.

Wednesday, May 24, 2017

பணி ஓய்வு பாராட்டு விழா
நமது பொது மேலாளர் அலுவலகத்தில்  பணி புரியும் தோழர் R.வெங்கோபன் AOS(G) இம்மாதம் (May-2017) பணி ஓய்வு பெறவுள்ளதையொட்டி நமது பொது மேலாளர் அலுவலக கிளை சார்பாக 23-05-2017 அன்று கிளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையாக  தோழர் A. சகாயசெல்வன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். வாழ்த்துரையாக தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர், V.இளங்கோவன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், மற்றும் மாவட்ட செயலர் (பொறுப்பு) D.குழந்தைநாதன், தோழர் N.அன்பழகன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், மாவட்ட பொருளாளர் தோழர் A.சாதிக் பாஷா, தோழியர் V.கீதா மாவட்ட துனைத் தலைவர், கடலூர் வெளிப்புறப் பகுதி செயலர் தோழர் E.விநாயக மூர்த்தி  அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
 தோழர் R.வெங்கோபன் அவர்களுக்கு தோழர் P.S மேனாள் மாவட்ட செயலர் நினைவு பரிசு வழங்க தோழர் S.ராஜேந்திரன் (கிளைச் செயலர் ) கதர் ஆடை அணிவித்தார்நிறைவாக  தோழர் இரா ஸ்ரீதர்  (மாவட்டச் செயலர்) சிறப்புரையாற்றினார். தோழர் P.ஜெயராஜ் நன்றி கூற விழா முடிவுற்றது.
விழாவிற்கு உணவு ஏற்பாடு செய்த தோழர் A.S குருபிரசாத், மற்றும் விழாவிற்கு TMTCLU மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார்  தலைமையில் உறுதுணையாக இருந்த TMTCLU தோழர்கள் S .கணபதி, M.சுரேஷ், M.மணிகண்டன், K.தீபன்ராஜ், மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் S.அண்ணாதுரை ஆகியோருக்கும்  நன்றி


No comments:

Post a Comment