.

Friday, April 19, 2013

வெற்றியினைக் கொண்டாடுவோம்.

BSNLEU விற்கு, சந்தா பிடித்தம் செய்யும் திட்டத்தின்படியே, 1,14,535 உறுப்பினர்கள் உள்ளனர் என மேடைதோறும் முழ்ங்கினார் தோழர் அபி. அவர்கள் மட்டுமே 51% க்கு மேல் பெற்று NFTE இல்லாமல் போய்விடும் என ஆனித்தரமாக எழுதியிருந்தார்.

அது மாத்திரமல்ல, NFTEக்கு 42 ஆயிரம் உறுப்பினர்கள் கூட கிடையாது. ஆகவே NFTEக்கு இரண்டாவது அங்கீகாரம் கூட கிடைக்காது என்றார்.

ஆனால் இன்று BSNLEUவோ 99,380 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அவரது கூற்றின்படியே 15,000 க்கும் மேற்பட்ட BSNLEU உறுப்பினர்களின் வாக்குகள் NFTEக்கு வாக்காக மாறியுள்ளது. 

தோழர் அபியின் அரூடம் ஏன் பொய்த்துப் போனது?  

BSNLUE வின் வாக்குகள் ஏன் குறைந்தது? 

நமது சங்கம் கூடுதலாக 20,000 வாக்குகள் பெற்றது எங்கனம்?

ஊழியர்கள் நம்மை விரும்புகிறார்கள், நம்புகிறார்கள் என்பதைத்தான்  அகில இந்திய மற்றும் தமிழக தேர்தல் முடிவுகள் நிரூபிக்கிறது! நம்மைப் பணிசெய்ய தொழிலாளர்கள் பணித்துள்ளனர். அதனைச் சிரமேற்கொள்வது நமது கடமை.

சென்னையில் கூட சம்பளத்தின் மூலம் சந்தா பிடிக்கும் எண்ணிக்கையின் படி BSNLEU குறைவாகவும், நாம் அதிகமாகவும்தான் வாக்குகள் பெற்றுள்ளோம்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, நமக்கு, தொழிலாளர்களுக்காக  அங்கீகாரத்தோடு போராடும் வாய்ப்பும் தருணமும் வந்து விட்டது. 

இனி JCM அமைப்புகளில் இடம் பெறுவதால், நம்மால் மேலும் வலுவோடு  ஊழியர் நலன் காக்க வாதாட இயலும்! போராட முடியும்!

எட்டு ஆண்டுகள் அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நம்மால் பல்வேறு பிரச்சினைகளத் தீர்க்க முடிந்திருக்கும் போது, இப்போது அங்கீகாரமும் பெற்ற நிலையில், மேலும் உத்வேகத்தோடு, புத்துணர்வோடு, ஆற்றலுடன் நம்மால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் அல்லவா?  


Click here - break up of votes

1 comment: