.

Monday, April 29, 2013

தோழர் ரகுநாதனுக்கு பாராட்டு விழா


விழாச் செய்திகள் 


29/04/2013 – புழுக்கமில்லாத இதமான மாலைப் பொழுது. பொது மேலாளர் அலுவலக வாயில்.

“சின்ன ரகு என அன்புடன அனைவராலும் அழைக்கப் படும் தோழர் V. ரகுநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா!

தோழர் வெங்கட்ராமன் வரவேற்க விழா துவங்கியது.

“பெரிய ரகுதான் நேரில் வர இயலாத காரணத்தால் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதனை விழாத் தலைவர் தோழர் B.K அவர்கள் வாசித்தார்.

அவரை வாழ்த்துவதற்காக மாவட்டத்தின் தொலைதூரங்களிலிருந்தும், ஏன் சேலம் போன்ற இடங்களிலிருந்தும் கூட, ஓய்வு பெற்றவர்கள் வந்திருந்தனர். தூரம் அதிகம் தான். ஆனால் மனதால் நெருங்கிய வராயிற்றே! ரகுவின் கூற்றுப்படியே எதிரிகளே இல்லாத தோழர் அல்லவா இவர்!

இவரை வாழ்த்திய திருமதி ஜெயந்தி அபர்ணா (DGM-CFA) இவரை ‘ஸ்திதப் பிரக்ஞை (கலங்காத-அசையாத-உறுதியான மனம் என்று பொருள்) உள்ள இவருக்கு எதிர்கள் அமைவது எங்கனம் சாத்தியமாகும்  என்றார்.

அனைத்துத் தரப்பினரும் வந்திருப்பதே இவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதைச் சொல்லும் என்றார் திரு.ராதாகிருஷ்னன் (DGM-CM) . நிறைவான குண நலன்களைப் பெற்றவர் எனப் புகழ்ந்தார் திரு.சாந்தகுமார் (DGM-FIN).

தோழர் ரகுவின் பாராட்டத் தக்க இலாக்காப் பணிகளப் பட்டியலிட்டார் பொது மேலாளர் திரு. லியோ அவர்கள். நமக்கே ஆச்சர்யம்..!  இந்தப் பணிகளுக்குப் பின்னால் இருந்தது தோழர் ரகுவா?

திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ரகு ஏற்பாடு செய்திட்ட கேபிள் பிளேனிங் தான் இன்னமும் உள்ளது என  நம்மை வியப்பிலாழ்த்தினார், ஓய்வு பெற்ற DGM  திரு ரவீந்திரன் அவர்கள்.

தோழர் ரகுவினை “திருத்தொண்டருடன் உவமையாக்கிக் காட்டினார், நமது தோழர் லோகனாதன்.

BSNLEU மாவட்டச் செயலர் தோழர் சம்பந்தம் அவர்கள் ஓய்வு பெறுபவர்களுக்கு இது போன்று அனைவரும் இணைந்து பிரிவு உபசார விழா நடத்த வேண்டும் என்ற, இன்றைய தினங்களுக்கேற்ற பொருள் நிறைந்த ஆலோசனை தந்தார்.  களங்கமற்ற மனிதர், நேர்மையானவர், மன வலிமை மிக்கவர் என புகழ்ந்துரைத்தார்.

“பாண்டுஎன உரிமையுடனும், அன்புடனும் அழைக்கப் படும் தோழர் பாண்டுரங்கசன் (SNEA மாவட்டச் செயலர்), ரகு போன்ற தோழர்களைப் பார்ப்பது அபூர்வம் என்றார். ரகுவிற்கும் அவரது துணைவியார் திருமதி சாவித்திரிக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

FNTO மாவட்டச் செயலர் தோழர் ஆர்.ஜெயபால் அவர்கள், வாடிய முகத்தைக் கூட காணச் சகியாதவர் ரகு என்றார்.

