.

Saturday, January 30, 2016

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்!!!
 
இன்று பணிஓய்வு பெறும் 
மாநிலத்துணைத்தலைவர்
தோழர். தூத்துக்குடி பாலு
     அவர்களின்      
பணி ஓய்வுக்காலம் 
சிறக்க  கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!   

JTO இலாக்காத்தேர்வு

நமது தோழர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த JTO 50 சத    இலாக்காத் தேர்வு நடத்திட  BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
தேர்வு  புதிய JTO ஆளெடுப்பு விதி 2014ன்படி நடத்தப்படும்.
2013-14, 2014-15, மற்றும் 2015-16ம் ஆண்டுகளுக்கான JTO காலியிடங்களை கணக்கீடு செய்யவும், தேர்வுக்கான அறிவிப்பு செய்யவும்  மாநில நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 BSNL நிர்வாகம் 28/01/2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி
மாநிலங்கள் தேர்வு அறிவிப்பு செய்யும் நாள்               - 15/02/2016
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நாள்                - 22/02/2016
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி  நாள்      - 22/03/2016
தேர்வு நடைபெறும் நாள்                                         - 08/05/2016
தேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் (ON LINE EXAMINATION)
தேர்வு EXAMINATION AGENCY வாயிலாக  நடத்தப்படும்.
தற்போது பயிற்சியில் இருக்கும் OFFICIATING JTO தோழர்களை நிரந்தரம் செய்தது போக மீதமுள்ள  காலியிடங்கள் கணக்கிடப்பட வேண்டும்.

இலாக்காத்தேர்வுகள்  இணையதளத்தின் வழியாக Agency  மூலமாக நடத்தப்படும் என்பது நெருடலாக உள்ளது. தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி JTO இலாக்காத்தேர்வு அறிவிப்பு செய்ய வைத்த நமது மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக.
பணிஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்

இன்று பணிஓய்வு பெறும் தோழர்கள்

 தோழர். G.சம்மந்தம் SS கடலூர்
 தோழர். G.ராஜேந்திரன் TM கள்ளக்குறிச்சி
 தோழர் A.சுப்ரமணியன், S.TG.M விழுப்புரம்
 தோழர். S.மணி Sr.TS விழுப்புரம்
திரு. V.வீரப்பன் A.O கடலூர்
 திரு. KM.வெங்கடாசலம் SDE(சிவில்) விழுப்புரம்

பணிஓய்வு பெறும் தோழர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு  கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்


Friday, January 29, 2016

பணிஓய்வு பாராட்டு விழா 
கடலூர் GM அலுவலகத் தோழர் G.சம்மந்தம் SS அவர்களின் பணிஓய்வு பாராட்டுக்கூட்டம் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர்கள்,தோழியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







கடலூர் TMTCLU சங்கக்கிளைக்கூட்டம்

மாவட்ட சங்க அலுவலகத்தில் 28-1-2016  நடைபெற்றது. TMTCLU மாவட்டசெயலர் தோழர் G.ரங்கராஜு, TMTCLU மாவட்ட தலைவர் MS.குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் BSNL விடுமுறை தினங்களில் GM அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளவெட்டு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளதை பற்றி விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சனையை  கடலூர் NFTE மாவட்ட சங்கம் நிர்வாகத்துடன் பேசி விரைவில் நல்ல முடிவை எட்டும் என உறுதியளிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி கிளையின் பொதுக்குழு 
28-1-2016 மாலை கிளைத்தலைவர் தோழர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். கிளை செயலர் தோழர் S.மணி நன்றியுரை நிகழ்த்தினார்.


 

Tuesday, January 26, 2016

செயலகக்கூட்டம் – 26-01-2016

இன்று மதியம் 3-00 மணியளவில் மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலவலகத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள், நிர்வாகிகள், மற்றும் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் மாநில,மாவட்ட நிகழ்வுகள், மற்றும் பிரச்சனைகள் ஆகியவற்றை விளக்கினார்.
கூட்டத்தில்,
  • வருகின்ற பிப்ரவரி 6-ல்  வேலூரில் நடைபெறும் மாநில செயற்குழுவில் திரளாக கலந்துகொள்வது.
  • வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான நமது பங்கினை மாநில செயற்குழுவிற்கு முன்னதாக பிப்ரவரி 3–க்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.
  • மாநில மாநாட்டிற்கான தோழர்களின் பங்கான ரூபாய் 300-யும் விரைந்து வசூலித்து உடனடியாக ஒப்படைப்பது எனவும் இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.  









