.

Saturday, February 28, 2015

TMTCLU மாவட்ட செயற்குழு
தமிழ்மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் (TMTCLU) மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர்.M.S.குமார் தலைமையில் மாவட்ட சங்க அலுவலகத்தில் 27-02-2015 அன்று மாலை நடைபெற்றது
TMTCLU மாவட்ட அமைப்பு செயலர்

தோழர்.V.முத்துவேல் வரவேற்புரை நிகழ்த்த, தோழர்.V. கிருஷ்ணகுமார் அஞ்சலியுரை நிகழ்த்தினார். அமைப்பு நிலை,நிதிநிலை, தோழர்.பாலசுப்ரமணியன் குடும்பநல நிதி,
பிரச்சனைகளின் தீர்வும், போராட்ட திட்டமும் ஆய்படுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளத் தோழர்கள் பலர் கிளை வாரியாக தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

NFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்கள் ஆற்றிய துவக்கவுரையில்அமைப்பை பலமாக கட்டியிருக்கின்றோம். குறிப்பாக உளுந்தூர்பேட்டையும், பண்ருட்டி கிளைகளும் பாராட்டுக்குரியவைஎன்றார்.
TMTCLU மாவட்டசெயலர் தோழர்.ரங்கராஜ் தன்னுடைய அறிமுக உரையில் மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விளக்கினார். TMTCLU மாநில இணைப்பொதுச்செயலர் தோழர்.S.தமிழ்மணி தன்னுடைய அனுபவத்தை
பகிர்ந்துகொண்டு செயற்குழுவை வாழ்த்தினார். NFTE மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், TMTCLU மாநில உதவிச்செயலர் தோழர்.A.சுப்ரமணியன்
வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ் கலந்து கொண்டு செயற்குழுவை வாழ்த்தினார்.
AITUC மாநிலக்குழு உறுப்பினரும், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலருமான தோழர். K.வெங்கடேசன் NLC-யில் இது காறும் நடைபெற்ற
போராட்டங்கள், அதில் AITUC-யின் பங்கு, ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம், இன்று பணி நிரந்தரத்தின் துவக்கம், ஆகியவற்றினை எடுத்துரைத்தார்.
TMTCLU-யின் மாநிலப் பொதுச் செயலர் தோழர். R.செல்வம் அவர்கள் தமிழ் மாநிலத்தின்  ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை வாழ்த்தியும், மாவட்டசங்கத்திற்கு நன்றியையும் தன்னுடைய உரையில் வெளிப்படுத்தினார்.
மாவட்டத்தலைவர் தோழர்.M.S.குமார் அவர்களின் பணியை பாராட்டி பண்ருட்டி தோழர்கள் கைப்பேசி ஒன்றை பரிசளித்து சிறப்பு செய்தனர்

மாவட்டப்பொருளர்தோழர். S.அண்ணாதுரை நன்றியுரையுடன் செயற்குழு நிறைவுபெற்றது




No comments:

Post a Comment