எஸ்ஸார்ஸி அவர்கள் ரகு போன்ற தோழர்களால்தான் NFTE பெருமைபெற்றது என்றார். ரகுவின் இலக்கிய ரசனையையும் கிலாசித்துச் சொன்னார். ராமலிங்க சுவாமிகளின் வரிகளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் தோழர் ரகு என்றார்.

தோழர் ஸ்ரீதர் ரத்தினச் சுருக்கமாக, தான் ரகுவின்  சீடன் என்றுதான் சொல்லிக்கொள்வேன் என்றார்.

இறுதியாக விழா நாயகன் தோழர் ரகு ஏற்புரை வழங்க, தோழர் வேதராமன் நன்றி நவில, தோழர் ரகு அளித்த சிறப்பான விருந்துபச் சாரத்துடன் விழா இனிதே முடிவடைந்த்து. அவருடைய நண்பர்கள் பலரும் தோழர் ரகுவிற்கு புத்தகங்களையும், சால்வைகளயும் பரிசளித்து மகிழ்ந்தனர்.

விழாவில் பங்கேற்ற அத்துனைத் தோழியர்களுக்கும், தோழர்களுக்கும் நமது நன்றி!


தோழர் ‘பெரிய ரகுவின் 
செய்தியினை படிக்க Click here

பாராட்டு விழா புகைப்படங்களைப் பார்க்க Click Here

இம்மாதம் பணி ஓய்வு பெறும் கீழ்க்கண்ட தோழர்களின், பணி ஓய்வுக்காலம் நல்ல உடல் நலத்துடனும், வளமையுடன் அமைந்திட மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.
1.  தோழர் மாணிக்கமூர்த்தி P.  (STS), VLU

2.  தோழியர் லலிதா  P (STS), CDL

3.  தோழியர் மெர்ஸிமகிழ்ச்செல்வி(STS)NTS-VR

4.   தோழர் ராமலிங்கம்  TM (CDM)

Friday, April 26, 2013

NFTE RECOGNIZED


கடலூர் தொலைபேசிக் கிளையில் அத்துமீரல்

இன்று காலை தபால் தந்தி ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலுக்கான பிரச்சாரத்திற்க்கு திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையம் சென்ற நமது மாவட்ட செயலர் இரா. ஸ்ரீதர் அவர்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் மாவட்ட சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பிரச்சார நோட்டீசை ஒட்டியபொழுது அங்கிருந்த தோழர். விநாயகமூர்த்தி, மாவட்ட செயலரை தள்ளி, நோட்டீசை கிழித்தார். அதை தடுக்க முற்பட்ட மாவட்ட செயலரை தாக்கவும் முயற்சி செய்தார். இந்தத் தவறை சுட்டிக்காட்டிய மற்ற தோழர்களின் மீதும், நமது மாவட்ட செயலரின் மீதும், நமது சம்மேளன செயலரின் அறிவுறுத்தலின்படி திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் 9 நபர்களின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணிக்கு காவல் நிலையத்திற்க்கு விசாரனைக்கு வரும்படி காவல் நிலைய அதிகாரியிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி வந்துள்ளது. 
அநியாயத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலரின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை நியாயத்தின் பக்கம் நின்று எதிர்கொள்வோம். 
இந்த அநாகரீக செயலை மாவட்ட சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
-       மாவட்ட சங்கம்

Tuesday, April 23, 2013

Circle Union says...



GOM decisions after 4 months may bring far reaching consequences. Let us be ready to unite and face any eventuality. The foremost task before us  is to submit a Unified single Note on behalf of the Staff side on the issues of safeguarding Pension, Contribution on actual pay, Guarantee for Pension Revision whenever CG Pension Revision takes place, Compensation as assured during Corporatisation, Job Security, Periodical Tariff Resestructuring to Augment Revenue, Concrete measures for arresting  Losses , Participation in the Management right from the level of Board to SSA. We request our AI Leaders   to arrange meeting  of Staff side and setup a committee to discuss and prepare some focused note for submitting to the GOM. We should try our best to give audience to the Panel to impress upon our stakes.

