.

Saturday, December 21, 2013

தேசியக்கூட்டாலோசனைக்குழு கூட்டம்



அகில இந்திய JCM  23/12/2013 அன்று டெல்லியில் கூடுகின்றது. 
முதன் முறையாக தேசியக்கூட்டாலோசனைக்குழு  கூட்டத்தில் பங்கேற்கும் நமது மாநிலச்செயலர் 
தோழர். பட்டாபி 
அவர்களை வாழ்த்துகிறோம் . 

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.

ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் 

  • RM, GRD பதவிகளில் STAGNATION  தேக்க நிலை தீர்த்தல் 
  • அனைவருக்கும்  போனஸ் வழங்குதல்
  • 78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.
  • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.
  • நான்கு கட்டப்பதவி உயர்வை முறைப்படுத்துதல்.
  • SC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.
  • LTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.
  • BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.
  • TM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.

நிர்வாகத்தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் 

  • மாநில,மாவட்ட மட்ட JCM குழு உருவாக்கத்தில்  உள்ள பிரச்சினைகள் தீர்த்தல்.
  • JCM  மாநில, மாவட்டக்குழு எண்ணிக்கையை முறைப்படுத்துதல்.
  • கருணை அடிப்படை வேலைக்குப்பதிலாக புதிய இழப்பீட்டு முறை உருவாக்குதல். 
  • BSNL நிறுவனத்தின் பணிக்கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.

No comments:

Post a Comment