.

Thursday, October 3, 2019



இன்றைய தகவல்
(03.10.2019)

தோழர்களே!...
        நமது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைப்பது மற்றும் சில ஒப்பந்த ஊழியர்களை  வேலையை விட்டு நீக்குவது  உள்ளிட்ட  பிரச்சனை சம்மந்தமாக பொது மேலாளரை இன்று (03.10.2019) 12:00 மணியளவில்   சந்தித்து பேச்சு வார்த்தை  நடத்தினார்கள்.
       பேச்சுவார்த்தையில் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்திலிருந்து மறு உத்தரவு வரும் வரையில் எந்த ஒப்பந்த தொழிலாளர்களையும்  நீக்கமாட்டோம் என்று   உறுதியளித்துள்ளார். மற்றும் அப்படி ஏதேனும்  மாறுதல் இருந்தால் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நட்த்தி அதன் மூலம் செயல்படுத்துவோம் என நமது பொது மேலாளர் அவர்கள் நமது சங்க  நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
       எனவே இப்போது  இந்த பணி நேர குறைப்பு மற்றும்  சில தொலைபேசி நிலையங்களில் ஆட்களை நீக்குவது  நிறுத்தப்பட்டுள்ளது.

       பேச்சுவார்த்தைக்கு நமது மாவட்டச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் ,  மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம்  மற்றும் மாவட்டப் பொருளாளர் தோழர் A.S.குருபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்....

No comments:

Post a Comment