.

Wednesday, January 19, 2011

NFTE -க்கான வாக்கு BSNL-நிறுவனத்திற்கான வாக்கு!!

தேர்தல் நாள் நெருங்குகிறது. 
இத்தேர்தல் அங்கீகாரம் NFTE- க்கா  இல்லை BSNLEU-க்கா 
என்பதற்காக இல்லை தோழர்களே!


BSNL-நிறுவனம் இருக்க வேண்டுமா.. வேண்டாமா
என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்!


ஊழியர்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா இல்லையா
என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்!


நாம் போரடிப்பெற்ற போனஸை ஒரே நாளில் காற்றில் 
பறக்கவிட்ட இந்த வக்கற்றவர்களை வெளியேற்ற நமக்கு
ஒரு சந்தர்ப்பமளிக்கும் தேர்தல்!


புதிய சம்பள நிர்ணயத்தில் பெருங்கோட்டை விட்டவர்களை
 இனியும் அனுமதிக்கப் போகிறோமா எனபதற்கான தேர்தல்!


கோட்டை விட்டதோடல்லாமல் - இந்த இழப்பையே 
சாதனையாகச் சொல்லிக்கொண்டு அலையும் போலிப்
 போராட்டக்காரர்களை(!)  அடையாளம் காட்டும் தேர்தல்!


TTA -க்கள் 01.01.07-க்குப்பின் பணிக்கு வந்திருந்தால் 30%
ஊதிய நிர்ணயம் வேண்டாம் என ஏற்றுக்கொண்ட
வர்களை நிராகரிக்கும் தேர்தல்.


10 நாள் விடுப்பை LTC- ன் போது பணமாக்கிக் கொள்வதைக்கூட
எதிர்க்கும் வீணர்களை வீட்டிற்கு அனுப்பும் தேர்தல்!


இரத்தமும் வியர்வையும் சிந்தி நாம் கட்டிய இந்த BSNL -
நாதியற்று பாழடைய விடப்போகிறோமா-இல்லையா 
என்பதற்கான தேர்தல்!


இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.


உற்பத்தியுடன் இணைந்த போனஸை கொச்சைப்படுத்திய
 இந்த வாய்ச்சொல் வீரர்கள் - லாபத்துடன் இணைந்த
 போனஸை "கேட்டுப்பெற்று" நமக்கு பட்டை நாமம்
 சாத்தியவர்கள்.  மருத்துவப்படி,அலவன்ஸ், கருணை 
அடிப்படையில் பணி இப்படி யாவற்றிலும் நமக்கு துரோக
மிழைத்த இந்த வெட்டிப்பேச்சு வீரர்கள் மீண்டும் வெட்கமின்றி
 ஓட்டு கேட்டு வருகின்றனர்.   ஆறு ஆண்டுகளின் 
சாதனைகளாக சொல்லிக்கொள்ள ஒன்றுமேயில்லாத இந்த 
கையாலாகாதவர்கள் "எப்படியாவது நாங்கள்தான்வெல்வோம்...
ஓட்டுக்களை மாற்றிப் போடுங்கள்"  என கெஞ்சும்  பரிதாப 
நிலைக்கு வந்து விட்டனர் - இந்த குள்ள நரிக்கூட்டத்தினர்.


நம்பூதிரி - அபிமன்யூ கோஷ்டியினரால் ஒருபோதும்
ஊழியர்களையோ-நிறுவனத்தினையோ காக்க முடியாது. 
அதற்குண்டான திட்டமோ-சிந்தனையோ-தீர்மானமோ 
அற்றவர்கள். 


இந்த திராணியற்றவர்களிடமா நமது எதிர்காலத்தை 
ஒப்படைக்கப் போகிறோம்?


நினைத்துப்பாருங்கள்..நாம் அங்கீகாரத்தில் இருந்திருந்தால்.....


போனஸை விட்டிருப்போமா?
கேவலமான ஊதிய ஒப்பந்தம் போட்டிருப்போமா?
படு குழப்பமான - முரண்பாடான - தலை சுற்ற வைக்கும் 
பிரமோஷன் உடன்பாடு நடந்திருக்குமா? 
ஊதியத்திலும் - பிரமோஷனிலும் நமக்கும் அதிகாரிகளுக்கும் 
இடையே உள்ள வேறுபாட்டினை பொறுத்திருப்போமா? 
இந்த அவமானங்களை கண்டும் வாளாவிருப்போமா?


இனியும் பொறுப்பதில்லை!


இவர்களை நம்பியது போதும்..  இவர்கள் நம்மை நட்டாற்றில்
 விட்டதும் போதும்.! இந்த வர்க்க துரோகிகளை இனம் 
கண்டு கொண்டோம்! 
இனியும் இந்த குடுகுடுப்பைக் காரர்களுக்கு இடமில்லை!!


நமது ஒவ்வொரு வாக்கும் நம்முடைய எதிர்காலத்தை 
தீர்மானிக்கப் போகிறது!  
நமக்கு அங்கீகாரம் என்றால் - BSNL- க்கு உத்திரவாதம்!  
BSNL-ஊழியர்களின் நலனுக்கு உத்திரவாதம்!!


வீழட்டும் BSNLEU !!   வாழட்டும் BSNL!!!



1 comment:

  1. உங்களின் இத்தகைய கருத்துக்களால் இன்று BSNLEU வின் அடையாளம் வெளிப்பட்டிருக்கிறது. பல தோழர்கள் நம்மோடு இணையவும், வாக்களிக்கவும் உறுதி அளித்திருக்கிறார்கள். தஞ்சையில் சமீபத்தில் இணைந்தோர் பட்டியலை எமது வலை தளத்தில் வெளியிட்டிருக்கிறேன் என்பதையும் உங்களுக்கு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் நன்றியையும் ஏற்ற்றுக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

    எனது E MAIL ID.

    SEENATHAANAPTK@GMAIL.COM.

    ReplyDelete