.

Thursday, March 7, 2013

சர்வ தேச மகளிர் தினம் - மார்ச் 8, 2013

உழைக்கும் மகளிர் அனைவருக்கும் கடலூர் மாவட்டச் சங்கம் தனது சர்வ தேச மகளிர்  தின வாழ்த்துக்களை  உரித்தாக்குகிறது.


கல்வி கோரியதற்காக துப்பாக்கி குண்டினை பரிசாகப் பெற்ற கொடுமையும், ஆசிட் வீச்சும், 
பாலியல் பலாத் காரமும் தினசரி செய்திகளாகி 
விட் டது நமது நெஞ்சைத் துளைக்கிறது. 


ஒரு புறம் ஆண்கள் - பெண்கள் விகிதாச்சாரம் குறைந்து கொண்டே போவது. மற்றொரு புறம் பெண்களுக்கான வன் கொடுமை அதிகரித்துக் கொண்டே போவது உழக்கும் வர்க்கத்தினரை பதறச் செய்கிறது. 

தாய்மையை,  பெண்களை போற்றுவோம் என்பது வெற்று கோஷமாகிவிட்டதா? திடீரென சமுதாயம் வெறி கொண்டு விட்டதா?   நமது கடவுளர்களில் கூட  பலர்  பெண்கள் தாமே?  பின் ஏன்  மகளிருக்கெதிராக இத்தனை கொடுமைகள்?

இல்லை தோழியர்களே! பெண்களுக்காக குரல் 
கொடுப்பதற்காக பலர் உள்ளனர். ஆணால் எதிரி யார் என்பதைக் காண்பதிலும், மகளிருக்காக குரல் கொடுப்பவர்களில் யார் உண்மையான வர்கள் என அடையாளம் காண்பதிலும்  தாம்,  பலர் தவறுகிறோம். 

இந்த கலாச்சார சீர்கேடு எங்கிருந்து துவங்கியது? 
யார் துவங்கியது? ஏன் இம்மாதிரியான வக்கிரங்கள்? 

இந்தமாதிரியான அநியாயங்களுக்குப் பின்னால் மறைந்திருந்து தாக்கும் சூத்திரதாரி யார்? அவைதான் தனியார் மாயம், உலகமயம், தாராள மயம் என்ற ஆயுதங்களைப் பிரயோகிக்கும் ஏகாதிபத்தியம். 

இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தை மட்டுமே சுரண்டும் என எதிர் பார்த்தால் அது தவறு. தனது இலாப வேட்டைக்கு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பர்யம் என 
யாவற்றையும் தகர்க்கும்வல்லமை கொண்டது 
முதலாளித்துவம். 

இந்த தகர்ப்பு வேலைக்கு சினிமா, இன்டர்நெட், 
கலை, இலக்கியம், பத்திரிகை மற்றும் அனைத்து வகையான மீடியாக்களையும், முதலாளித்துவம்  பயன்படுத்தும்! 

தாம் தாக்கப்படுகிறோம் என்தைக்கூட சம்பந்தப்பட்டோர்  உணர வொட்டாமல் செய்யக் கூடிய தண்மை கொண்டது முதலாளித்துவம். வெல்லம் தடவியேகொல்லும்சாமர்த்திய 
தத்துவம். 

எனவே உழைக்கும் வர்க்க அரசியல் ஒன்றே பெண்களுக்கெதிரான அனைத்து குற்றங்க 
ளையும்  நீக்க வல்லது. இது ஆரூடமோ-ஆசையோ அல்ல!  இது ஒரு சமுக விஞ்ஞானம். இதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். புரிந்து கொள்வோமா? 

No comments:

Post a Comment