.

Tuesday, January 29, 2019




ஜார்ஜ் பெர்ணாண்டஸ்
( மேனாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் )

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். ரயில்வே ஊழியராக இருந்த இவர் தொழிற்சங்கம் மூலம் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். எமர்ஜென்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களிலும் பங்கேற்றுஅதன் பின்னர் நேரடி அரசியலில் குதித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து முதன் முறையாக 1977-ம் ஆண்டில் எம்.பியாக தேர்வானார். பின்னர், 1989 முதல் 1990 வரை நடந்த ஐக்கிய ஜனதா ஆட்சியில் ரயில்வே அமைச்சாராக பெர்னாண்டஸ் பணியாற்றியுள்ளார்.
2000-ம் ஆண்டு மத்தியில் அமைந்த பாஜக தலைமையிலான கூட்டணி   அரசில் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். 2004-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற அவர் டெல்லியில் வசித்து வந்தார்.
அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் தனது 88 வயதில் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment