.

Thursday, January 31, 2019

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு...
DOT கூடுதல் செயலர் சந்திப்பு...

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள்., DOT கூடுதல் செயலர் திரு. அன்ஷு பிரகாஷ் அவர்களை 30-01-2019 இன்று சந்தித்தனர். 
இன்றைய கூட்டத்தில்...
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக., தோழர். C.சந்தேஷ்வர் சிங் NFTE., தோழர். P.அபிமன்யூ BSNLEU., தோழர். K.செபாஸ்டின் SNEA., தோழர். பிரகலாத்ராய் AIBSNLEA ஆகியோரும்.,
DOT தரப்பிலிருந்து., திரு. R.K.காண்டேல் வால் Jt.Secretary (Admn)., திரு. S.K.ஜெய்ன் DDG (Estt)., திரு. ராஜீவ் குமார் DDG (Budget) ஆகியோரும்.,
BSNL தரப்பிலிருந்து., திருமதி. T.சுஜாதா ராய் Director (HR)., திரு. A.M.குப்தா GM (SR) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில்., 3-வது ஊதிய மாற்றம்., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு., வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகிய கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 3-வது ஊதிய மாற்றத்தைப் பொறுத்த மட்டில் DOT தரப்பிலிருந்து 5% ஊதிய நிர்ணயத்தை வழங்க தயாராக உள்ளதாகவும்., AUAB தலைவர்கள் இதனை ஏற்றுக் கொண்டால் 05-02-2019 அன்று நடைபெற உள்ள டிஜிட்டல் டெலிகாம் கமிஷன் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு அதன் பிறகு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
கூட்டமைப்பின் தலைவர்கள் 5% பிட்மன்ட் என்பது மிகவுக் குறைவானது எனக் கூறி அதனை ஏற்க மறுத்தனர். அதன் பின் DOT-யின் கூடுதல் செயலர் இது குறித்து CMD BSNL அவர்களுடன் விவாதித்த பின் ஒரிரு நாளில் தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறு ஆலோசனை கூறினார். 

கடந்த முறை DOT கூடுதல் செயலருடன் நடைபெற்ற கூட்டத்தில் 0% பிட்மன்ட் தான் தர முடியும் என DOT தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது தோழர்களுக்கு நினைவிருக்கலாம். 

தோழர்களே நம்பிக்கையோடு காத்திருப்போம்...
போராட்ட களமும் நம்மை 
எதிர் கொண்டு காத்திருக்கிறது...

No comments:

Post a Comment