Thursday, January 21, 2016

திண்டிவனம் கலந்தாய்வுகூட்டம் - 20-1-2016
திண்டிவனத்தில் கலந்தாய்வுக்கூட்டம் 20-1-2016 மாலை 5-30 மணியளவில்  நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு திண்டிவனம் பகுதி தோழர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, விளக்கமளித்தார். குறுகிய நேரத்தில் கூட்டப்பட்ட கூட்டமாயினும் திரளான தோழர்கள்,கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கிளை சங்கத்திற்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.





புன்னகையுடன் சேவை”  Service with A Smile
தமிழ் மாநில போரம் சார்பில் புதுவை சிறப்புக் கருத்தரங்கம்
அகில இந்திய சங்கங்களுடைய கூட்டமைப்பின் (போரம்) முடிவின்படி தமிழ் மாநில அதிகாரிகள்-- ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து புதுச்சேரியில் ஜனவரி 19 ம் தேதி சிறப்பு கருத்தரங்கை நடத்தினஇது கோரிக்கை மாநாடல்ல, நிர்வாகத்தின் நிர்பந்தத்தால் நடந்ததும் அல்லநமக்கு நாமே ஏற்றுக் கொண்ட புத்தாண்டு உறுதிமொழியைநமது நிறுவனமான BSNL மீண்டும் லாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டுவது என்றசபதத்தை சல்லிவேராய் பணியாற்றும் தோழர்கள் வரை எடுத்துச் செல்ல-, உணர்வூட்ட, புதிய உத்வேகம் பெற நடத்தியது. அதனை நிறைவேற்றும் முதல் வழிமுறையாக புத்தாண்டு முதல் 100 நாள் திட்டம் நமக்கு நாமே வகுத்துக் கொண்டதுதான் Service with A Smile அதை உலகறிய முழக்கமிட்டு பிரகடனப்படுத்த நடத்தப்பட்ட கருத்தரங்கம்.
      புதுச்சேரி போரம் தோழர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்புதுவை கம்பன் கலையரங்கம் ஓர் அற்புதமான மண்டபம்மண்டபத்தைச் சுற்றி BSNL-ன் சிறப்புகள், மழை வெள்ளத்தில் மக்களோடு களத்தில் நின்ற மாண்பு, அமலில் உள்ள டெலிபோன், மொபைல் திட்டங்கள் என கட்டியம் கூறும் எளிமையான தட்டிகள் நம்மை வரவேற்றன. மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 800 தோழர்கள் கலந்துகொண்டனர். நமது மாவட்டத்திலுருந்து 120-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அழைப்பிதழில் இடம் பெற்ற அனைவரும் வருகை தர கருத்தரங்கம் காலை 10 மணிக்குத் துவங்கியது,    புதுவை, கடலூர் குடந்தை கோட்டங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பொதுமேலாளர் திருமதி S.லீலாசங்கரி ITS, தமிழ் மாநில முதன்மைப் பொதுமேலாளர் திருமதி N. பூங்குழலி ITS உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் முழுமையாகக் கலந்து கொண்டனர்.  
      தமிழ் மாநில போரம் தலைவரும் NFTE மாநிலச் செயலருமான தோழர் R.பட்டாபி அவர்களின் சீரிய தலைமையில் கருத்தரங்கம் துவங்கியது. NFTE அகில இந்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும், புதுவை மாவட்டத்தலைவருமான தோழர் P. காமராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தமது வரவேற்புரையில் ( ஆண்டாள் நோம்பிற்கு மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் வாய்த்தது எனத் திருப்பாவை துவக்கியது போல) ஜனவரி 19 நாள் நமக்கு பொருத்தமாக அமைந்தது என்றார்இந்த நாள் தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் பொது வேலைநிறுத்தத்தில்  உயிர்த்தியாகம் செய்த நாள். நடைபெறும் இடம் தொலைபேசிச் சேவைக்காக நோட்டீஸ் வெளியிட்ட புதுவைத் தலைவர்கள் பழிவாங்குதலை நெஞ்சில் ஏற்ற இடம்அதுமட்டுமல்ல தரைவழி தொலைபேசி இணைப்புகள் அதிகம் உள்ளதும் தொடர்ந்து லாபம் ஈட்டும் மாவட்டம்இத்தகைய மாவட்டத்தில் நடைபெறும் கருத்தரங்கிற்கு அனைவரையும் மகிழ்ந்து வரவேற்கிறேன் என்றார்.
