.

Saturday, January 17, 2015

17-01-2015
ஒற்றுமைக்கான முயற்சி

தோழர்களே!..
காணும் பொங்கல் தினமான 17-01-2015 அன்று
மாவட்ட சங்க அலுவலகத்தில் ஒரு நல்ல முயற்சி
கடலூர் மாவட்டத்தில் அனைவரின் மரியாதைக்குரிய மூத்ததோழர் T.ரகு அவர்கள் நமது மாவட்டத் தலைவர் தோழர். R.செல்வம், மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்து ஒற்றுமைக்கான தேவையை பற்றியும், நடைபெற்ற நிகழ்வுகளின் தாக்கங்களை பற்றியும் மனம் திறந்து கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட உதவித்தலைவர் தோழர்.P.அழகிரி, மாவட்ட உதவிச் செயலர் தோழர்.D.ரவிச்சந்திரன், தோழர்கள் K.மகேஸ்வரன், V.இளங்கோவன் முதலியோர் திறந்த மனதோடு தங்களது கருத்துகளை கூறினார்கள். மற்றும் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் A.C.முகுந்தன், GM(O) கிளைச்செயலர் தோழர். S.ராஜேந்திரன், V.முத்துவேல், R.நந்தகுமார் மற்றும் P.குமார் ஆகியோர் உடனிருந்தனர்...

எந்த முயற்சியும் உடனடியாக பலன் தந்துவிடுவதில்லை. என்றாலும், பலன் தராது போகாது. நாமும் நம்பிக்கையோடு எதிபார்க்கின்றோம். நமது தோழர் ரகுவின் முயற்சி வெற்றி பெறவேண்டுமென்று!...

மேலும் தோழர் ஆர்.கே அவர்களின் ஆலோசனைகளை நாம் பெற வேண்டும் என்ற அவரின் கருத்தை மனதார வழிமொழிகின்றோம்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு....

ஒரு கூட்டத்துடன் நாம் எதையும் முடிந்து விட்டதாக கருதுவதில்லை.


“நாம் விடாப்பிடியான நம்பிக்கையாளர்கள், பாறையில் விதைத்தாலும் ஒரு நாள் முளை விடும் என்ற மாற்ற முடியாத எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பது அடிக்கடி தோழர் ரகு கூறும் வாசகம்.

No comments:

Post a Comment