.

Wednesday, February 22, 2017

AITUC கையெழுத்து இயக்கம்

தமிழகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக எவ்வித பணிப்பாதுகாப்பு இல்லாமல் குறைந்த உதியத்தில், அதிக கூடுதல் வேலை பளுவுடன் பணியாற்றிவரும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தமிழக முதலமைச்சருக்கு தமிழக AITUC சார்பில் கோரிக்கை மனு அளித்திடவுள்ளது. அதற்கான கையெழுத்து இயக்கத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திடவும், இதற்காக கடலூர் மாவட்டத்தில் கருத்தரங்கம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் 21.02.2017 மாலை 5.00மணியளவில் தோழர் S.தமிழ்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலரும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான தோழர் T.மணிவாசகம், கடலூர் AITUC மாவட்ட செயலர் தோழர் துரை, CPI கடலூர் நகரசெயலர் தோழர் குளோப், தோழர் மகாதேவன், AITUC கடலூர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் V.இளங்கோவன், உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க தோழர் ஜோதி, மின்வாரிய பணியாளர் சங்கத் தோழர் இராஜேந்திரன், TMTCLU மாநில இணைப்பொதுசெயலர் தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட செயலரும், AITUC கடலூர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினருமான   தோழர் G.ரெங்கராஜூ, TMTCLU மாவட்ட தலைவர் தோழர் MS.குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். NFTE கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உட்பட மாவட்ட, கிளைத் தோழர்கள் கலந்துகொண்டனர்.  




  

No comments:

Post a Comment