.

Wednesday, April 5, 2017

விஞ்சிய இலக்கு....
கூட்டு உழைப்பின் சிறப்பு!
நிர்வாகத்தின் மனம் திறந்த பாராட்டு..

மார்ச் 2017 முடிய புதிய இணைப்புகள் வழங்க மாநில நிர்வாகம் நிர்ணயித்த இலக்கை விஞ்சியது கடலூர் மாவட்டம்.
அதற்குப் பேருதவியாக இருந்தது சங்கங்கள் நடத்திய மேளாக்கள். அதனை அங்கீகரித்து இன்று மதியம் முதன்மைப் பொது மேலாளர் திரு.மார்ஷல் ஆன்டனி லியோ அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பாராட்டினார்.
அப்போது நமது மாவட்ட  செயலர் தோழர் இரா.ஸ்ரீதருக்கு நிர்வாகத்தின் சார்பில் முதன்மைப் பொது மேலாளர் துண்டு அணிவித்தார். உதவிச்செயலர் தோழர் D.குழந்தைநாதன் உடனிருந்தார்.
NFTE மாவட்ட சங்கத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மேளாக்கக்களை சிறப்பாக நடத்திய கடலூர் தோழர்கள் E.விநாயகமூர்த்தி, S.இராஜேந்திரன், சிதம்பரம் தோழர் V.கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி தோழர் V.லோகநாதன் முதலான குழுவினருக்கும்ம அனைத்து தோழர்களுக்கும், CSC தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

இன்னும் கூடுதல் உற்சாகத்தோடு நமது செயல்பாடு விளங்கட்டும்!







No comments:

Post a Comment