.

Saturday, July 17, 2021

மாநில கவுன்சில் கூட்டம்-சென்னை







புதிய  CGM பொறுபேற்று  குறைந்த நாட்களில் 25 வது மாநில  குழு கூட்டத்தினை  ஏற்பாடு செய்தார்.. பொறுப்பேற்று சிறிது நாட்களில் நடைபெற்ற  முதல் கூட்டம்   புதிய தலைமை பொது மேலாளர் தலைமையில்  நடைபெற்றது.

                 கூட்டத்திற்கு நமது மேனாள் மாவட்ட செயலாளரும்,  மாநில WELFARE கமிட்டி உறுப்பினரும்... மாவட்ட WORKS கமிட்டி உறுப்பினரும், கடலூர் மாவட்டக் குழு       ( LOCAL COUNCIL COMMITTEE) கூட்டத்தின் தலைவரும், மாநிலக் குழு உறுப்பினருமாகிய அருமைத் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் சென்னையில் CIRCLE COUNCIL கூட்டத்தில் கலந்து  கொண்டார்...

CIRCLE கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு தலைவரும், NFTE   மாநில செயலருமாகிய தோழர் K. நடராஜன் மாநிலக் குழு கூட்டத்தில் சேவை மேம்படுத்துதல் மற்றும் ஊழியர் தரப்பு விவாத குறிப்புகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மேலும் நமது  மாநில உதவி செயலர் G.S. முரளிதரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்..

நிர்வாக தரப்பில் முதன்மை பொது மேலாளர் மற்றும் சென்னை  CGM அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..  பிற மாவட்டத்தில் இருக்கும் GM, DGM ஆகியோர் WEBEX மூலமாக கலந்து கொண்டனர்...

             மேலும் சேலம் மாவட்ட செயலர் தோழர் C. பாலகுமார், வேலூர்  தோழர் லோகநாதன், காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் மாரி ஆகியோர் WEBEX ( இணைய வழியாகமூலமாக கலந்து கொண்டனர். இணைய வழியில் பல இடர்பாடுகள் ஏற்பட்டதனால் அவர்களால் சரியாக கலந்துரையாடலில் கவனம் செலுத்த முடியாமல்  போனது வருந்தத்தக்கது.

தோழர் இரா.ஸ்ரீதர் விவாதத்தில் ஊழியர் தரப்பு  நியாயங்களை அழகிய தமிழில்  எடுத்துரைத்து குறைகளை தீர்வு காண வழி வகை செய்தார்..

                   நமது மாவட்டத்தில்  வாடிக்கையாளர் விரும்பும் FTTH சேவையை விரைந்து கிடைத்திட அதிகப்படியான FSPக்களை உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தினை தயார்படுத்திட  உரிய நடவடிக்கை எடுத்திட அழுத்தம் கொடுக்கப்பட்டது.

           ஊழியர் குடியிருப்பில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு கண்டிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதிவு செய்தார்...

             மற்றும் CLUSTER, FTTH சேவையினை வழங்கிட MULTI VENDOR முறையினை கொண்டு வர வேண்டும் என பதிவு செய்தார்.. அதுவும் ONLY BSNL NET PROVIDER ஆக இருத்தல் வேண்டும்.. இதனை கண்காணிக்க NODEL OFFICER நியமிக்க வேண்டும்  என வலியுறுத்தப்பட்டது.

              E-office மூலம்  staff, வாடிக்கையாளர் குறைகளை களைந்திட அதிவேக   ftth சேவையினை AGM அளவில்  வழங்கிட  வலியுறுத்தப்பட்டது..

                மேலும் ஊழியர்களின் நலன் காத்திட மாநில அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிடம்   மாவட்ட நிர்வாகம் பேசி அனுமதி வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக புதுச்சேரி SSA வில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் கடலூர் மாவட்ட ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

           ஊழியர்களின் SERVICE புத்தகத்தினை நேரிடையாக காண்பித்து அதிலுள்ள பிரச்சனைகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட  சங்கங்களுடன்  மாவட்டத்தின் பொதுமேலாளர்.. மற்றும் துணை பொதுமேலாளருடன் முறைப்படி கூட்டங்களை நடத்திட  வேண்டும்... அதில் வலியுறுத்தப்படும் விவாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தொழிற்சங்க  பணிகள் மட்டுமல்லாது,  நிர்வாகப் பணிகளிலும், ஊழியர் தரப்பு பிரச்சினைகளில் அதிக அக்கறை கொண்டு சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்திற்கு நேரிடையாக சென்று பங்கேற்றார்.

மாநிலக் குழு கூட்டத்தில் சிறப்பாக   செயல்பட்ட நமது அருமை தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களுக்கு  மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

 

                                                                                     தோழமையுடன்

                                                                                                            D. குழந்தைநாதன்

                                                                                                                             மாவட்ட செயலர் NFTE

                                                                                                                                                                   கடலூர்.


No comments:

Post a Comment