.

Friday, July 26, 2019

உண்ணாவிரத போராட்டம் விலக்கு..
நமது கோரிக்கைகளை வலியுறுத்தி 27.07.2019 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது.  மாநிலச் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக  இன்று (26.7.2019) மாலை நமது பொதுமேலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.

 மாலை 05.15 மணியளவில் மாவட்டச்செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்டப்பொருளர் தோழர் A.S.குருபிரசாத் உடன் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் பொதுமேலாளரை சந்தித்தனர். முதலில் நமது பொதுமேலாளர் தனது வருத்தத்தை பதிவுசெய்தார். நாமும் நமது உறுதியான நிலைபாட்டினை எடுத்துரைத்தோம். மேலும் மாவட்ட நிர்வாகம் பிரச்சனைகளை மிக விரைவாக தீர்த்துவைப்பதாக  உறுதியளிக்கப்பட்டது.

                  
 நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்..

  • தோழர் K.முத்துக்குமார் JE /OFC  விழுப்புரம், உடனடியாக  Sales & Mktg  பகுதிக்கு மாற்றல் செய்யப்படுவார். மேலும்  தோழரின் Rule-8 விருப்ப மாற்றல் உத்தரவு தேர்தல் சரிபார்ப்பிற்குப்பின்  வழங்கப்படும்.
  • TT/Sr.TOA/JE கேடர் மாற்றல் பொறுத்தவரை பெரும்பான்மையான தோழர்களுக்கு  மாற்றல் உத்தரவு பொதுமேலாளரின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர்  தேர்தல் சரிபார்ப்பிற்கு பின்  வழங்கப்படும். 

  •  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை பொறுத்தவரை நீக்கப்பட்ட தோழர்களுக்கு படிப்படியாக மீண்டும் பணி வழங்கப்படும் எனவும், கல்லைத்தோழரின் மாற்றல் பிரச்சனை புதிய டெண்டரில் பரிசீலிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 இதனடிப்படையில் நமது உண்ணாவிரத போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்திட்ட, உண்ணாவிரத போராட்டத்திற்கு  ஆயத்தமாக இருந்த கிளைகளுக்கும், அனைத்து தோழர்களுக்கும் நன்றி. மேலும் தொடர் முயற்சி செய்திட்ட மாநிலச் சங்கத்திற்கும் நன்றி.......

No comments:

Post a Comment