.

Monday, April 13, 2020



                    மனிதம் காத்திட நிதியளிப்பீர்
தோழர்களே,, தோழியர்களே ..

அனைவருக்கும் வணக்கம்,  நமது தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அயராது தொடர்ச்சியாக அரும்பாடு பட்டு வரும் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு மேல் ஊதியப் பட்டுவாட நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 

இந்த சூழ்நிலையில் உலகையே  ஆட்டிப்பிடிக்கும் கொரனா  வைரஸ் தாக்குதலில் உலகம் முழுமையும்  உள்ள செல்வந்தர்கள் முதல் ஏழை தொழிலாளி வரை அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மக்களை வெளியே யாரும் நடமாட கூடாது எனவும்  மாநில , மத்திய அரசுகள் எச்சரிக்கை மணி அடித்து 144உத்தரவு வெளியிட்டுள்ளது . இதனால் மக்கள் யாரும் வெளியில் வராமல் இருப்பதனை கொண்டு உண்டு வருகிறார்கள்.. 

இது போதுமான பொருளாதாரம் கொண்ட மக்களுக்கு இது பொருட்டல்ல. ஆனால் நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் நிலைமையினை எண்ணும் போது சற்றே மனம் வருந்துகிறது... ஏற்கனவே ஏழு மாதம் சம்பளம் பெறாமல் தினசரி வேலை செய்யும் நம் தோழர்களுக்கு உதவுவது நமது தலையாய கடமையாகும்.

ஆகையால் எத்தனையோ நபர்களுக்கு வாழ்வளித்துள்ளது நமது தொழிற்சங்கம்.  அவ்வழியில் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு நமது தொழிற்சங்கத்தின் இயன்றதனை செய்ய நமது மாவட்ட சங்கம்  முன் முயற்சி எடுத்துள்ளது. ஆகையால் நமது தோழர்கள், தோழியர்கள், அதிகாரி பெருமக்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் நம்மால் இயன்ற நிதி உதவியினை தந்து அவர்கள்  உண்டு வாழ்ந்திட   உதவிகரம் கொடுப்போம்... மனிதம் காப்போம்..


 நிதியளிப்போர்
கீழ் உள்ள மாவட்ட செயலரின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்
D.குழந்தைநாதன்
வங்கி எண்: 614901502899
IFSC CODE: ICIC0006149
வங்கி கிளை: ICICI கடலூர்

Google Pay, Phonepe: 9489960633.



தாரளமாக  நிதி அளிப்பீர்... மனிதம் காப்போம்

                                                      தோழமையுடன்

         G. கணேசன்                           A.S குருபிரசாத்                D.குழந்தைநாதன் 
            மாவட்ட தலைவர்               மாவட்ட பொருளாளர்      மாவட்டச் செயலர்,
               

No comments:

Post a Comment