.

Friday, March 19, 2021

தோழர்களே!
VRS2019இல் சென்ற தோழர்கள் அனைவரும் நிலுவையில் இருந்த கடைசி நான்காம் கட்ட exgaratia தொகை பெற்று இருப்பீர்கள். அது போன்று 60வயது முடித்தவர்கள் commutation, gratuity ஆகியவைகள் பெற்றிருப்பீர்கள். மாதாமாதம் பென்ஷனும் மகிழ்ச்சியோடு பெற்று கொண்டிருப்பீர்கள். இதனை நாம் இன்று மத்திய அரசு பென்ஷன் பெற்றுக் கொண்டிருப்பதற்கு நமது பிதாமகன் தோழர் குப்தா மற்றும் தோழர் ஜெகன் ஆகிய தலைவர்களே காரணமாவர். நமது தமிழ் மாநிலச் சங்கம் நமது இருபெரும் தலைவர்களின் நினைவாக சென்னை தமிழ் மாநில சங்க கட்டிடத்தில் தலைவர்களின் திருஉருவச்சிலையை நிறுவ VRSஇல் செல்லும் தோழர்களிடம் நன்கொடையாக பெற மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நமது மாவட்ட சங்கம் விருப்ப ஓய்வில் சென்ற பெரும்பான்மையான தோழர்களிடம் ரூபாய் இரண்டாயிரம் நன்கொடை பெறப்பட்டது. ஒரு சில தோழர்கள் இதுவரை நன்கொடை அளிக்கவில்லை. நன்கொடை அளிக்காத தோழர்கள் உடனடியாக ரூபாய் 2000 நன்கொடை அளித்து தங்களது கடமையை ஆற்ற தோழமையுடன் வேண்டுகிறேன்.🙏 தோழமையுடன்
*D.குழந்தை நாதன்*
*மாவட்டச் செயலர்*
*NFTE-BSNL*
*கடலூர் மாவட்ட சங்கம்*

No comments:

Post a Comment