.

Monday, November 2, 2020

ஒப்பந்த ஊழியர் போராட்டம்-02.11.2020

கடந்த 14 மாதங்களாக BSNL இல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் 01.11.2020 முதல் அனைவரையும் வேலையை விட்டு நீக்கியதை கண்டித்து இன்று 2.11.2020 காலை கடலூர் மாவட்ட BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட நிர்வாகம் காவல்துறைகொண்டு இப்போராட்டத்தை முடக்க நினைத்தது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கடலூர் மாவட்டம் முழுமையுமிருந்து திரளாக ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பிரச்சனையின் தீவிரம் அறிந்து காவல் துறை நமக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. மாவட்ட நிர்வாகத்தை தொழிற்சங்கங்களுடன் பேச வைத்தது. காவல் துறைக்கு நன்றி!

பின்னர் புதுவையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் உள்ள LEO அவர்களை சந்தித்து நமது கோரிக்கையை விளக்க சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட தோழர்களுடன் இரண்டு வேன்களில் சென்று சந்தித்தனர். நமது கோரிக்கையை ALC அவர்களிடம் விளக்கி பேசப்பட்டது. "வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சம்பளம் வழங்காமல் வேலையை விட்டு நிறுத்துவது நிர்வாகம் எடுத்தமுடிவு நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். மேலும், மத்திய தொழிலாளர் நல ஆணையம் வழங்க சொல்லிய குறைந்தபட்ச சம்பளம் வழங்காத டெண்டரை விட்டது தவறு எனவும் அதனை உடனடியாக நிறுத்த உத்தரவிடுகிறோம்" என LEO உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் தமிழ் மாநில சங்கம் மாநில நிர்வாகத்திடம் பிரச்சனையின் தன்மையை வலியுறுத்தியதின் அடிப்படையில் GM HR அவர்கள் கடலூர் மாவட்ட பொது மேலாளர் அவர்களை சென்னை அழைத்துள்ளார்கள். நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கின்றோம்.


















No comments:

Post a Comment