.

Thursday, May 31, 2018

+2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தோழர் சிரில் நினவு அறக்கட்டளை கூட்டம் அதன் தலைவர் தோழர் க.சீனிவாசன் அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிரில் அறக்கட்டளை செயலர் தோழர் வீ.லோகநாதன், அறக்கட்டளை உறுப்பினர்கள் தோழர்கள் இரா.ஸ்ரீதர், A.C.முகுந்தன், R.செல்வம்-II,தோழியர் C.சுசரிதா OS/CDL ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் தோழர் G.கணேசன், மேனாள் மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,தோழர் சிரில் நினவு அறக்கட்டளை சார்பில் 10-வது மற்றும் +2 தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் BSNL ஊழியர்களின் மாணவச் செல்வங்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வினை  இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 15-06-2018 அன்று விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.
நிதி சம்மந்தமாக மாவட்ட மாநாட்டின் முடிவின்படி மாவட்டச் செயலரும்,சிரில் அறக்கட்டளையின் உறுப்பினர் தோழர் இரா.ஸ்ரீதர், தோழர் P.சுந்தரமூர்த்தியிடம் மாநில  உதவிச் செயலர் வங்கிக்கணக்கை மாற்றுவது குறித்து கலந்து பேசுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.



No comments:

Post a Comment