.

Friday, July 11, 2014

வருமான வரி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதில் தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பு ரூ.50,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 60 வயதிற்கு குறைவான தனிநபர் ஒருவர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment