.

Sunday, December 30, 2018

இன்று 31.12.2018 பணி ஓய்வு பெறும் 
கடலூர் பொது மேலாளர் அலுவலகத் தோழியர்கள் 
C.சம்மனசு மேரி O.S
உஷா கோபாலகிருஷ்ணன் O.S
ஆகியோரின்
பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய 
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Saturday, December 22, 2018


Image result for prapanjan writer
அஞ்சலி…..
பிரபஞ்சத்தின் ஒருதுளியெனத்தான்
உன் இருப்பு இருந்தது...
ஆனால் படைப்புலகில்
நீயும் ஒரு சூரியனாகத்தான்
இருந்தாய்...

பெண்மையை போற்றிய
பெருந்தகைநீ...
உன்எழுத்துக்கள்
உழுதமனங்களில்
என்றும் பசுமையே
வேர்விட்டிருக்கும்.

புதுவைஉன்னால்
இன்னொரு மகுடத்தை
சுமந்துகொண்டிருந்தது..
சிலவெற்றிடங்களை
எதைக்கொண்டும்
நிரப்பமுடியாது.

மென்மையான
உனதுகுரல்...
சாந்தமானகுணம்
ஒரு எழுத்தாளனுக்கானதல்ல..
ஆயினும் உனது போர்குணம்
எதற்கும் சமரசம்
செய்துகொண்டதில்லை...

எழுத்துச்சிற்பியே
வாழும்போது
வாழ்ந்தவன் நீ...
போய்வா..
தமிழிருக்கும்வரை
நீயும் இருப்பாய்.

NFTE செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நமது தோழர் சிரில்  அறக்கட்டளை தமிழ் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்Image may contain: 5 people, including Sridhar Ramachandran, people smiling, people standing




Wednesday, December 19, 2018


CMD உடன் சந்திப்பு:
நமது அகில இந்தியத்தலைவர் மற்றும் பொதுச்செயலர் ஆகியோர் CMD-யை சந்தித்தனர் தலைவர்கள் தற்போது நிலவியுள்ள நிதிநெருக்கடிபற்றி விவாதித்தனர், மேலும்   நிர்வாகம் தனது செலவினங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அது கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து துவங்கவேண்டுமெனவும் தெரிவித்தனர். GPF, ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவைகளை அரசுக்கு செலுத்தாமல் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட வங்கிக் கடன்கள் வங்கிகளுக்கு செலுத்தப்படாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டினர். CMD  தற்போதைய நிலைமை 15 நாட்களுக்குள் தளர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.


Tuesday, December 18, 2018


தோழர் PS அவர்களின் இறுதி சடங்கு இன்று(18.12.2018) மாலை 7.00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெறும். 

விலாசம்: எண் 6 கல்லூரி ஆசிரியர் நகர் (சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடிகோண்டூர் அஞ்சல்கடலூர் 


வருந்துகிறோம்…
கடலூர் வெளிப்பகுதித் தோழர் S.நவாப்ஜான் TT (FriendsNagar Exge) அவர்களின் தாயார், திரு.ஷேக் (Retd Cable Splicer) அவர்களின் மனைவி இன்று 18.12.2018 மதியம் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி நிகழ்ச்சி நாளை 19.12.2018 கடலூர் வண்ணாரப்பாளையம் தொலைபேசி ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

Monday, December 17, 2018




தோழரது இறுதி நிகழ்வு புதன்கிழமை(19.12.2018) காலை அவரது இல்லத்தில் நடைபெறும். 
விலாசம்: எண் 6 கல்லூரி ஆசிரியர் நகர் (சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர் 


அஞ்சலி




கடலூர் முன்னணித் தோழரும், நீண்ட காலமாக மாவட்டப் பொருளாளர் பணியில் சிறப்பாக மணியாற்றியவரும், மாவட்ட செயலராக பணிபுரிந்தவருமான,  அனைவராலும் PS என்று அழைக்கப்படும் தோழர் P. சுப்ரமணியன் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

தோழரது விலாசம்: எண் 6 காலேஜ் ஆசிரியர்கள் நகர்,(சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர் 

Wednesday, December 12, 2018


முன் வைக்கப்படும் கோரிக்கைகள்

  • 1.     அக்டோபர், நவம்பர் மாத சம்பள பிரச்சனை
  • 2.     EPF, ESI , BONUS முறைகேடுகள்
  • 3.     வேலையிலிருந்து நீக்கப்பட்ட தோழர்களுக்கு  உடணடியாக பணி
  • 4.     ஆட்குறைப்பு
  • 5.     பணி மாற்றல்கள்
  • 6.     2009 நிலுவை தொகை
  • 7.     பணித்தன்மைக்கேற்ப ஊதியம்
  • 8.     தொழிலாளர் நல ஆணையத்தில் ஒப்பந்தகாரர் மீது புகார் அளிப்பது


Friday, December 7, 2018

TMTCLU 

மாவட்ட செயலக கூட்டம் - பண்ருட்டி 


8-12-2018 அன்று காலை 9.00 மணியளவில்  பண்ருட்டி AITUC  தொழிற்சங்க மாவட்ட அலுவலகத்தில்  நமது TMTCLU சங்கத்தின் மாவட்ட செயலக கூட்டம் நடைபெறும். கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட  பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளவும்.





Sunday, December 2, 2018



செயலாளர்-டெலிகாம் மற்றும் AUAB ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இன்று 2.12. 2018 நடைபெற்றது. 
அரசு விதிமுறைப்படி 4 ஜி ஸ்பெக்ட்ரம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் பிஎஸ்என்எல் மூலம் ஓய்வூதிய பங்களிப்பு செலுத்துதல் ஆகியவற்றில் ஒதுக்கீடு செய்வதற்கான சிக்கல்களில் முன்னேற்றங்கள் உள்ளன. 
இருப்பினும், 3 வது சம்பள மறுபரிசீலனை பிரச்சினையில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்த பிரச்சினையின் நிலை குறித்து செயலாளர், டெலிகாம் அளித்த பதிலில் நம்பிக்கை இல்லை.
இத்தகைய சூழ்நிலைகளில், தகவல் தொடர்புத்துறை அமைச்சருடன் கலந்துரையாட வாய்ப்பளிக்கும் வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு, AUAB தலைவர்கள் ஒரு வாரம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது. அமைச்சருடனான   சந்திப்பில் பயனுள்ள தீர்வு காணப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தம் 10-12-2018 அன்று 00:00 மணி முதல் தொடங்கும்.

Saturday, December 1, 2018



வருந்துகிறோம்
கடலூர் CAF Section-ல் பணிபுரியும் தோழர் S.ரமேஷ் Asst Off.Supdt அவர்களின் தகப்பனார் இன்று 1.12.2018 அதிகாலை  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம். அன்னாரது இறுதி சடங்கு இன்று 1.12.2018 மாலை 4.00 மணியளவில் கடலூர் பீச்ரோடு தீயணைப்பு நிலையத்தின் அருகிலுள்ள திருவள்ளுவர் நகர், 29ம் இலக்கமுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.