.

Tuesday, November 27, 2018


போராட்டம் ஒத்திவைப்பு
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து 28.11.2018 நடைபெறவிருந்த தர்ணாப் போராட்டத்தை ஒட்டி நமது கடலூர் பொதுமேலாளர் தனது குடும்ப துக்க நிகழ்வுக்கு இடையே 26.11.2018 மதியம் 1.00 மணியளவில் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்திட கடலூர் வந்திருந்தார். தோழர்கள் இரா.ஸ்ரீதர், D.குழந்தைநாதன், A.S.குருபிரசாத், R.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற விவாதத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் பொதுமேலாளர் தனது நிகழ்வுகளை முடித்தபின் இரண்டு நாட்களில் மீண்டும் விவாத்திக்கலாம் எனக்கூறியதன் அடிப்படையில் நமது போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.  

No comments:

Post a Comment