.

Saturday, May 12, 2018


சீர்மிகு சிதம்பரம் மாநாடு   (பகுதி 1)



            NFTE கடலூர் மாவட்டச் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு கோயில் நகரமாகக் கொண்டாடப்படும் சிதம்பரம் நகரில் 2018 மே மாதம் 8-ம் நாள் மிக்கச் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றதுமாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம் அவர்கள் தலைமையேற்றார்கள்.

          வண்டிகேட், சென்னை சாலையில் அமைந்துள்ள சிவம் மஹாலில் காலை 8-30 மணிக்கே பெரும்பான்மைத் தோழர்கள் திரண்டு விட்டார்கள்அண்ணாச்சி D.ரங்கநாதன் பெயரில் நுழைவு வாயில், அருகே பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள், தொலைபேசி நிலையத்திலிருந்து வழிநெடுக பட்டொளிவீசிப் பறந்து வரவேற்றன, கொடிகள்.

          மண்டபத்தின் முகப்பில் அமைந்த திடலில் நெடிதுயர்ந்த கொடி மரங்கள்கூடியிருந்த தோழர்கள் முழக்கமிடத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புச் செய்தார், வரவற்புக்குழுத் தலைவர் திருமிகு R.கேதார்நாதன் (நிர்வாகப் பங்குதாரர், சாரதாராம் நிறுவனங்கள், சிதம்பரம்.) மூத்தத் தோழர் S. தமிழ்மணி சம்மேளனக்கொடியை ஏற்றி வைத்தார்கடலூர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் தேசப் பற்றையும் சமூக அக்கறையோடு கூடிய சங்கப்பற்றையும் எதிரொலித்தன.

          கீழ்த்தளத்தில் விருந்தோம்பல் கூடம், மறைந்த சிதம்பரம் தோழர் P.கன்னையன் அவர்கள் பெயரால் அமைந்திருந்ததுபடியேறி முதல் தளம் செல்ல, அண்ணாச்சி D. ரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது, மலர் தூவி அஞ்சலி செலுத்த.

          விசாலமான, அலங்கார விளக்குகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம்மேடையில் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் நமக்கெல்லாம் மார்க்ஸிய ஞானத் தந்தையுமான D.ஞானையா அவர்களின் திருஉருவங்களைத் தாங்கி மாநாட்டின் திசைவழிக்கு ஒளிகாட்டிக் கொண்டிருந்தனஅரங்கம்மார்க்ஸிய ஞானத் தந்தை D.ஞானையா அரங்கம்என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததுஅது மட்டுமல்லாது, நமது  துறை - நமது இயக்கம் இன்றைக்கு எதிர்கொள்ளும் செல் கோபுர துணை நிறுவன அமைப்புக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப்படுத்துவதாய், தில்லை நடராசர் பொற்கோயிலும் அதனருகே உயர்ந்ததொரு செல் கோபுரமும் சித்தரிக்கப்பட்டு அதன் மீது ” எங்கள்ஆலயம் — எங்கள் BSNL ” ஒன்றிணைந்து போராடுவோம்!! பாதுகாப்போம்!என்று பொறிக்கப்பட்டிருந்தது.



      மாநாட்டின் குறிப்பிடத் தகுந்த சிறப்பு அம்சம் பெரும்பான்மைத் தோழர்களும் தோழியர்களும் தாமதமின்றி வந்ததும், காலை 9 மணிக்கே கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கியதும் ஆகும்.  ’நல்ல துவக்கம், வெற்றியில் செம்பாதிஎன்ற  ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, மாநாடு சீரோடு துவங்கியது. அடுத்து குறிப்பிட வேண்டியது, 369 உறுப்பினர்களில் 304 பேர் மாநாட்டுப் பிரதிநிதிகளாக ரூபாய் 400/- செலுத்தி பதிவு செய்து கொண்டதுஇதில் மாவட்டத் தலைவர். செயலர் உட்பட யாருக்கும் விதிவிலக்குப் பெறவில்லை என்பதுஅது தவிர TMTCLU சங்கத்தைச் சேர்ந்த 76 பேர் உட்பட நூற்றுக் கணக்கில் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்ஓய்வு பெற்றத் தோழர் H. இஸ்மாயில் மரைக்காயர் அவர்களை வரவேற்புக்குழுப் பொதுச் செயலராகச் செயல்பட்ட வரவேற்புக்குழுத் தோழர்கள் ஒவ்வொருவரும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றியதும் உணவின் சுவையின் சிறப்பும் விருந்தோம்பலும் தனியே பாராட்டப்பட வேண்டியவையாகும். வரவேற்பு குழுவின் சார்பாக அதன்  பொதுச்செயலர் தோழர் H.இஸ்மாயில் மரைக்காயர் அவர்களும்,   மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன் மாநாட்டிற்கு வருகை புரிந்த ஒவ்வொருவரின்  சிறப்புகளைக் கூறி வரவேற்ற விதம் அனைவரையும் கவர்ந்தது.


