.

Thursday, October 16, 2014

ஜபல்பூர் அகில இந்திய மாநாடு




மாநாட்டை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி!!!... அதனினும்      சுமார் 1500 கி.மீ பயணத்தை  பேருந்தில் மேற்கொள்ள நேர்ந்த போதும் ( பெரும் சிரமத்தை பொருட்படுத்தாமல்) கடலூர் தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தொழிற்சங்க வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

நெஞ்சு நிறை நன்றி தோழர்களே......


கடலூர் மாவட்டம் சார்பாக 76 சார்பாளர்கள் 32 பார்வையாளர்கள்
கலந்து கொண்டனர்.

ஒருமனதான நிர்வாகிகள் பட்டியலில் சம்மேளன செயலர்களாக  இடம் பெற்ற நமது மாவட்டதைச் சார்ந்த தோழர் G.ஜெயராமன் , கோவை தோழர் S.S.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நமது வாழ்த்துகள்..... புதுவை மாவட்டச் செயலர் தோழர் P. காமராஜ்  சிறப்பு அழைப்பாளராகத்  தேர்வு பெற்றுள்ளார். தோழரின் பணி சிறக்க வாழ்த்துகள்.....

மாநாட்டில் நமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களின் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாநாட்டு  நிகழ்வுகளை தினமும் தமிழக சார்பாளர்களுக்கு தமிழில் விளக்கவுரை ஆற்றியது தோழர்களுக்கு உதவியாக இருந்தது...


தோழியர் K.ஜோதி, (வருவாய் பிரிவு) P.கமலா  TM /CDL  M.வைரம் ஸ்ரீமுஷ்ணம், ஆகிய கடலூர் மாவட்ட பெண் சார்பாளர்களுக்கு நமது சிறப்பு வாழ்த்துகள்! . TMTCLU  மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் அவர்களும், TMTCLU மாநில உதவிச் செயலர்  A.சுப்ரமணியன் விழுப்புரம் அவர்களும் பங்கேற்றது குறித்து மாவட்ட சங்கம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது...

அகில இந்திய மாநாடு அமைதியான முறையில் நிறைவடைந்தாலும் சில கடலூர் தோழர்கள் நிதானமற்ற முறையில் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது 

                                                                                                    
மாநாட்டு நிகழ்வுகள், நிர்வாகிகள் பட்டியலை மாநில சங்க அறிக்கையில் காண்க.


                                                                                                  தோழமையுடன் 
                                                                                        இரா.ஸ்ரீதர்
                                                                                         NFTE-BSNL,CDL




No comments:

Post a Comment