                              BSNL - MTNL  

சீரமைப்புக்குழு 



சென்ற மாதம் இலாக்கா அமைச்சர் கபில் சிபல் நலிவடைந்து  நோயுற்று வரும் BSNL மற்றும் MTNL   நிறுவனங்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும் அவற்றை சீரமைப்பது பற்றியும் 

பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் 

அதன் அடிப்படையில் பிரதமர்  நலிவுற்று  வரும் BSNL - MTNL நிறுவனங்களின்  நிலை பற்றி ஆராயவும் அவற்றிற்கு புத்துணர்ச்சி அளிக்கவும் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்திரவிட்டுள்ளார். 
3 மாதங்களுக்குள் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மந்திரிகள் குழு 

  1.  நிதி மந்திரி  சிதம்பரம் 
  2. தொலைத்தொடர்பு மந்திரி கபில்சிபல் 
  3. வர்த்தக மந்திரி ஆனந்த் ஷர்மா 
  4. சட்ட மந்திரி அஷ்வின்  குமார் 
  5. தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி மணிஷ் திவாரி 
  6. மாநிலங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி 
  7. திட்டக்குழு இணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா 

Friday, April 19, 2013

வெற்றியினைக் கொண்டாடுவோம்.

BSNLEU விற்கு, சந்தா பிடித்தம் செய்யும் திட்டத்தின்படியே, 1,14,535 உறுப்பினர்கள் உள்ளனர் என மேடைதோறும் முழ்ங்கினார் தோழர் அபி. அவர்கள் மட்டுமே 51% க்கு மேல் பெற்று NFTE இல்லாமல் போய்விடும் என ஆனித்தரமாக எழுதியிருந்தார்.

அது மாத்திரமல்ல, NFTEக்கு 42 ஆயிரம் உறுப்பினர்கள் கூட கிடையாது. ஆகவே NFTEக்கு இரண்டாவது அங்கீகாரம் கூட கிடைக்காது என்றார்.

ஆனால் இன்று BSNLEUவோ 99,380 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அவரது கூற்றின்படியே 15,000 க்கும் மேற்பட்ட BSNLEU உறுப்பினர்களின் வாக்குகள் NFTEக்கு வாக்காக மாறியுள்ளது. 

தோழர் அபியின் அரூடம் ஏன் பொய்த்துப் போனது?  

BSNLUE வின் வாக்குகள் ஏன் குறைந்தது? 

நமது சங்கம் கூடுதலாக 20,000 வாக்குகள் பெற்றது எங்கனம்?

ஊழியர்கள் நம்மை விரும்புகிறார்கள், நம்புகிறார்கள் என்பதைத்தான்  அகில இந்திய மற்றும் தமிழக தேர்தல் முடிவுகள் நிரூபிக்கிறது! நம்மைப் பணிசெய்ய தொழிலாளர்கள் பணித்துள்ளனர். அதனைச் சிரமேற்கொள்வது நமது கடமை.

சென்னையில் கூட சம்பளத்தின் மூலம் சந்தா பிடிக்கும் எண்ணிக்கையின் படி BSNLEU குறைவாகவும், நாம் அதிகமாகவும்தான் வாக்குகள் பெற்றுள்ளோம்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, நமக்கு, தொழிலாளர்களுக்காக  அங்கீகாரத்தோடு போராடும் வாய்ப்பும் தருணமும் வந்து விட்டது. 

இனி JCM அமைப்புகளில் இடம் பெறுவதால், நம்மால் மேலும் வலுவோடு  ஊழியர் நலன் காக்க வாதாட இயலும்! போராட முடியும்!

எட்டு ஆண்டுகள் அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நம்மால் பல்வேறு பிரச்சினைகளத் தீர்க்க முடிந்திருக்கும் போது, இப்போது அங்கீகாரமும் பெற்ற நிலையில், மேலும் உத்வேகத்தோடு, புத்துணர்வோடு, ஆற்றலுடன் நம்மால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் அல்லவா?  


