.

Sunday, April 14, 2013

இன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாள்







  • ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக 

  • வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை 

  • அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; 

  • சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்!

  • வெற்றியோ தோல்வியோ எதுவரினும் 


  • கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், 

  • பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். 

  • நமது திறமையும், நேர்மையும் 

  • வெளியாகும்போது பகைவனும் நம்மை 

  • மதிக்கத் தொடங்குவான்!



  • எவனொருவன் தானே சரணடையாமல், 

  • மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், 

  • எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு 

  • வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே 

  • சுதந்திர மனிதன்.


  • நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் 

  • தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் 

  • சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் 

  • நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு 

  • தெய்வங்கள் எனக்கு இல்லை.


  • சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் 

  • ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் 

  • ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான 

  • திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் 

  • கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.
  • உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க 

  • முடியாதது, தீர்க்க முடியாதது 

  • என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை 

  • வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் 

  • குழிதோண்டிப் புதையுங்கள்.

  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை 

  • அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து 

  • முன்னேறுங்கள்.


  • சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய 

  • நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்!


  • முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் 

  • நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். 


  • அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் 

  • சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி 

  • என்பனவாகும்.

No comments:

Post a Comment