.

Thursday, November 29, 2018


பேருருவாய் எழுவோம், பெரும்பணி முடிக்க!
டிசம்பர் 3 முதல் நாடுதழுவிய
காலவரையறையற்றப் பெருந்திரள் வேலைநிறுத்தம் !
BSNL நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு (AUAB கூட்டமைப்பு) 2018 டிசம்பர் 3ம் தேதி தொடங்கி ஒரு சக்தி மிக்க, பெருந்திரள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளது.  கோரிக்கை, மக்கள் பணியாற்ற BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றையை உடனே வழங்கு, தாமதமின்றி ஊதிய மாற்றத்தை அமலாக்கு, ஓய்வூதிய மாற்றத்தைச் செய், ஓய்வூதிய பங்களிப்பில் உள்ள முரண்பாடு களைந்து, ஊழியர்கள் பெறும் உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடு ( அதாவது, தவறான கணக்கீட்டில் நிறுவனத்திடமிருந்து வசூலித்த கோடிக்கணக்கான தொகையைத் திரும்ப வழங்கு) மற்றும் முந்தைய 2வது ஊதிய மாற்றக்குழுவின் போது தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வை என்பதே ஆகும். 


No comments:

Post a Comment