய தமிழில்  எடுத்துரைத்து குறைகளை தீர்வு காண வழி வகை செய்தார்..

                   நமது மாவட்டத்தில்  வாடிக்கையாளர் விரும்பும் FTTH சேவையை விரைந்து கிடைத்திட அதிகப்படியான FSPக்களை உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தினை தயார்படுத்திட  உரிய நடவடிக்கை எடுத்திட அழுத்தம் கொடுக்கப்பட்டது.

           ஊழியர் குடியிருப்பில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு கண்டிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதிவு செய்தார்...

             மற்றும் CLUSTER, FTTH சேவையினை வழங்கிட MULTI VENDOR முறையினை கொண்டு வர வேண்டும் என பதிவு செய்தார்.. அதுவும் ONLY BSNL NET PROVIDER ஆக இருத்தல் வேண்டும்.. இதனை கண்காணிக்க NODEL OFFICER நியமிக்க வேண்டும்  என வலியுறுத்தப்பட்டது.

              E-office மூலம்  staff, வாடிக்கையாளர் குறைகளை களைந்திட அதிவேக   ftth சேவையினை AGM அளவில்  வழங்கிட  வலியுறுத்தப்பட்டது..

                மேலும் ஊழியர்களின் நலன் காத்திட மாநில அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிடம்   மாவட்ட நிர்வாகம் பேசி அனுமதி வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக புதுச்சேரி SSA வில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் கடலூர் மாவட்ட ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

           ஊழியர்களின் SERVICE புத்தகத்தினை நேரிடையாக காண்பித்து அதிலுள்ள பிரச்சனைகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட  சங்கங்களுடன்  மாவட்டத்தின் பொதுமேலாளர்.. மற்றும் துணை பொதுமேலாளருடன் முறைப்படி கூட்டங்களை நடத்திட  வேண்டும்... அதில் வலியுறுத்தப்படும் விவாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தொழிற்சங்க  பணிகள் மட்டுமல்லாது,  நிர்வாகப் பணிகளிலும், ஊழியர் தரப்பு பிரச்சினைகளில் அதிக அக்கறை கொண்டு சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்திற்கு நேரிடையாக சென்று பங்கேற்றார்.

மாநிலக் குழு கூட்டத்தில் சிறப்பாக   செயல்பட்ட நமது அருமை தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களுக்கு  மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

 

                                                                                     தோழமையுடன்

                                                                                                            D. குழந்தைநாதன்

                                                                                                                             மாவட்ட செயலர் NFTE

                                                                                                                                                                   கடலூர்.