      வரவேற்புரையைத் தொடர்ந்து, மாநிலச் செயலர்களின் கருத்துரை இடம்பெற்றது. தோழர்கள் M.S. ராதாகிருஷ்ணன் (AIBSNLOA),           S.சிவக்குமார்(AIBSNLEA), R.ராஜசேகர்(SNEA), P.சென்னகேசவன் (NFTE),    A.பாபுராதாகிருஷ்ணன்(BSNLEU) கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தனர்.
            அடுத்து தோழர். பட்டாபி ஆழமான தலைமையுரை யாற்றினார். அவர் தமது தலைமையுரையில், அன்று இதே நாளில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நோக்கம் பொதுத்துறையைப் பாதுகாப்பது, தேசம் காப்பதுஅதே உயர்ந்த கொள்கையோடு அதனை மேலும் மக்களுக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டி இக்கருத்தரங்கம். மூன்று பிரதானமான அம்சங்கள்ஒன்று, பொதுத்துறைகளைப் பாதுகாப்பது, எனவே பொதுத்துறையான BSNL பாதுகாப்பது, இரண்டாவது கடும் போட்டிகளுக்கு மத்தியில் BSNL வளர்ச்சியுறச் செய்வதுவிஸ்தரிப்பது , அதன் மூலம் மக்களின் நலம் மற்றும் மக்களின் பொதுச் சொத்தைப் பாதுகாப்பதுமூன்றாவது, ஜனநாயகப்படுத்துவதுஜனநாயகப்படுத்துவது என்றால் அது உள்ளேயும் வெளியேயும் அமல்படுத்தப்பட வேண்டும்வாடிக்கையாளர்களின் -- –மக்களின்சேவை குறித்த அனைத்து அம்சங்களிலும் வெளிப்படைத்தன்மையோடு அது வெளிப்படவேண்டும்அதே போல ஊழியர் நிர்வாக உறவுகளில் ஜனநாயகத்தன்மையை உத்தரவாதப்படுத்துவதுஅந்த வகையில் நமது இந்த நூறு நாள் முகமலர்ந்த சேவையாற்றுவது என்ற திட்டம் நமக்குப் பெரிதும் உதவும்இதயசுத்தியோடு இதனை நாம் அமல்படுத்துவோம்நிர்வாகம் ஆக்கபூர்வமாக நம்முடன் ஒன்றிணைந்து செயலாற்றுவது நமக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது என்றார்.
      தோழர் S.செல்லப்பா தமிழக போரம் கன்வீனர் அறிமுக உரையாற்றினார்அமெரிக்காவிலும் கூட வீட்டிற்குள்ளே மொபைல் சிக்னல் வராத நிலைமையைக் கண்டேன்அப்போதுதான் தெரிந்து கொண்டேன் இந்தியாவில் மட்டுமல்ல அந்த நிலைமை என்று.
      அடுத்து BSNLEU அகில இந்தியப் பொதுச்செயலாளரும் போரத்தின் அகில இந்திய கன்வீனருமான அருமைத் தோழர்  P. அபிமன்யு அவர்கள் நீண்ட சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் இன்றைய எதார்த்த நிலைமைகளை எடுத்துக்கூறி நமது கடமைகளை வலியுறுத்தினார்அரசாங்கத்தின் கருத்து நமக்குத் தெரியாததல்ல, பிரதமர் மோடி பேசுகிறார்  the business of the Government is not to do any business வியாபாரத்தை நடத்துவது அரசாங்கத்தின் வேலை இல்லை என்றுநமக்குத் தெரியும் அது உலக வங்கியின் குரல் என்று. ஆனால் அதையும் மீறி பொதுத்துறையான BSNL வளர்ச்சிப் பாதையில் அதிகாரிகளும் ஊழியர்களும் மாற்றிக்காட்டுவோம் என்று உத்வேகமூட்டினார்.
      அடுத்து NFTE அகில இந்தியப் பொதுச்செயலாளரும் போரத்தின் அகில இந்தியத் தலைவருமான அருமைத் தோழர் C.C.சிங் அவர்கள் ஆங்கிலத்தில் சுருக்கமாக கருத்துகளைப் பதிவு செய்தார்அவரது உரை வருமாறு: பாண்டிச்சேரி பல தலைவர்களைத் தந்த மாநிலம்சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே இந்தியாவில் 8 மணி நேர வேலைநேரத்திற்காகப் போராடி வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலம்பலவகையில் புதுவை முக்கியத்துவம் உடையது. தோழர் அபிமன்யு உங்களுடைய மொழியில் பேசினார்நாம் ஆற்றும் பணியில் சேவையில் ஓர் அர்ப்பணிப்பு உணர்வை உள்ளீடாக மாற்றுவது, அத்தகையப் பணிக் கலாச்சாரத்தை கிளை மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும்அப்படிச் செய்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்போரத்தில் நாம் உருவாக்கியுள்ள ஒற்றுமை அதனைச் சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன்போரம் உறுப்பினர்கள் 100 நாள் திட்டத்திற்கு மேலதிகமான முக்கியத்துவம் தருகிறோம். CMD நமது முயற்சியை மனந்திறந்து பாராட்டினார். புன்முறுவலுடன் சேவை என்றால் என்ன? ஊழியர்கள் மன நிறைவோடிருந்தால் வாடிக்கை யாளர்களும் மகிழ்வோடு இருப்பார்கள் என்பதை கூறி ஊழியர்களின் பிரச்சனைகளை அணுக வற்புறுத்துகிறோம்சேவையில் முன்கை எடுப்பதைப் போன்றே மனிதவள பிரச்சனைகளிலும் நிர்வாகத்துடன் நாம் கடுமையாக போராடி பல பிரச்சனைகளில் தீர்வு கண்டுள்ளோம். நமக்குப் பல பிரச்சனைகள் உண்டு. என்றாலும் BSNL நிறுவனத்தைக் காப்பதை நாம் நமது தலையாய கடமையாகக் கொண்டுள்ளோம்இந்த கருத்தரங்கின் மூலம், நாம் துவங்கியுள்ள 100  நாள் திட்டத்தின் மூலம் நாம் நமது தோழர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள்வோம் : இன்னும் சற்று கூடுதலாக உழைப்போம், சேவையை புன்னகையுடன் செய்வோம்,மேலும் மேலும் வாடிக்கையாளர்களை நமது நிறுவனத்தின் பால் ஈர்ப்போம்பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வோம். நமது BTS களைப் பழுதின்றிப் பராமரிப்போம்.
      நான் உங்களுடன் மகிழ்ச்சியாக ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். CMD பேசும் போது சொன்னார், விமானத்துறை இயக்குநர் தன்னிடம் வியப்புடன் கூறியதாக. அவர் கூறினார்  சென்னை வெள்ளத்தின் போது BSNL ஊழியர் ஒருவர், அப்பட்டமாக உண்மையைக் கூறுவதென்றால், வெள்ளத்தில் நீந்தி வந்து லீசுடு லைன் சர்க்யூட்டை சரிசெய்து விமான சேவைக்கு உதவினார்அதனால் விமான சேவையை இயக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் மற்ற தனியார் நிறுவனங்களின் தனியார் சர்க்யூட்கள் பழுது நீக்கப்படவில்லைவிமான இயக்குநர் கூறினார் விமான நிலையத்தில் எங்கு வேண்டுமோ BSNL டவர்களை நிர்மாணித்துக் கொள்ளுங்கள்  என்று. அந்த ஊழியரின் பணியால் BSNL மற்றவர்கள் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது. எனவே தான் கூறுகிறேன் உங்களால் சாதிக்க முடியும்.
      நாம் பெற்றிருக்கும் MRI  மருத்துவத்திட்டம் மற்ற நிறுவனங்களில் இருப்பதை விட மேலானது. அந்த மருத்துவ உதவியைப் பெறுவது சுலவமாக்கப்பட தொடர்ந்து முயல்கிறோம். அதே போல PLI  போனஸ், முன்பு போல நிர்வாகம் சண்டித்தனமாக மறுக்க வில்லைஅட்ஹாக் போனஸ் வழங்குவது குறித்து ஒரு நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.  78,2 DA பெற்றுவிட்டோம் ஆனால் வீட்டு வாடகைப்படி HRA 78,2 அடிப்படையில் தரப்படவில்லை. இந்தப்பிரச்சனையை நாம் தேசியக் குழுவில் எழுப்பஉள்ளோம்இந்த அடிப்படையில் நமது பிரச்சனைகள் விரைவாக இல்லையென்றாலும் தீர்க்கப்பட்டே வருகின்றனஇந்தத் தீர்வுகள் மத்திய மட்டத்தில் இணைந்த செயல்பாட்டால் மட்டுமே எட்டப்பட்டுள்ளன
      ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் வருகிறதே, இனி எப்படி இணைந்த செயல்பாடு, தீர்வு என்று சிலர் சந்தேகம் எழுப்புவர்உண்மைதான் சரிபார்ப்புத் தேர்தலில் போட்டியிடுவோம், ஆனால் அது இணக்கமான முறையில் நட்புரீதியில் நடைபெறும் போட்டியாக இருக்கும், இந்தப் பிரச்சனைத் தீர்வடையாததற்கு அவர்தான் காரணம் எனக் குற்றம்சாட்டும் போக்கு இராதுதேர்தல் போட்டி கடுமையானதாகவே இருக்கட்டும், முடிவுயாதானும் ஆகுகஒன்று உறுதி தேர்தலுக்குப் பின்னும் நாம் ஒற்றுமையாகவே செயல்படுவோம். வாழ்த்துகள் நன்றிஎன்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
      நமது மரியாதைக்குரிய தமிழ்மாநில முதன்மைப் பொதுமேலாளர் திருமதி N. பூங்குழலி,  ITS அவர்கள் கருத்தரங்கில் உரையாற்றினார்முதலில் அது சம்பிரதாயமான உரை அல்ல. அது மட்டுமல்ல மற்றவர்கள் பேசும் போது ஆழ்ந்து கவனித்து உடல்மொழியால் எதிர்வினையும் ஆற்றி அவர் முழுமையாக கருத்தரங்கில் பங்கேற்ற விதம் உணர்வுபூரணமானதுநல்ல தமிழ், கவிதை நடை, விரவிய பாடல்வரி எடுத்துக்காட்டுகள். நாம் நன்றி பாராட்டுகிறோம்எடுத்த எடுப்பிலேயே அவர் தொடுத்த வினா புன்னகையுடன் சேவை 100 நாள்என்கிறீர்களே with smile always என்றல்லவா இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் தொலைபேசி நிலையங்கள் நெடிய உள்கட்டமைப்பு வசதிகள், காலங்காலமான அனுபவம், எவரிடமும் இல்லாத இரண்டு லட்சம் மனிதவளம் இவ்வளவும் இருந்தும் நாம் நஷ்டம் அடைகிறோம்ஏன் நஷ்டம்? போனஸ் முதலிய சலுகைகள் பறிபோகும் நிலைமை. ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது என்பது உண்மைதான்ஆனாலும் விருட்ஷத்தைத் தாங்கும் விழுதுகளாக நாம் மாற வேண்டும்இந்த நிறுவனம் தான் நமக்குச் சோறு போட்டது. இதனை லாபம் ஈட்டச் செய்வது நமது கடமைதாய்க்கு நிகரானது, ஏன் தாய்க்கும் மேலானது நமது நிறுவனம்.
      நாம் நமது டார்கெட்டை அடைந்து வருகிறோம்லேண்ட் லைன் பகுதியில் 62% பிராட்பேண்டில் 65%, GSM ல் 56% எட்டியுள்ளோம்உங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி. சிம் விற்பனையில் இன்னும் முன்னேற்றம் வேண்டும். BSNL ல் பணியாற்றுகிறோம் என்ற பெருமை நமக்கு வேண்டும். உழைப்பு  அதிக உழைப்புகூடுதல் உழைப்புகடின உழைப்பு அதுவே இன்றைய தேவை. அந்த வகையில் BSNL மேப்பில் தமிழகத்திற்கு தலை நிமிர்ந்த இடம் உண்டுபழுதற்ற சேவை ஒன்று மட்டுமே நாளைய நல்ல பொழுதை விடியச் செய்யும்நன்றி வணக்கம்!
      அடுத்து PGM (நிதி) திரு ரவி சார் கடுமையான பணிகளுக்கு மத்தியில் வந்திருந்து வாழ்த்தினார். தமது வாழ்த்துரையில் முதன் முறையாக சென்ற ஆண்டு இயக்குதல் லாபம் (Operating profit) கண்டுள்ளோம்நிகர நஷ்டம் தொடர்ந்தாலும் வருவாய் கூடிவருவது மகிழ்ச்சி தரும் செய்திஆண்டுதோறும் ஓய்வு பெறுபவர்களுக்கு லீவு சேலரி வகையில் 55 % மனிதவளச் செலவு தொடரவே செய்யும். அந்த சதவீதம் எப்போது குறையுமென்றால் நமது வருவாயைப் பெருக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியம்அதனால் மட்டுமே நஷ்டமும் குறையும்கடுமையான இலக்கு, என்றபோதும் அது சாத்தியமற்றது அல்லகூடுதலாக உழைப்போம், உற்சாகத்தோடு, புன்னகையோடும் என வாழ்த்தினார்.
      SNEA சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் K. செபாஸ்டின் தமது உரையில் ராஜஸ்தான் மாநில அனுபவத்தைக் கூறினார். அங்கு மதியம் 3 மணி வரை பதிவாகும் தரைவழிப் பழுதுகள் அன்று மாலைக்குள்ளும், மாலை 5 மணி வரை பெறப்படும் பிராட் பேண்ட் பழுதுகளும் அன்றே சரிசெய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன் பெறுகிறார்கள் என்றார்.
      திரு P. சந்தோஷம், ITS, (Sr. GM NWP-CFA  சென்னை அவர்களும், திரு P.V. கருணாநிதி ITS GM NWP - CFA சென்னை அவர்களும்தோழர் P. வேணுகோபால் AIBSNLEA சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் உரையாற்றினர்.
      அடுத்து நமது பகுதி பொதுமேலாளர் திருமதி லீலா சங்கரி அவர்கள் நான் முதலில் பேசி எங்கள் பகுதிக்கு உங்களை எல்லாம் வரவேற்றிருக்க வேண்டும். எனினும் புதுவைக்கு உங்களை எல்லாம் வரவேற்பதில் மகிழ்ச்சிநமக்கு எங்கே லாபம் வருமானம் வருகிறதோ அதற்கும் இப்போது ஆபத்துமாநில அரசுகள் தமக்கான லீசுடு லைன் பராமரிக்கப்போவது மட்டுமின்றி மாநில அரசுகளே பிராட் பேண்ட் சேவை துவங்க உள்ளதாக செய்திகள் வருவது கவலைக்குரியது என்றார்.
      கடைசியாக தோழர் K. ராஜசேகரன் AIBSNLOA அகில இந்தியத் தலைவர் கருத்துரையாற்ற BSNLEU புதுவை மாவட்டச் செயலர் தோழர் A சுப்பிரமணியன்  நன்றி கூற கருத்தரங்கம் காலத்தே இனிதே நிறைவேறியது.
      நாம் உறுதி ஏற்கும் போது அல்லது ஒரு விரதத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அனுசரிப்போம். நமது 100 நாள் திட்டம் இரண்டு மண்டலமாகும். அப்படி அனுசரிக்கும் போது அதுவே நமக்கு பழக்கமாகி, அது நமது வழக்கமாக என்றென்றும் எப்போதும் மாறிப் போகும். புன்னகையுடன் சேவையை நமது டூல்ஸ் பேக்கில் இணைத்துக் கொள்வோம். கருத்தரங்கின் செய்தியை கிளைகளுக்கு எடுத்துச் செல்வோம்
      நாம் தனியாகச் செய்யக் கூடியது BSNL திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருப்பது, அதனை மக்களுக்குப் பயன்படும் வகையில் உதவுவது, சந்தைப்படுத்துவது.
      நாம் குழுவாகச் செய்ய வேண்டுபவைகள் குறித்து இணைந்து திட்டமிட்டு செயலாற்றுவது,
( உதாரணம் மேளாக்களுக்கு ஏற்பாடு செய்வது அவற்றில் பங்கேற்பது முதலியன )
      மூன்றாவது, கருவிகள் உதிரிபாகங்கள் கேபிள் டிராப் ஒயர் தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டுவருதல் என பலவாறாக நமது நிறுவனத்தின் வருமானம் உயர்ந்திட பாடுபடுவோம்.
      நாம் முடிவு செய்தால் நம்மை வெல்வார் யார் உண்டு? உறுதியோடு களத்தில் இறங்குவோம் கடுமையான வெள்ளத்தில் நம்மால் சேவையாற்ற முடியுமென்றால், சாதாரண காலத்தில் முடியாதா என்ன?
புன்னகையும் நம்மிடத்தே கருவியாகட்டும் !
புன்னகையே புதிய போர்ப் பாட்டு !
புன்னகையே புதுப் போர்அணிவகுப்பு !
சிம் விற்பனையில் அட்டையை அல்ல,
புன்னகையோடு புதிய உறவைத் தொடங்குவோம்!