.

Saturday, April 18, 2020

மனிதம் வாழ்கிறது.... வாழ்த்துக்கள் தோழரே!...


             நமது தொழிற்சங்கத்தின் பாரம்பரியம் ஒவ்வொரு பேரிடர் காலங்களில்  தம்முடன் சார்ந்த தொழிலாளர்களுக்கு  இயன்றதனை செய்து வருவது நமது NFTE பேரியக்கத்தின் மரபு. அவ்வழியில் உலகை ஆட்டிப் படைக்கும் இந்த கொரோன வைரஸ் தாக்குதலிருந்து  மீண்டிட  முயற்சிகள் நடைபெற்று வருகிறது .    நிரந்திரமாக சம்பளம்  பெறுபவர்களே தினறும் வேலையில் நமது ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமை கேள்வி குறியே????...   இந்த  சூழ்நிலையில் தோழர்  K.சுப்புராயலு TT அவர்கள் மே மாதம் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு நமது NFTEயின் வேண்டுகோளை ஏற்று  கடலூர் மெயின் தொலைபேசி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ( சங்க வேறுபாடின்றி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்) தலா 10கிலோ அரிசி  25 தோழர்களுக்கு  வழங்கி துயர் துடைக்க முயற்சி எடுத்து அதனை இன்று 18.04.2020 காலை தொலைபேசி நிலையத்தில்  ஒப்பந்த ஊழியர்களுக்கு  வழங்கினார்.  தோழர் மே மாதம் பணி ஓய்வு பெற இருந்தாலும் , இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு இன்றே செய்வது தான் சாலச் சிறந்தது என எண்ணி  தன்னால் இயன்ற வரையில் செய்து கொடுத்த தோழர் K.சுப்புராயலு TT  அவர்களுக்கு கடலூர் NFTE ,TMTCLU மாவட்டச் சங்கங்களின் சார்பில் மனதார பாராட்டுகின்றோம். 

தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்,

NFTE, கடலூர்.
 





No comments:

Post a Comment