.

722450

Thursday, October 27, 2016

ஒப்பந்த ஊழியர்களின் மாலை நேர தர்ணா

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்த ஷரத்தின்படி முறையான போனஸ் வழங்கிடக்கோரி NFTE/TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பில் கடலூர் GM அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் மாலைநேர தர்ணா போராட்டம் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் நடைபெற்றது. GM அலுவலகக் கிளை செயலர் தோழர் S.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். TMTCLU மாநிலப் பொருளரும், குடந்தை NFTE மாவட்ட செயலருமான தோழர். விஜய்ஆரோக்கியராஜ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் D.குழந்தைநாதன், V.முத்துவேலு, G.ரங்கராஜு, K.சீனிவாசன், A.சுப்ரமணியன், M.கணேசமூர்த்தி, D.ராஜா, மற்றும் மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மூத்தத் தோழர் S.தமிழ்மணி, மாநில பொதுசெயலர் தோழர் R.செல்வம், NFTE கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர்.சுரேஷ் நன்றியுரையுடன் தர்ணா நிறைவுற்றது. மாவட்ட முழுவதுமிருந்து கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.






   

No comments:

Post a Comment