.

Tuesday, October 21, 2014

 தோழர்களே! தோழியர்களே!
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்தமாத சம்பளம் இன்று வரை  வழங்காமை கண்டித்து கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன் இன்று (21-10-2014) உண்ணாநோன்பு போராட்டம்  நடைபெற்றது.
NFTE மாவட்டத்தலைவர்  தோழர்.R.செல்வம்,
BSNLEU மாவட்டத்தலைவர்  தோழர்.A அண்ணாமலை
கூட்டுத்தலைமை ஏற்றனர்.
NFTE மாநிலதுணைத்தலைவர்தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார்.
NFTE மாவட்டச்செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.K.T.சம்பந்தம், உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தை விளக்கிப்பேசினர்.
NFTE சார்பில்தோழர்கள்.S.தமிழ்மணி, V.இளங்கோவன், D.ரவிச்சந்திரன்,  TMTCLU மாவட்டத்தலைவர்   M.S.குமார், TMTCLU மாவட்டச்செயலர் G.ரங்கராஜ், V.முத்துவேலு, 
BSNLEU சார்பில் தோழர்கள்.N.சுந்தரம், P​.சேகர், E.பாலு, மூர்த்தி,  TNTCWU மாவட்டசெயலர் M.பாரதிதாசன், முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பண்டிகைக்காலம் என்பதையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும்  தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) பந்தலுக்கு நேரடியாக வந்து இச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இதுபோன்ற நிகழ்வு பிற்காலங்களில் நடைபெறாது எனவும்  உத்திரவாதம் அளித்தார். மேலும் வரும் 23-10-2014 வியாழன் அன்று உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் என இருபகுதிகளாக பிரித்து  சுற்றியுள்ள ஊர்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். அவருடன் AGM(CFA), DE (VIG)  உடனிருந்தனர். அந்த அடிப்டையில் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
NFTE மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ் அவர்கள் தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி இப்பிரச்சனையை முதன்மை போதுமேலாளரிடம் கொண்டு சென்று இதனை முடித்து வைக்க பேருதவியாக இருந்தார்.                                                                                                                                      



No comments:

Post a Comment