.

Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரி
ஆதரவு ஆர்ப்பாட்டம்
        நமது தமிழரின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்திட உச்சநீதிமன்றம் விதித்த தடையினை நீக்கக்கோரியும், காரணமான பீட்டா அமைப்பினை தடைசெய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் தற்காலிக தொண்டு அமைப்பினர், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்பட  இணைந்து ஆங்காங்கே தொடர்  அறப்போராட்டம்  நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக NFTE-TMTCLU  மாநிலச்சங்கங்கள் தமிழகம் முழுவதும் 19-01-2017 அன்று ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன.  அதனடிப்படையில் 
கடலூரில் நமது  பொது மேலாளர் அலுவலகம் முன்பு 
19.1.2017 மதிய உணவு இடைவேளையில்
ஆர்ப்பாட்டம்
நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு 
தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
               தோழமையுடன்
    மாவட்ட செயலர்கள்
NFTE-TMTCLU மாவட்ட சங்கங்கள்

No comments:

Post a Comment