.

Wednesday, July 26, 2017

        25.7.2017 இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விதி விலக்குக் கோரியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதக்களுக்கும் ஒப்புதல் அளித்திட வலியுறுத்தியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று கடலூரில் AITUC மாவட்ட துணைச்செயலர் தோழர் குளோப் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைது ஆகியுள்ளனர்.
      நமது TMTCLU மாநில இணைப்பொதுச்செயலர் தோழர் S.தமிழ்மணி மறியலில் பங்கேற்று கைதாகியுள்ளார்.
         கடலூர் தோழர்கள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டு பின்னர் கைதாகி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தோழர்களை வாழ்த்திப்பேசினர்.


No comments:

Post a Comment