.

Tuesday, July 21, 2020

தோழர்களே!.
       வணக்கம், நமது நிறுவனத்தில் தொடரச்சியாக பாடுப்ட்டு வரும் நமது ஒப்பந்த தொழிலாளர்களை இந்த கொரானா நோய் தொற்று  காலத்திலும்  மனிதாபிமானம் பாராமல்  மாதம் இரு முறை ஆட்குறைப்பு செய்து வருகிறது நமது மாவட்ட நிர்வாகம் .. நாமும் இதன் மீது கடிதம் கொடுத்தும் எதிர்ப்பினை பதிவு செய்தோம்...
     
 அதனையும் மீறி நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலக வழிகாட்டலின் படி தான் தாங்கள் நடந்து கொள்வதாக நம்மிடம் சொல்லி வருகிறது.  சுமார் 50% ஆட்குறைப்பு செய்தாக வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு வருகிறது மாவட்ட நிர்வாகம்.  இரு தினங்களுக்கு முன்பாக நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் கடிதமும் கொடுத்துள்ளோம்.. அதில் சுமார் 50% சதவிதம் ஆட்குறைப்பு செய்து விட்டீர்கள் . இனி யாரையும் வேலையினை விட்டு நீக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு நமது கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் கடிதம்  கொடுத்துள்ளோம்.... அதன் நகல் கீழே பதிவிடப்பட்டுள்ளது...



No comments:

Post a Comment