.

Friday, November 15, 2013

பி எஸ் என் எல் கடலூர் -குழந்தைகள் தின கொண்டாட்டம் -14-11-2013

பி எஸ் என் எல் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில் அரசு சேவை இல்லத்தில் சமுக நலத்துறையுடன் இணைந்து 14-11-2013 மாலை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நமது முதுநிலை பொதுமேலாளர் தலைமையேற்று பி எஸ் என் எல் சார்பில் நலத்திட்ட உதவிகளை சேவை இல்லத்திற்கு வழங்கினார். மிதிவண்டி, எமர்ஜென்சி லேம்ப் , சமையல் உபகரணங்கள் , நோட்டு புத்தகங்கள் , பிஸ்கட்  போன்றவை வழங்கப்பட்டன .
துணை பொதுமேலாளர்கள் நிதி,நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , வெளிப்புற கிளை தலைவர் V இளங்கோவன் TTA ஆகியோர் கலந்துகொண்டனர் .
SDE மார்க்கெட்டிங் P சிவகுமரன் நன்றியுரை ஆற்றினார்.
சிறிய முயற்சியாக இருந்தாலும் கடைசி நேர முடிவாக இருந்தாலும் நல்ல முடிவு எடுத்த மார்கெட்டிங் பிரிவிற்கு குறிப்பாக AGM மார்க்கெட்டிங் P குணசேகரன் அவர்களுக்கும் நமது நன்றிகள் .





No comments:

Post a Comment