.

Monday, October 27, 2014

தர்ணா போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்படாததை  கண்டித்து, தீபாவளி பண்டிகை முதல் நாளான     21-10-2014 செவ்வாய்கிழமை BSNLEU,NFTE மாவட்ட செயலர்கள் இணைந்து அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர்  (நிர்வாகம்) உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் வந்து தீபாவளி மறுநாளுக்குள் (24-10-2014) அனைத்து பகுதிகளிலும் சம்பள பட்டுவாடா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  அளித்த உறுதிமொழி அளித்தார். ஆனால், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இன்று வரை வழங்கப்படவில்லை. ஆகவே, ஒப்பந்தக்காரர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உடனடியாக சம்பள பட்டுவாடா நடத்தகோரியும் இன்று (27-10-2014 திங்கள் கிழமை) மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெறும்.
போராட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரும் கலந்து கொள்வோம்!

No comments:

Post a Comment