.

Monday, July 30, 2018


தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்

கடலூர்  தொலைபேசி கிளை
தோழர்களே!.. தோழியர்களே!!...
        வணக்கம், நமது கடலூர் தொலைபேசியக கிளை மாநாடு27-07-2018 அன்று கடலுயிர் தொலைபேசி நிலைய வளாகத்தில் காலை 10.00 மணியளவில்   தோழியர் R.கஸ்தூரி சம்மேளனக் கொடியேற்றிய உடனே கிளை மாநாடு தோழர் V.இளங்கோவன் கிளைத்தலைவர் தலைமையில் துவங்கியது. தோழர் P.அன்பு வரவேற்புரையாற்றிட , தோழர் J.சித்தார்த்தன் அஞ்சலியுரையாற்றினார். நமது மாநிலத்  துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் தனது கம்பீர குரலில் துவக்கவுரையாற்றி நல்லதொரு மாநாட்டிற்கு வித்திட்டார்.
        இதற்கிடையில் ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்ற  கிளைத்தோழர் R. காண்டீபன் TT/CDL  அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழாவில் தொழிற்சங்க  தலைவர்கள் தோழரின் பணிஓய்வு காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துரை வழங்கினார்கள்.
        பின்னர் ஆண்டறிக்கை, அமைப்பு நிலை  பற்றிய விவாதம் நடைபெற்றது,  சிறு சச்சரவுகளுக்கிடையே  ஆண்டறிக்கை ஏற்கப்பட்டது.   நிர்வாகிகள் தேர்வில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் சில மணி நேரத்திற்கு பிறகு ஒரு சுமூகமான மாநாடாக, ஒற்றுமைக்கான மாநாடாக அமைய   தோழர்கள்  முற்பட்டனர். அதன் பலனாக  நிர்வாகிகள் தேர்வில் ஒன்றுபட்ட  நிர்வாகிகள் வாசிக்கப்பட்டது. ஒற்றுமை மீண்டும் நிரூபிக்கப்பட்டதற்கு இதுவே சான்று.
        வாழ்த்துரையில்  மாநிலச்  உதவிச் செயலர் தோழர் P.சுந்திரமூர்த்தி, மாநிலச் சங்க  சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன், மாவட்ட தலைவர் தோழர் G.கனேசன்,  மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன், மாவட்ட  பொருளாளர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட உதவிச் செயலர் தோழர் M. மஞ்சினி, மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னிர்செல்வம், GM அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன் , மற்றும்  நமது  மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர்  புதிதாக தேர்வு  செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
        சிறப்புரையாக  NFTEயின் மாநில  செயலர் தோழர் K. நடராஜன் ஒரு அற்புதமான , ஒன்றுபட்ட, ஒற்றுமையான கிளை மாநாட்டை நடத்தியுள்ளீர்கள் என தனது சிறப்புரையில் பதிவு செய்தார். அடுத்து TMTCLU  மாநில பொதுச் செயலர் தோழர் R. செல்வம் ஒற்றுமையான முறையில் நடைபெற்ற கிளை மாநாட்டை வாழ்த்தி தனது சிறப்புரையில் பதிவு செய்தார்.

   மாநாட்டிற்கு வந்திருந்து  சிறப்பு செய்த  அனைவருக்கும் தோழர்  M.ராஜவேலு நன்றி கூற   கூட்டம் நிறைவுற்றது

29-07-2018 அன்று நடைபெற்ற       கிளை மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டநிர்வாகிகள் பட்டியல்

தலைவர்                           :தோழர் K. நாராயணன்
துணைத் தலைவர்கள்                    : தோழர் V.மணிமாறன்
                                                            : தோழர் V.சண்முகம்
                                                            : தோழர் S.லோகநாதன்
                                                            : தோழர் S.பலராமன்

செயலர்                            : தோழர் E. விநாயகமூர்த்தி
உதவிச் செயலர்கள்                          : தோழர் P.அன்பு
                                                            : தோழர் P.குமார்
                                                            : தோழர் R.கிருஷ்ணமூர்த்தி
                                                            : தோழர் M.மஞ்சினி

பொருளாளர்                     : தோழர் K.P.தனஞ்ஜெயன்
அமைப்புச் செயலர்கள்                     :  தோழர் J.சித்தார்த்தன்
                                                            : தோழர் R.சுப்ரமணியன்
                                                            : தோழர் S.ரங்கநாதன்
                                                            : தோழர் M.ராஜவேலு

தணிக்கையாளர்                               : தோழர் V.ராஜீ

கிளை மாநாட்டிற்கு கிளை தோழர்கள், தோழியர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கும் பாராட்டுதலை தெரிவித்து  கொள்வதோடு மட்டுமல்லாமல்,   அனைத்து  பகுதியிலிருந்தும்   வந்திருந்து சிறப்பு செய்திட்ட அனைத்து கிளை தோழர்களுக்கும், தொழிற்சங்க  தலைவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில்  நன்றி....
                                                   தோழமையுடன் 
                                                   மாவட்டச் சங்கம், கடலூர் 














No comments:

Post a Comment