        
  தோழர் R.செல்வம் மாநாட்டுத் தலைமையுரை ஆற்ற,  தோழர் P. அழகிரி அஞ்சலி உரையாற்றினார்வரவேற்புக்குழுத் தலைவர் திருமிகு R.கேதார்நாதன் (நிர்வாகப் பங்குதாரர், சாரதாராம் நிறுவனங்கள், சிதம்பரம்.) தமது வரவேற்புரையில் பிரம்மாண்டமாய் கூடியிருக்கும் தோழர்களின் கட்டுப்பாட்டையும் சரியான நேரத்தில் கொடியேற்றம் துவங்கியதையும் வியந்து பாராட்டி, தன்னால் சிறிது காலதாமதம் ஏற்பட்டதைப் பொறுத்தருள வேண்டி மாநாட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

          மாநிலச் செயலாளர் தோழர் K. நடராஜன் சிறப்பான துவக்கவுரையாற்றினார்அவர் தமது உரையில், “ நேற்று மாலை சிறப்பாக மாவட்டச் செயற்குழு நடைபெற்றதுகடந்த ஐந்து ஆண்டுகளுக்கான செயல்பாட்டறிக்கை ஒரு நெடிய டாக்குமெண்டரி போல மிகச் சிறப்பாக அச்சடித்து வழங்கப்பட்டுள்ளதுநன்கொடை அளித்த தோழர்களுக்கும் கிளைகளுக்கும் நன்றிநேற்று காரில் வரும்போது ஒரு சம்பவம்மிக நெருக்கமாகப் பார்க்கிங் செய்யப்பட்ட காரை வெளியே எடுக்க டிரைவர் ஒரு எதார்த்தமான யோசனை கூறினார். டயரின் பிரஷரை சற்றுக் குறைத்தால் சுலபமாக காரை வெளியே எடுக்கலாம் என்பதுதான் அந்த யோசனை. யோசித்துப் பார்த்தால், நமது இயக்கத்திற்கும் ஏன் வீட்டிற்கும் கூட அது பொருந்தும்பிரஷரைக் குறைப்போம்மாநாட்டிலிருந்து ஒற்றுமையாகக் கலைவோம், அடுத்தச் சரிபார்ப்புத் தேர்தலில் தமிழகத்தில் இந்தியாவில் வெல்வோம் என்பதுதான் மாநாட்டுத் துவக்க உரையாக நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

          பெரும்பான்மையோருக்கு இது கடைசி ஊதிய மாற்றமாக இருக்கக் கூடும்ஒரு தேக்கம் நீடித்ததுடெல்லியில் போலீஸ் தடையை மீறி நமது பேரணிதான் தேக்கத்தை உடைத்து DOT அதிகாரியின் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தது. ஒரு பேரணியால் இதைச் செய்ய முடியும் என்றால் எதிர்வரும் போராட்டங்களில் நமது ஒவ்வொருவரின் பங்கேற்பு சிச்சயம் சாதிக்கும்.
          JIO வந்தபோது இனி BSNL இல்லை என்றார்கள்ஆனால் மாறாக நாம் எழுந்து நின்றோம், ஏர்செல் சந்தாதாரர்களை வரவேற்றோம்கடந்த இரண்டு மாதங்களில் 13 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறோம்சென்ற முறை வேலூர் மாவட்டத்தைத் தத்தெடுத்தது போல இம்முறை உங்கள் கடலூர் மாவட்டத்தைத் தத்தெடுத்தோம்எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை..  மேளாக்களில் உங்களது ஒத்துழைப்புக்கு நன்றிஎன்ற மாநிலச் செயலாளர், அட்ஹாக் போனஸ் பெற்றது, பென்ஷன் ஃபண்டு மற்றும் டவர் கார்பரேஷன் பற்றியும் குறிப்பிட்டு, மாநாட்டின் நிறைவாய் தமிழகத்திற்கு நீங்கள் வழங்கும் செய்தி ஒற்றுமையாக இருக்கட்டும் என்று கூறி தமது துவக்கவுரையை  நிறைவு செய்தார்.

