.

Thursday, July 25, 2019

பணி ஓய்வு பாராட்டு விழா
கடலூர் BSNL பொதுமேலாளர் அலுவலகக் கிளை சார்பில் பணி ஓய்வு பெறும் சிரில் நினைவு அறக்கட்டளை தலைவரும், GM அலுவலக தலைவருமான தோழர் .சீனிவாசன், மற்றும் ஓய்வு பெற்ற தோழர் T.பாலாஜி ஆகியோரின் பாராட்டு விழா இன்று 25.7.2019 நடைபெற்றது. தோழியர் V.கீதா தலைமையில் தோழர் S. இரவி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச் சங்க துணைத் தலைவரும் தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை செயலருமான தோழர் V.லோகநாதன் துவக்கவுரை ஆற்றினார். வாழ்த்துரை யாக தோழர்கள் மாநில உதவி செயலர் தோழர் சுந்தரமூர்த்தி, மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் இளங்கோவன், TMTCLU பொதுச்செயலர் தோழர் ஆர்.செல்வம், மாவட்டத் தலைவர் தோழர் கணேசன், முன்னாள் மாவட்ட பொருளர் தோழர் சாதிக்பாஷா, மாவட்ட உதவி செயலர் தோழர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர் பன்னீர் செல்வம், மணி, கடலூர் தொலைபேசிக் கிளை செயலர் தோழர் விநாயகமூர்த்தி, மற்றும் TMTCLU மாவட்ட தலைவர் தோழர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்கள் BSNL புத்தாக்கம் மற்றும் இன்றைய நிலை பற்றி சிறப்பாக சிறப்புரை ஆற்றினார். பணி ஓய்வு பெற்ற தோழர் கள் ஏற்புரை வழங்கினர்.
விழாவில் தோழர் பட்டாபி அவர்கள் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள (http://www.pattabiwrites.in) "Contract Labour Issue-Tender Document/ Agreement Speaks So" என்ற ஆங்கிலக் கட்டுரை யின் தமிழாக்கத்தை நூல் வடிவில் கடலூர் மாவட்ட சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. நன்றியுரை தோழர் சகாயசெல்வன் வழங்கினார். சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளை செயலர் தோழர் ராஜேந்திரன் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment