.

Saturday, April 18, 2020

காலத்தி    னாற்செய்த  நன்றி  சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – குறள்102.



            நாடு முழுவதும் மக்கள் கொரோனா தாக்குதலில் இருந்து மீள முடியாத துயரத்தில் இருக்கும் போது  தம் வாழ்வாதாரத்தினை இழந்து  கடந்த 8 மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணிபுரிந்து கொண்டிருக்கும் நமது ஒப்பந்த ஊழியர்களை சக மனிதனாக நினைத்து, அவர்களின் துயர் துடைத்திட  கடலூர் கோட்டத்திற்குட்பட்ட தொலைபேசி நிலையங்கள், பொது மேலாளர் அலுவலகம், TRA வருவாய் பிரிவு ஆகிய பகுதிகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும்  தலா 10கிலோ அரிசி,  81 தோழர்களுக்கு பெரும் உதவியினை உடனடியாக செய்து கொடுத்து பெரும் பங்காற்றிய  மதிப்பிற்குரிய திரு P.செந்தில்குமரன் SDE (IT) VRS அவர்களை மனதார பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம்.
       இந்த  துயர் துடைக்கும்  சீரிய மகத்தான பணியினை  நமது மாவட்ட சங்கமே முன் நின்று செயல்படுத்திட வேண்டுகோள் விடுத்தார்.  அந்த வேண்டுகோளுக்கிணங்க நமது மாவட்ட செயலர் தலைமையில் முன்னின்று சங்க வேற்பாடின்றி அனைத்து  தோழர்களுக்கும் 18.04.2020 இன்று வழங்கினோம்.... இச்செயலுக்கு உறுதுணையாக நின்ற நமது தோழர்களுக்கு   மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த பாராட்டுகள்.
மனிதம் காத்திடுவோம்,,,, மனம் நிறைவடைவோம்...

தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்,

NFTE, கடலூர்.






No comments:

Post a Comment