 பின்னர், மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் அறிமுக உரையாற்றியபோது, ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விவரங்களைச் சுட்டிக் காட்டினார். அழைப்பிதழின் பின்புலமாக சிதம்பரம் ஆலயம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மற்றும் நெய்வேலி ஆலை என்பவை பொறிக்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, நமது உறுப்பினர் எண்ணிக்கை சதவீதத்தில் மாற்றம் இல்லை என்பதை வலியுறுத்தினார்.

அகில இந்தியத் துணைத் தலைவர் தோழர்                  S. பழனியப்பன் தமது சிறப்புரையில் கடலூர் மாவட்டம் முதிர்ச்சி பெற்ற மாவட்டம், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்து வருவதாகும் எனப் பாராட்டியதுடன், தமது திருமணம் தோழர் ரகு அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது என்பதைக் குறிப்பிட்டு கடலூர் மாவட்டத்தோடு தமக்குள்ள தொடர்பைக் கூறி நெகிழ்தார்.

         பின்னர், AITUC மாவட்ட உதவிச் செயலர் தோழர்V.குளோப் பல தொழிற்சங்க அனுபவங்களையும் தற்கால நிலைமைகளையும் எடுத்துக் கூறி வாழ்த்தினார்.

          மேனாள் சம்மேளனச் செயலர் தோழர் G. ஜெயராமன் தம் சிறப்புரையில் குறிப்பிட்டதாவது: அன்புத் தோழர்களே மனப்பூர்வமான வாழ்த்துகள்ஒருவரே அனைத்து விஷயங்களையும் பேசுவது காலத்தை விரையம் செய்வதுதோழர் குளோப் இன்னும் சற்றுக் கூடுதலாக அரசியல் பேசுவார் என எதிர்பார்த்தேன்இன்றைய இந்திய அரசியல் திசைவழி திக்குத் தடுமாறுகிறதுஆரோக்கியமாக இல்லை, மாறாக மத்திய ஆட்சி வக்ரமாக உள்ளதுஇந்திய மூலதனம் சிலர் கையில் குவிந்து கிடக்க பெரும்பாலோர் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. யாரை மையப்படுத்தி போராட வேண்டும் என்பதுதான் நமது மையக் கவலையாக இருக்க வேண்டும்தொழிற்சங்கத்தில் ஆதிக்கம் பெறுவது என்பது ஊறுகாய் போலஆனால் நம்முடைய முக்கிய உணவு, பெருந்திரள் மக்களின் பிரச்சனைகளில் தீர்வு காணப் போராடுவதாகும்இன்றைக்குத் தொழில் நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை பிரச்சனையாகி உள்ளதுதொழிலாளர்கள் இடமற்ற அனாதைகள் ஆகிவிடக் கூடாதுநமக்குள் உள்ள பிரச்சனைகள் கொசுக்கடி போலமாநாட்டின் நடைமுறை எனக்குத் திருப்திகரமாக உள்ளதுநமது உழைப்பு வீணாகி விடக்கூடாது என்ற கவலை என்றைக்கும் எனக்கு உண்டு.

          ஸ்ரீதர் தொட்டுக் காட்டினார்நடராஜரின் உருவம் ஒரு மனிதனின் இயக்க அமைப்பாக எனக்குத் தோன்றுகிறதுஅது நமது சிதம்பரம் மண்ணின் சாராம்சம்தலித், மீனவர், குயவர், வேளாண்மை என அனைத்து குலத் தொழில்களையும் செய்த நாயன்மார்களைப் பற்றிப் பேசுகிறது, பெரிய புராணம்

          ’என் அம்மாவுக்கு என்று விடுதலைஎன்று நான் எழுதிய ஒரு கவிதைதான் மிகுந்த விமர்சனத்துக்கும் உள்ளானது, பாராட்டுதல்களையும் பெற்றதுவாய்ப்பு கிடைத்தால், தில்லைக் காளி கோயிலுக்குப் போங்கள்நான் அடிக்கடி போவேன், வணங்குவதற்காக அல்லஅவமதிக்கப்பட்ட போது சீற்றெழுந்த பெண்ணியல் தத்துவமே தில்லைக் காளி.

