.

Saturday, June 10, 2017


நமது BSNL நிறுவனத்தின்......!
பணத்தை...!   வீண் செலவு செய்வதைக் கண்டித்து...!

ஜூன் 12-ல் 
மாபெரும் 
கண்டன ஆர்ப்பாட்டம்

அருமைத் தோழர்களே...! தோழியர்களே...!! வணக்கம்.,
மத்தியில் ஆளும் பாஜக (BJP) அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி "SABKA SAATH SABKA VIKAS SAMMELAN" அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்ற முறையில் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்திட திட்டமிட்டு., கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறது. கூட்டங்கள் நடத்துவது அவர்களின் உரிமை என்ற அடிப்படையில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்தக் கூட்டங்களை BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் செலவில் நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவு எந்த வகையில் நியாயம்...!
எந்தவிதத்திலும்..., நியாயம் இல்லாத இம் முடிவை அப்படியே ஏற்று., BSNL கார்ப்பரேட் அலுவலகம்  24-05-2017 தேதியிட்ட CA/Mktg./33-1/2017 என்ற உத்திரவு எண் கொண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது.
இந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்:
மத்திய அரசின் மூன்றாண்டு கால நிறைவை ஒட்டி நாடு முழுவதும் "SABKA SAATH SABKA VIKAS SAMMELAN" அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்ற முறையில்          27-05-2017 முதல் 15-06-2017 வரை 583 இடங்களில் சாதனை விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.
     இந்த 583 இடங்களில் தமிழகத்தில் 5 இடங்கள் உள்ளிட்ட (கரூர், கிருஷ்ணகிரி, திருச்சி நகரம், திருச்சி ஊரகம் மற்றும் தேனி) 42 இடங்களில்., இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு BSNL-க்கு வழங்கப்பட்டுள்ளது.
   இதர 541 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான பொறுப்பை மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 42 இடங்களில் நடைபெறும் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்களுக்கு BSNL நிறுவனம் தான் செலவு செய்ய வேண்டும். BSNL நிறுவனம் 42 இடங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்றால் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்திட வேண்டும்.
மத்திய ஆட்சியாளர்களின் பொதுத்துறை விரோத மற்றும் தனியார் ஆதரவு கொள்கைகளின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக BSNL நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில்., ஊழியர் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்படுத்திய பல திட்டப் பணிகளின் காரணமாக BSNL நிறுவனம் லாபத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. BSNL-ன் நிதி நிலைமையை காரணம் காட்டி ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தர மறுக்கின்ற அரசாங்கம் இப்படிப்பட்ட செலவுகளை BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மேல் சுமத்துவது என்பது அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும்.
BSNL பணத்தில் இது போன்ற அரசின் சாதனை விளக்க கூட்டங்களை நடத்துவதை கண்டித்து அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக 12-06-2017 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
போராட்டவாழ்த்துக்களுடன்...!
தோழமையுள்ள...!
மாவட்ட செயலர்கள்
BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, TEPU, SEWA,  PEWA
கடலூர் மாவட்ட சங்கங்கள்


No comments:

Post a Comment