.

Friday, March 12, 2021

தோழர்களே!
இன்று 12.3.2021 VRS இல் சென்ற தோழர்களுக்கு கடைசி தவணை எக்ஸ்கிரேசியா தொகை அவரவர் ஊதியம் வாங்கிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தொகையில் நடப்பு ஆண்டிற்கான வருமானவரி பழைய முறைப்படி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் BSNL ஊழியர் குடியிருப்பில் தற்போது வசித்து வரும் VRS இல் சென்ற 12 தோழர்களுக்கு வாடகை பிடித்தம் கணக்கிடப்படாததால் அவர்களுக்கு கடைசி தவணை வழங்கப்படவில்லை.
 
அதுபோன்று NEPP போடப்பட்டு மாநில நிர்வாகத்தில் முடிவு செய்யப்படாததால் இரண்டு ஓட்டுநர்களுக்கு கடைசி தவணை வழங்கப்படவில்லை. அவர்களுக்குரிய தொகை DOT யிடம் இருந்து பெறப்பட்டுவிட்டது. அவர்களுக்குப் பின்னர் வழங்கப்படும். 

NEPP போடப்பட்ட தோழர் விக்கிரவாண்டி R.ரவி, தோழியர் தவமணி ஆகியோருக்கு புதிய சம்பளத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எக்ஸ்கிரேசியா கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் வீஆர்எஸ் அளித்த பிறகு மரணமுற்ற நான்கு பேரின் வாரிசு குடும்ப ஓய்வூதியர்களுக்கு தொகை வழங்கப்பட்டு விட்டது.

தோழமையுடன்
D. குழந்தை நாதன்
 மாவட்ட செயலர் கடலூர்





No comments:

Post a Comment