.

Saturday, January 2, 2016

TMTCLU
கிளை பொதுக்குழுக்கூட்டம் சிதம்பரம்.


புத்தாண்டு தினமான 01-01-2016 மாலை சிதம்பரம் கோயில் தொலைபேசி நிலையத்தில் TMTCLU பொதுக்குழுத்தோழர் H.இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிதம்பரம் பகுதி ஒப்பந்த ஊழியர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது ஒப்பந்த ஊழியர் தோழர் K.சுந்தர் வரவேற்புரை வழங்க துவக்கவுரையாக தோழர் R.செல்வம் மாநில பொதுசெயலர் ஒ.ஊ.சங்கம் உரையாற்றினார். அவர் 2014 காரைக்குடியில் துவங்கி இன்றுவரை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையும் , போராட்டங்களையும் பற்றி விளக்கி பேசினார். மற்றும் கோவையில் நடைபெறவுள்ள AITUC மாநாட்டில் நாம் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டிய அவசியத்தை கூறினார். அதனை தொடர்ந்து தோழர்கள் A.சுப்பிரமணியன் மாநில துணைப்பொதுசெயலர், M.S.குமார் மாவட்ட தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் M.S.குமார் பேசும் பொழுது AITUC மாநாட்டு நிதி வசூல், சந்தா நிலுவைகளை உடனடியாக வழங்கி சங்கத்தை வலுபெற செய்ய வலியுறித்தினார். நிறைவுரையாக தோழர்.இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE அவர்கள் உற்சாகம் நிறைந்த உரையுடனும் தோழர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியும் ஆலோசனைகளை வழங்கியதோடு ஒப்பந்ததாரர்களுடன், நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை போராட்டங்களை பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். கூட்டத்தில் சிதம்பரம் NFTE கிளை சங்க தோழர்களும் மாவட்டசங்க தோழர்களும் கலந்துக்கொண்டனர். தோழர் B.சேகர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.







No comments:

Post a Comment