.

Saturday, April 8, 2017

தோழர் குப்தா அவர்களின் 96-வது பிறந்தநாள் விழா


    கடலூரில்  கடலூர் GM அலுவலக கிளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. AIBSNLPWA ஓய்வு பெற்றோர் நலச்சங்கத் தோழர் P.ஜெயராமன் தோழர் குப்தா அவர்களின்  நினைவுகளை தன்னுடைய சொந்த அனுபவங்களோடு பகிர்ந்துகொண்டார். அப்பொழுது போராட்ட த்திற்காக பெற்ற நன்கொடையில் மிகுதியான தொகையில் வாங்கப்பட்டததுதான் கடலூரில் உள்ள போஸ்டல் ஹவுஸ் கட்டிடம். தோழர் குப்தா கடலூரில் கலந்துகொண்டபோது இந்திய நாட்டிலிலேயே சங்கதிற்கான சொந்தக்கட்டிடம் இந்த போஸ்டல் ஹவுஸ்தான் பெருமையோடு குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். அந்த வகையில் டெல்லி தாதா கோஷ் பவன் இரண்டாவதுதான். 
     தொடர்ந்து தோழர் பால்கி அவர்கள் இன்றைய காலகட்டத்தில் தோழர் குப்தாவின் தோழமை அணுகுமுறையின் தேவையை வலியுறுத்தினார். தோழர் V.இளங்கோவன் நன்றி கூறினார். விடுமுறை நாளான போதும் திரளான ஓய்வுபெற்ற தோழர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 


 சிதம்பரம் கிளையில் நடைபெற்ற விழா


No comments:

Post a Comment