          தோழர் ரங்கநாதன் முன்னுதாரணத் தலைவர்எனக்குச் சர்வாம்சத்தையும் கற்றுத் தந்தவர், ரங்கநாதன். ரகுவிடம் கற்றுக் கொண்ட அறிவு வேறு, ரங்கநாதனிடம் கற்றுக் கொண்ட ஞானம் வேறுஎன்பெயரில் / ஸ்ரீதர் பெயரில் கோபம் இருந்தால் விட்டுவிடுங்கள். இது ரங்கநாதன் பெயரில் நடைபெறுகின்ற மாநாடுவெற்றிகரமாக ஒற்றுமையாக நடக்க வேண்டும். அது புதிய மகிழ்ச்சியைக் கொடுக்கும்மாநாடு வெல்லட்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.

         பின்னர், குடந்தை மாவட்டச் செயலர் தோழர் M. விஜய் ஆரோக்கியராஜ் வாழ்த்துரை வழங்கினார்.  அவர் தமது வாழ்த்துரையில்மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தோழர் ஸ்ரீதர் மிக நேர்த்தியாக மேற்கொண்டுள்ளார் என்பது செயல்பாட்டறிக்கை மற்றும் அழைப்பிதழைப் பார்த்தாலே தெரியும்வாட்ஸ்-அப், பேஸ் புக் என அவர் அழைப்பிதழ் அனுப்பி வைக்காதது தோழர் குப்தாவிற்கும், ஜெகனுக்கும் தான். ஒரு நீர்வீழ்ச்சியைப் போல தொடர்ச்சியாகத் தலைவர்களைக் கொண்டுள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம். போட்டி போட்டு பொறுப்பேற்கத் தோழர்கள் வருகிறார்கள்.  Dissent is the essence of Democracy என்பார்கள்.
          ஆனால் தமிழகத்தின் சூழல் எவ்வாறு உள்ளதுவரும் வழியில் நான் பார்த்தேன், போராட்டத்திற்கு முன்பே ஜாக்டோஜியோ தோழர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்கிறார்கள்இனி சென்னைக்கு வருவதாயிருந்தால் சரவணா ஸ்டோருக்கு பொருள் வாங்குவதாய் இருந்தால் மட்டுமே வரலாம் என்பார்கள் போலிக்கிறதுஅவர்கள் புதிய பென்ஷன் திட்டம் மோசம், பழைய திட்டத்தை மீண்டும் கொண்டு வா என்கிறார்கள்தோழர் குப்தாவின் பெருமை இப்போது புரிகிறதுவிசாலப் பார்வையே இன்றைய தேவைநீட் முதலிய எதைப் பற்றியும் கருத்துச் சொல்ல முடியாதகருத்து உரிமை மறுப்பு’  தமிழகத்தில் வரத் தொடங்கி உள்ளது. உதாரணம் சொல்வதென்றால், ஆசாராம் சாமியார் குறித்து நான் விமர்சனம் செய்து பதிவிட்டால், எனது விமர்சனம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எனது பெயரில் உள்ள ஆரோக்கியராஜ் என்ற கிருஸ்வதுப் பெயர் ஒட்டு எதிர்வினைக்கு உள்ளாகிறதுநமது பகுதியிலும் செல் கோபுர துணை நிறுவனம் அமைக்கப்படுவதற்கு எதிராக நாமும் போராட்டக் களத்தில் உள்ளோம்என்று குறிப்பிட்டார். அடுத்து TMTCLU மாவட்டச் செயலர் தோழர் A.S.குருபிரசாத் வாழ்த்துரை வழங்கினார்.
          அடுத்த பதிவு மாநாட்டு பிற நிகழ்வுகளும் மிகச் சிறப்பான நமது கருத்தரங்கம் பற்றியும் விவரிக்கப்படும்.   
  

No comments:

Post a Comment