Click here - break up of votes

Thursday, April 18, 2013

நாம் அங்கீகாரம் பெறுகிறோம்.


நடந்து முடிந்த ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில், எந்த ஒரு சங்கமும் ஐம்பது சதத்திற்கு மேலாக ஓட்டுக்களைப் பெறவில்லை. எனவே புதிய அங்கீகார விதிகளின் படி (Click Here to read the New Recognition Rules)இரண்டு சங்கங்களுமே சமஅந்தஸ்த்துடன்  அங்கிகரிக்கப் பட வேண்டும்.

நாம் அனைத்து சர்க்கிள்களிலும் அங்கிகரிக்கப்பட இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, தோழர்களே, அனைத்து மட்டத்திலும் அருவாக்கப்படும் கவுன்ஸில்களிலும் பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில் (விகிதாச்சார முறையில்) கவுன்சில் உறுப்பினர்கள் அமையும்.  இத்தேர்தலில், BSNLEU 99,380 வாக்குகளும் NFTE BSNL சங்கம்- 61,915 வாக்குகளும் பெற்றுள்ளன. எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு புதிய அங்கீகார விதிகளின்  அடிப்படையில் இரண்டு சங்கங்களும் அங்கீகாரம் பெற்றவைகளாக செயல்படும். 

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நமது NFTE சங்கத்திற்கு JCM கூட்டு ஆலோசனைக் குழுவில் ஊழியர் பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி! 

 JCM கூட்டு ஆலோசனைக் குழுவில் நமக்கு 5 இடங்களும் BSNLEU விற்கு 9 இடங்களும் கிடைக்கக் கூடும். நமது சங்கக்த்திளிருந்து JCM தலைவரும்  BSNLEU-விலிருந்து  செயலரும்  இருப்பர்.

இந்த வெற்றிக்கு உழைத்திட்ட அனைத்து தோழர்கள்/ தோழியர்கள், தோழமைச் சங்க தோழர்கள் ஆகியோருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி! நமது மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நமது நன்றியினை சார்ப்பிக்கிறோம்.

நமது கடமையும் பொறுப்பும் பெரிது என்பதை உணர்ந்து நமது செயல்பாட்டை தொடர உறுதிஏற்போம். 

அகில இந்திய முடிவுகளைத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். 

Chief returning Officers letter - Click Here




Results

 Tamil Nadu Results - Printable format-Click here

கடலூர் மாவட்டத்தில் மிண்டும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தோழர்களுக்கும் தோழியர்களுக்கும், தோழமைச் சங்கங்களுக்கும் நமது 
நெஞ்சு நிறை நன்றி. 

Election Updates

கடலூர்  ஒட்டு விபரங்கள் 

NFTE: 528
BSNLEU: 283
FNTO: 55
பகுஜன்: 4
DTU: 1
அண்ணா: 2
பாட்டாளி: 5
ராஷ்ட்ரியா:1
DEU: 1
Invalid: 18
                     
                                                                 NFTE          POLLED      BSNLEU


1
COIMBATORE
        586
1782
1022*
2
CUDDALORE
        528
924
283*
3
DHARMAPURI
         70
410
309*
4
ERODE
       392
1014
521*
5
KARAIKUDI
274
485
77*
6
KUMBAKONAM
        378
553
   96*
7
MADURAI
    585
1774
797*
8
NAGERCOIL
        116
475
280*
9
NILGIRIS
          47
227
176*
        10
PUDUCHERRY
154
359
164*
11
SALEM
        696
1414
584*
12
THANJAVUR
        572
780
116*
13
TIRUNELVELI
        369
778
315*
14
TRICHY
   741
1559
454*
15
TUTICORIN
183
476
224*
16
VELLORE
   772
1186
310*
17
VIRUDHUNAGAR
234
523
             256*
18
CGM(O)CHENNAI-
225
555
194*

TOTAL

15274


Total:      15274
NFTE:      6922
BSNLEU: 6178
DIFF:         744
Last election results - click here

or CLICK HERE

* DECLARED