.

Monday, April 15, 2013

தேர்தல் - ஏப்ரல் 16


அருமைத் தோழர்களே! 


நெடுங்காலம், செழுமிய  தொழிற்சங்க 

அனுபவம் மிக்க  NFTE இயக்கம் உங்களை 

விரும்பிக் கேட்டுக்கொள்வதெல்லாம், நமது 

துறையினை பாதுகாத்திட, நம்மைப் பாதுகாத்திட 

எண் (15) - ல் வாக்களியுங்கள் என்பது தான். 



ஒன்பது ஆண்டு கால BSNLEU காலத்தில் , நாம் 

நமது எதிர்காலத்தை வளமாக்கக் கூடிய 

அனைத்து சந்தர்ப்பங்களையும் வீணடித்தோம். 


நமது சுய மரியாதையை இழந்தோம். 


பொருளாதார வாய்ப்புக்களை இழந்தோம். 


போனஸ் இழந்தோம்.    


LTC இழந்தோம். 


மெடிக்கல் இழந்தோம்.



சற்றெ யோசிங்கள் தோழார்களே இந்த இழப்பு 

பட்டியல் இன்னுமும் உங்களுக்குத் தேவையா? 

இனியும் தொடர வேண்டுமா? தொடர 

அனுமதிக்கப் போகிறோமா? 


இழந்த தன்மானத்தைத் திரும்பப் பெற 

வேண்டாமா?


நமது நிறுவனம் செழிக்க வேண்டாமா?


நாமும் நமது சந்ததியினரும் வளமாக இருக்க 

வேண்டாமா?



தொழிற்சங்கக் போர்க்குணத்தை இழந்து, 

"ஆமாம் சாமி"   போடும் BSNLEU கூட்டம் 

இனியும் நமக்குத் தேவையா?


தொழிற்சங்க பேடிகளை அதற்குண்டான 

இடத்தில் அமரவைப்போம்!  


மீண்டும் நமது நிறுவனம் தலை நிமிர்ந்து நிற்க, 

நாம்  வளமாக இருந்திட வாக்களியுங்கள் NFTE 

-க்கு! 


நல்ல  தீர்ப்பினை வழங்குங்கள் 


மறவாதீர் எண் (15) 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 1. ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை கையில் வைத்திருக்கவும். இல்லையனில் உடணடியாக, கிளைச்செயலரையோ, முன்னனித் தோழர்களையோ அணுகவும். கிளைச்செயலர்கள், அனைவரும் அடையாள அட்டை வைத்திருக்கிறார்களா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. வாக்குச் சீட்டில், அவசரமின்றி, நிதாணமாக, வரிசை எண் (15)-ஐ பார்த்து, சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக, குறிப்பிட்ட இடத்தில் வாக்களிக்கவும்.  முன்னனித் தோழர்கள் மாதிரி வாக்குச் சீட்டைக் காண்பித்து எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அனைவருக்கும் சொல்லித் தரவேண்டும்.

3. வாக்குச் சீட்டை மடிக்கும் பொழுது, எவ்வாறு நமக்கு மடித்துத் தரப்பட்டதோ, அவ்வாறே மடித்து வாக்குப் பெட்டியில் போடவும்.  நீங்கள் அளித்த வாக்கு வேறு ஒரு சின்னத்தில் தப்பிதமாக பட்டுவிடாமல் கவணமாக இருக்கவும்.  செல்லாத வாக்கு என்று ஒன்று கூட வரக்கூடாது.

4. வாக்குச் சாவடியில் , தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, கவணமாக 
நடந்து கொள்ள வேண்டும். 


5. எவராவது, தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டால் வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள். தேர்தல் அதிகாரியையோ, அல்லது முன்னனித் தோழர்களையோ அணுகவும்

6. எந்தவிதமான PROVOCATION-க்கும் இடம் கொடாமல் அமைதியாக தேர்தல் நடந்தேறுவது ஒன்றே குறியாகக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

7. கூடுமானவரை காலையிலேயே அனைவரும் வாக்களித்துவிட வேண்டும்.

8. கிளைச் செயலர்கள் வாக்களித்தோர் விபரத்தினை கையில் வைத்திருங்கள். வாக்களிப்பு நிலவரத்தை அவ்வப்போது, மாவட்டச் செயலருக்கு தெரியப்படுத்தி விடுங்கள். 


அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment