.

Wednesday, September 30, 2015


இன்று பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்!! 


தோழர் K. செல்வராஜ் STS. கடலூர்.
  
          எளிமையும் நேர்மையும் மிக்க பெருந்தலைவர் காமராஜர் இவரது ஆதர்ச தலைவர், நமது கூட்டங்களில் காங்கிரஸ் குறித்து சில போழ்து அதிகம் விமர்சிக்கும் போதெல்லாம் எதிர்ப்பை பதிவு செய்வார்அது கட்சி அரசியல்பாற் பட்டதன்று; கொள்கை விமர்சனத்தில் நேர்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்அதே நேர்மை நமது சங்கத்திலும் இருக்க வேண்டும் என குரல் கொடுத்தவர்
            மாவட்ட அலுவலகக் கிளை சார்பில் பாராட்டு விழாவில் அனைத்து சங்கத்தினரும் பாராட்டினர் 

 தோழரின் ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள் !!! 

----------------------------------------------------------------------------------      
                                     தோழர்  K.பன்னீர் செல்வம்  SDE- கடலூர்

ஒரு வேலையை ஒருவர் செய்து முடிக்க 10 நாட்கள் ஆகும் என்றால் 10 பேர்கள் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள் என கணக்குப் பாடத்தில் ஒரு கேள்வி உண்டு. ஒரே நாளில் முடித்துவிடுவர் என்பது பதில்
            அந்த 10 பேர் குழுவிற்கு தோழர் பன்னீர் செல்வம்  SDE டீம் லீடராக இருந்தால் பாதி நாளிலேயே சிறப்பாக முடிப்பது மட்டுமல்ல, பணி முடிந்த பிறகு மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்பது தோழமைக் கணக்கு.
            அற்புதமான டீம் லீடர், சமீபத்திய கடுமையான விபத்திற்கு பிறகு குணமடைந்து வந்தார் என்றால் அதற்குக் காரணம் பணிக்காலமெல்லாம் அவர் விதைத்த தோழமை நட்பும் அன்புமே ஆகும், அவர்களின் நல்விழைவும் தோழரின் மன உறுதியுமேயாகும்,

            அவரது பணி ஓய்வுக்காலம் சிறப்புடன் நலமுடன் அமைய வாழ்த்துகிறோம்!!!

---------------------------------------------------------------------------------------------------------

      
தோழர் V.சாம்பமூர்த்தி TTA. திண்டிவனம்
           
பாழுக்குழைத் தோமடாதோழா! பசையற்றுப் போனோ மடாஎன்பது பொதுவான நிலையாயினும் நாம் நமது முயற்சியைக் கைவிடுவதில்லை, நிலைமை மாறும் என்ற நம்பிக்கைதான்மேலும் முயற்சி திருவினை ஆக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பன மூத்தோர் மொழியாயிற்றே.
            அதற்கு எடுத்துக்காட்டுதான் நமது தோழர் V.சாம்பமூர்த்தி TTA. அவர்கள்கேசுவல் மஸ்தூராகப் பணியில் சேர்ந்த அவர் தனது விடா முயற்சியால் உழைப்பால் TTA ஆக  உயர்ந்து இன்று ஓய்வுபெறுகிறார்.
            நேசத்திற்குரிய தோழரின் ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள் !!!


திண்டிவனம் தோழர்.சாம்பமூர்த்தி TTA அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளை தோழர். J.ஜெயச்சந்திரன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை கிளைச்செயலர் தோழர்.M.செல்வகுமார் சிறப்பாக செய்திருந்தார். தோழமை சங்க நிர்வாகிகள்,தோழர்கள், ஓய்வு பெற்ற மூத்த த்தோழர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 திரு.நடராஜன் SDE, திரு.விநாயகம் SDE, 
திரு கலைச்செல்வன் SDE அவர்களும் கலந்துகொண்டு தோழரை வாழ்த்தி கெளரவித்தனர்.